2.5.2024 முதல் 8.5.2024 வரை
சாதகங்கள்: ராசிநாதன் எங்கே இருந்தாலும், ராசிக்கு ஏதோ ஒரு வகையில் கஷ்டங்களைக் குறைத்து நன்மையை அதிகரிப்பார். அந்த வகையில் ரிஷபத்தில் உள்ள குரு உங்கள் தனஸ்தானத்தையும் விரயஸ்தானத்தையும் தொழில் ஸ்தானத்தையும் பார்வையிடுவதால் அந்த ஸ்தானங்கள் பலம் பெறும். தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். அதற்கு உறுதுணையாக உப ஜெயஸ்தானத்தில் ஜீவன காரகன் சனி ஆட்சி பெற்று இருக்கிறார். ஐந்தாம் இடத்தில் உங்கள் லாபாதிபதி சுக்கிரன் இருப்பதால், கணவன் – மனைவி கருத்து வேற்றுமைகள் மறையும். குடும்பத்தில் அமைதி நிலவுவதால், எதையும் ஆற்றலோடு செய்வீர்கள். களத்திர ஸ்தான அதிபதி புதன் நீச நிலை நீங்கி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நுழைவது நல்ல அமைப்பு. ஆரோக்கியமான இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கவனம்தேவை: நான்காம் இடத்தில் ராகு இருப்பதாலும் செவ்வாய் இணைந்து இருப்பதாலும் வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. ஆறாம் இடத்தில் இருக்கக்கூடிய குரு கோசார ரீதியாக சில பின்னடைவுகளை ஏற்படுத்தவே செய்வார். தேவையில்லாத பகை எண்ணங்களையும் எதிர்மறை எண்ணங்களையும் உருவாக்குவார். அந்த எண்ணங்களில் இருந்து வெளிவர வேண்டும்.
பரிகாரம்:நெய் தீபம் 48 நாள்கள் மாலையில் பூஜை அறையில் ஏற்றுங்கள். மஹான்கள் ஆசிர்வாதம் நல்லது.