(12.6.2025 முதல் 18.6.2025 வரை)
சாதகங்கள்: ராசிக்கு எட்டில் இருந்த பஞ்சமாதிபதி செவ்வாய் அந்த ராசியை விட்டு விலகி இருப்பது உங்களுக்கு நன்மையைத் தரும் அமைப்பு. மூன்றில், ராகு, சனி இணைவு உங்கள் எண்ணங்களை வளமாக்கும். நினைத்த காரியத்தை நினைத்தபடி முடிக்க வைக்கும். ஐந்தில் சுக்கிரன் இருப்பதால், கலைஞர்களுக்கு நல்வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. பணப்பிரச்னை ஏதாவது ஒரு வகையில் தீர்ந்துவிடும். ராசிநாதன் ஏழிலிருந்து ராசியைப் பார்ப்பது அற்புதமான அமைப்பு. அங்கே அவர் தனித்து இல்லாத இருப்பதும் சிறப்பு. 10-க்குரிய புதன் ஆட்சி பெற்று ஏழில் இருக்கிறார். தொழில் வணிகம் இவற்றில் மனைவியின் அல்லது கணவரின் உதவி துணையாக இருக்கும். திருமணமான பெண்மணிகளுக்கு கருத்தரிக்கும் கிரக அமைப்புக்கள் உண்டு.
கவனம் தேவை: பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. ஏழில் சூரியன் இருப்பதால், தேவையில்லாத பிரயாணங்களின் அலைச்சல்களால் மனதில் சோர்வு ஏற்படும். உஷ்ண வியாதிகள், சரும நோய்கள் ஏற்படலாம். வாகன பராமரிப்பில் கவனம் செலுத்தவும். பிரயாணங்களில் எச்சரிக்கை தேவை.
பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்க, ஆற்றல் வளரும். வெள்ளிக் கிழமை அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று தீபம் போடவும்.