உத்திராடம் 2,3,4 ம் பாதம், திருவோணம், அவிட்டம்1,2 ம் பாதம்
உழைப்பே உயர்வு தரும் என்பதை உணர்ந்து செயல்படும் மகர ராசி அன்பர்களே, இந்த வருடம் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களும் உண்டாகும். குரு பகவான் 5 ல் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த தடைகள் பிரச்னைகள் நீங்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். தெய்வம் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்தால் ஆதாயம் உண்டு. திருமணம் குழந்தை பாக்கியம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ஷேர் மார்க்கெட்டில் லாபம் அதிகரிக்கும். சனிபகவான் 2 ல் ஏழரைச்சனியின் கடைசி பகுதியாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எதிர்மறை சிந்தனை தவிர்த்து நேர்மறை சிந்தனை வளர்த்துக் கொள்வது நல்லது. எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம்.ராகு கேது பகவான் முறையே 3, 9 ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எதையும் வெல்லக்கூடிய ஆற்றல் உருவாகும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். ஆடை ஆபரணம் சேரும். தந்தை உடல் நலனில் கவனம் தேவை. பிதுர்வழி சொத்து பிரச்னைகள் உருவாகும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் சிக்கல்கள் வந்து நீங்கும்.வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் புதிய முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவர். உத்யோகத்தில் இதுவரை இருந்த தடைகள் பிரச்னைகள் நீங்கும். பதவி உயர்வு ஊதி உயர்வு தேடி வரும். பணியில் திருப்தி உண்டாகும். கலைத்துறையினர் தற்போதுள்ள வாய்ப்புகளால் பிரபலம் அடைவர். மாணவர்கள் கல்வியில் மேன்மை பெறுவர். நினைவாற்றல் அதிகரிக்கும். விளையாட்டுத்துறையிலும் சாதிப்பார்கள்.அரசியல்வாதிகளுக்கு தலைமை உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்.
பரிகாரம்:திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை செவ்வாய்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.