(10.7.2025 முதல் 16.7.2025 வரை)
சாதகங்கள்: ராசிநாதன் பலம் பெற்று இரண்டாம் இடமாகிய குடும்ப தன ஸ்தானத்தைப் பார்ப்பதால், ராசியும் இரண்டாம் இடமும் பலம் பெறுகிறது. ராசிக்கு வேறு தீய கிரகங்களின் பார்வையோ சேர்க்கையோ இல்லை என்பதால், தடையற்ற நற்பலன்கள் கிடைக்கும். தொட்டது துலங்கும். வெற்றிப்பாதை விளங்கும். வழக்குகள் வெற்றி பெறும். கூட்டுறவு முயற்சிகள் பலன் தரும். களத்திர ஸ்தானம் வலிமை பெறுவதால், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வருமானம் உயரும். கலைஞர்களுக்கு நல்வாய்ப்பு உண்டு. சுபகாரிய முயற்சிகள் பலம் தரும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. குருபகவானும் ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பதால், ராசிக்கு விசேஷமான நற்பலன்கள் அதிகம். இதற்கு என்ன பொருள் என்றால், உங்களுடைய முயற்சிகளை தகுந்த விதத்தில் கூட்டினால் அதிர்ஷ்டமும் இணைந்து நற்பலன்களைத் தரும் என்று பொருள்.
கவனம் தேவை: ஐந்துக்குரிய சனி வக்ரம் பெற்றிருப்பதும் அவரோடு ராகு இருப்பதும், சில சங்கடங்களைத் தரவே செய்யும். குலதெய்வத்தை நினைத்துக் கொண்டு இந்த தோஷங்களை கடந்து விடலாம். தொழில் போட்டிகள் அதிகரிக்கும். குழந்தைகள் விஷயத்தில் அதிக கவனம் தேவை. குறிப்பாக அவர்களுடைய ஆரோக்கிய விஷயத்தில் கவனம் வேண்டும்.
பரிகாரம்: அம்மன் கோயிலுக்குச் சென்று விளக்கு போடுங்கள். அத்தனையும் சுகமாகும்.