மிருகசீரிடம் 3, 4 ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்
எந்த சூழ்நிலையையும் எளிதாக கையாளும் மிதுன ராசி அன்பர்களே, இந்த வருடம் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் ஏற்படுத்தும். எல்லா வகையிலும் அனுகூலமான விஷயங்களை உண்டாக்கும். இருப்பினும் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சனி பகவான் 9 ல் இருப்பதால் தந்தை உடல்நலையில் கவனம் தேவை. தந்தையுடன் கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நல்லது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. குரு பகவான் 12 ல் இருப்பதால் வீண் விரயங்கள், மருத்துவச் செலவினங்கள் ஏற்படலாம். அதனால் சிக்கனம் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கும், வீடு, மனை, வாகனம் வாங்குவது போன்ற விஷயங்களுக்கு செலவிடுவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வாகன பயணங்களிலும் கொஞ்சம் கவனம் தேவை.ராகு கேது பகவான் முறையே 10,4 ல் இருப்பதால் தொழில் மற்றும் உத்யோகத்தில் ஒரு ஸ்திரத்தன்மை உருவாகும். உங்கள் நிலையை உங்களது தனித்திறமையால் தக்க வைத்துக் கொள்வீர்கள். தாய் உடல் நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் கூட்டாளிகளை கண்காணிப்பில் வைத்துக் கொள்வது நல்லது. புதிய வியாபாரம் முயற்சிகளை தவிருங்கள். மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் தேவை. சோம்பேறித்தனத்தை குறைத்துக் கொண்டு எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுங்கள். ஆசிரியர் சொல்கேட்டு நடப்பது நன்று.அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துச் செல்லுங்கள். வார்த்தைகளை கவனமாக கையாளுங்கள். சகாக்களை கண்காணிப்பில் வைத்துக் கொள்வது நல்லது.கலைத்துறையினருக்கு பல முயற்சிகளுக்கு பிறகு புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.
பரிகாரம்: திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரரை புதன்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.