(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)
குடும்பம்: சுக்கிரன், சனி, செவ்வாய், கேது ஆகிய நான்கு கிரகங்களும் உங்களுக்குச் சாதகமாக சஞ்சரிக்கும் நிலையில், இத்தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது! சித்திரை 18-ம் தேதி (1-5-2024) அன்று குரு பகவானும், உங்களுக்கு அனுகூலமாக மாறுகிறார்! இப்புத்தாண்டு முழுவதும் வருமானம் ஒரே சீராக இருக்கும். செலவுகள் கட்டுக் கடங்கியே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் பெருகும். வரும் ஒரு வருட காலத்தில், நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளும் நிகழும். பல பெண்களுக்குக் கருத்தரிக்கும் யோகமும் அமைந்துள்ளது. ஐப்பசி 18-ம் தேதியிலிருந்து, கார்த்திகை 9-ம் தேதி வரை ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவேண்டுமென கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. திருமண முயற்சிகள் கைகூடும். சித்திரை மாதம் 7-ம் தேதியிலிருந்து, ஆவணி 9-ம் தேதி வரை திருமண முயற்சிகளுக்கு மிகவும் ஏற்ற காலகட்டமாகும். ஜனன கால கிரகநிலைகளின்படி, சிலருக்கு சொந்த வீடு அமையும் யோகமும் உள்ளது! வாய்ப்பைத் தவற விடாதீர்கள்!! இந்த ஆண்டு முழுவதும், ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.
உத்தியோகம்: லாப ஸ்தானத்தில், சனி பகவானும், தன ஸ்தானத்தில் குரு பகவானும் சுப பலம் பெற்றுத் திகழ்வதால், அனைத்து உத்தியோகஸ்தர்களுக்கும் பல நன்மைகள் காத்துள்ளன, இப்புத்தாண்டில்! அலுவலகச் சூழ்நிலை, மகிழ்ச்சியை அளிக்கும். சகக் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு, பணிகளில் உற்சாகத்தை ஏற்படுத்தும். மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். விரய ஸ்தானத்தில், ராகு நிற்பதால், கடின உழைப்பும், மேலதிகாரிகளின் கண்டிப்பும் கவலையை அளிக்கும். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் மேஷ ராசி அன்பர்களுக்கு, மனத்திற்குப் பிடித்த வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று பணியாற்றும் யோகமும் பலருக்கு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
தொழில், வியாபாரம்: மிகவும் அனுகூலமானதும், லாபத்தைப் பெற்றுக் கொடுக்கக்கூடியதுமான, இந்தக் குரோதி தமிழ்ப்புத்தாண்டு!! லாபம் ஒரே சீராக இருக்கும். பணப் பிரச்னை இருப்பதற்குச் சாத்தியக்கூறு இல்லை. ஆகஸ்ட் 18-ம் தேதியிலிருந்து, நவம்பர் 2-ம் தேதி வரை சகக் கூட்டாளிகளுடன் கருத்து வேற்றுமை ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. இக்காலகட்டத்தில், அனைவருடனும் அனுசரித்தும், விட்டுக்கொடுத்தும் நடந்துகொள்வது மிகவும் அவசியமாகும். சில தருணங்களில், நிதி நிறுவனங்களுடன் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலிருந்து, வரவேண்டிய பாக்கிகள் அதிகரிக்கும். முன்பணமின்றி, சரக்குகள் அனுப்புவதை இக்காலகட்டத்தில் கண்டிப்பாகக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்பதை கிரக நிலைகள், குறிப்பிட்டு எச்சரிக்கை செய்கின்றன. கூடியவரையில், புதிய முதலீடுகளையும், வியாபார விஸ்தரிப்புத் திட்டங்களையும் ஒத்திப்போடவேண்டிவரும்
கலைத் துறையினர்: ஆடி மாதம் 3-ம் வாரம் வரை, அனுகூலமான காலகட்டமாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வருமானம் உயரும். வசதிகள் பெருகும். திரைப்படத் துைறயினருக்கு, லாபகரமான நேரமிது! தயாரிப்பாளர்கள், புதிய படங்களைத் தயாரிப்பதில், மனத்தைச் ெசலுத்தலாம். வங்கிகளின் உதவி எளிதில் கிட்டும். அரசியல் தொடர்புகள், தக்க தருணத்தில், உதவும். ஜனன கால ஜாதகத்தில், சுக்கிரன், ராகு, செவ்வாய் ஆகிய மூவரும் சுப பலம் பெற்றிருப்பின், தீவிர அரசியலில் ஈடுபடலாம்.
அரசியல்துறையினர்: வரும் ஒரு வருடக் காலத்திற்கு, சுக்கிரன் மிகவும் அனுகூலமாக மாறுகிறார். அரசியல் துறை, சுக்கிரன் மற்றும் செவ்வாய், சனி ஆகிய மூவரின் அதிகாரத்தில்தான் உள்ளது! இம்மூவருமே சுப பலம் பெற்றுத் திகழ்கின்றனர். உங்களுக்கு இது ஓர் அரிய சந்தர்ப்பம்!! கிரக நிலைகளின்படி, மேலிடத் தலைவர்கள் உங்கள் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டுள்ளனர். ஜனன கால கிரக நிலைகளும், தற்கால தசா, புக்திகளும் அனுகூலமாக இருப்பின், தேர்தலில் வெற்றி பெறுவதுடன், அரசாங்கப் பதவியொன்றில் அமர்வதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன.
மாணவ – மாணவியர்: வைகாசி 11-ம் தேதியிலிருந்து, வித்யாகாரகரான புதன், உங்களுக்கு அனுகூலமாக வலம் வருகிறார். பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். படித்தவற்றை, தேர்வுகளில் நன்கு எழுதும் திறன் அதிகரிக்கும், நினைவாற்றல் மேலிடும். ஐப்பசி மாதத்தின் மூன்றாம் வாரத்திலிருந்து, உயர் கல்விக்கு நீங்கள் எதிர்பார்த்த உதவி கிட்டும்.
விவசாயத் துறையினர்: ஆவணி 10-ம் தேதியிலிருந்து, விவசாயத் துறைக்கு ஆதிபத்தியம் கொண்ட செவ்வாய், சுப பலம் பெறுவதால், நல்ல விளைச்சலும், வருமானமும் கிைடக்கும். மனதில் மகிழ்ச்சி மேலிடும். சந்தை நிலவரமும் உங்களுக்குச் சாதகமாக துணை நிற்கிறது. உங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைத்து, நிம்மதி பெறவேண்டிய நேரமிது!
பெண்மணிகள்: இவ்வருடம் முழுவதும், உங்களுக்கு நன்மை செய்யும் கிரகங்களே, மற்ற கிரகங்களைவிட, அதிக சுப பலம் பெற்று வலம் வருகின்றன. குடும்பச் சூழ்நிலை மன நிறைவையளிக்கும். கணவர் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் பாசம் மன நெகிழ்வை ஏற்படுத்தும். வேலை பார்க்கும் பெண்மணிகளுக்கு, முன்னேற்றமான ஆண்டாகும், இந்தக் குரோதி தமிழ்ப் புத்தாண்டு!
அறிவுரை: சிக்கனமாகச் செலவு செய்து, எதிர்காலத்திற்கென்று சேமித்து வைத்துக்கொள்ள மிகவும் அனுகூலமான மாதமிது. இன்றைய சேமிப்பு நாளை துணை நிற்கும்!!
பரிகாரம்: ராகுவிற்குப் பரிகாரம் செய்வது, நன்மை செய்யும். சனிக்கிழமைதோறும் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் தீபத்தில் சிறிது எள் எண்ணெய் சேர்த்து வந்தால் போதும். பலன் கை ேமல் கிட்டும். அனுபவத்தில் காணலாம் இதை!