(19.6.2025 முதல் 25.6.2025 வரை)
சாதகங்கள்: தன குடும்பாதிபதி குரு தன குடும்பஸ்தானத்தைப் பார்ப்பது சிறப்பு. தன்னுடைய ஆதிபத்தியத்தை தானே பார்ப்பதால், அதை விருத்தி செய்வார். அதைப் போலவே சுக ஸ்தானத்தையும் அவர் பார்வை இடுவதால், குடும்ப உறவுகள் பெரிய அளவில் கருத்து வேறுபாடு இல்லாமல் இருக்கும். அர்த்தாஷ்டம சனி, ராகு தோஷங்கள் சற்று குறையும். மனம் அவ்வப்பொழுது சஞ்சலப் பட்டாலும், “பார்த்துக் கொள்ளலாம்’’ என்று உற்சாகமாக மறுபடியும் பணியில் ஈடுபடும் மனநிலையைத் தரும். நல்லவர்கள், பெரியவர்கள், குருமார்கள் இவர்கள் யோசனை உங்களை வழிநடத்தும் படி அமைத்துக் கொண்டால் துன்பங்களில் துவண்டு விடாமல் முன்னேறலாம்.
கவனம் தேவை: தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. வீடு மனை முதலிய விஷயங்களில் மனக்கசப்புகள், சிக்கல்கள் நேரலாம். நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் எளிதாக நடக்காமல் தடங்கல்கள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகள் தாமதமாகும். எட்டாம் இடம் முழுவதும் கெட்டுக் கிடப்பதால் அவ்வப்பொழுது மனதில் சந்தேகமும் அச்சமும் தயக்கமும் இருந்துகொண்டே இருக்கும்.
சந்திராஷ்டமம்: 24.6.2025 இரவு 11.46 முதல் 27.6.2025 அதிகாலை 1.40 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் ஹயக்ரீவர் சந்நதிக்கோ, தட்சிணா மூர்த்தி சந்நதிக்கோ, ராகவேந்திரர் சந்நதிக்கோ சென்று வாருங்கள்.