(அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)
குடும்பம்: 7½ சனி காலத்தில், அதுவும் ஜென்மச் சனி சஞ்சார காலத்தில் வாக்கு, தனம், குடும்ப ஸ்தானத்திற்கு ராகுவும், அஷ்டம ஸ்தானத்திற்கு கேதுவும் மாறுவதும் நன்மைகளை அளிக்கக்கூடிய மாற்றமல்ல. ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். வீண் அலைச்சல்களையும், தேவையற்ற கவலைகளையும் குறைத்துக் கொள்ளுங்கள். ராகு இருப்பது குருவின் ராசியாக இருப்பதால், சிரமங்கள் அனைத்தும் கடுமையாக இராது. தகுந்த பரிகாரம் மிகச் சிறந்த பலனளிக்கும். மீனம் கும்ப ராசிக்கு வாக்கு ஸ்தானமாக இருப்பதால், உறவினர்கள், நெருங்கிய நண்பர்களிடையே வாக்குவாதம் ஏற்படும். உறவும், நட்பும் கெடும். கர்ப்பிணிப் பெண்கள் பிரசவக் காலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும். திருமண முயற்சிகளில், ராகு தடங்கல்களை ஏற்படுத்துவார். கேது, தற்போது மாறியுள்ள கன்னி ராசி, கும்ப ராசிக்கு அஷ்டம ஸ்தானமாக அமைந்திருப்பதால், அடிக்கடி உடலில் ஆயாசமும், அசதியும் மேலிடும்.
மனோதைரியம் குறையும். எதிர்காலத்தைப் பற்றிய கற்பனையான பயத்தினால், தங்களைத் தாங்களே வருத்திக் கொள்வார்கள். எதிர்பாராத செலவுகளில் பணம் விரயமாகும். நீதிமன்ற வழக்குகள், புராதனச் சொத்து சம்பந்தமான பிரச்னைகளில் பின்னடைவு ஏற்படும்
உத்தியோகம்: கும்ப ராசியினர் ராகுவின் மீன ராசி சஞ்சார காலத்தில் தங்கள் பணியில் மிகவும் ஜாக்கிரதையாக இருத்தல் மிகவும் அவசியம். நிர்வாகத்தினர் உங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். மேலதிகாரிகளும் நியாயமாக நடந்துகொள்வது கடினம். மனதில், எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் மேலிடும். எந்நிலையிலும், நிதானத்தை இழந்துவிட வேண்டாம். புயலுக்குப்பின் அமைதி; வரும் துயருக்குப் பின் சுகம் உண்டு என்பதை மறவாதீர்கள்!
தொழில், வியாபாரம்: தொழிலை நேரடியாகக் கவனிக்க இயலாமல் ஆரோக்கியக் குறைவு ஏற்படும். மருத்துவச் சிகிச்சை ஏற்க நேரிடும். உங்கள் நம்பிக்கைக்கு உரிய அதிகாரி ஒருவர் உங்கள் நலனுக்கு எதிராக நடந்துகொள்ளும் வாய்ப்பும் உள்ளதை ராகுவின் நிலை எடுத்துக் காட்டுகிறது அந்த அதிகாரியின் செயலால் உங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பக்கூடும் என்பதை ராகுவின் சஞ்சார நிலை எடுத்துக்காட்டுகிறது.
கலைத் துறையினர்: ராகு, கேது இருவருமே அனுகூலமில்லாத வானியல் பாதையில் சஞ்சரிப்பதால், வாய்ப்புகள் குறையும். கும்ப ராசிக்கு மீனம், தன ஸ்தானமாதலால், வரவிற்கு மீறிய செலவுகள் ஏற்படும். சிலருக்குக் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும். அஷ்டம ராசியில் உள்ள கேதுவினால், உடல் நலன் கெடும். மருத்துவச் செலவுகளில் பணம் விரயமாகும். போட்டியும். பொறாமையினாலும் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும்.
அரசியல் துறையினர்: பொறுமை, நிதானம் மிகவும் அவசியம். ஒருசிலர், வழக்குகளில் சிக்கிக் கொள்ள நேரிடும்.
விவசாயத் துறையினர்: வயல் பணிகளில் மிகக் கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும். ஆயினும், உழைப்பிற்கு ஏற்ற விளைச்சலும், வருமானமும் கிடைப்பது சற்று கடினமே! கால்நடைகளின் பராமரிப்பிலும் பணச் செலவுகள் அதிகமாகும்.
மாணவ, மாணவியர்: கேதுவின் நிலையினால், நீங்கள் விரும்பாவிடினும், “தீயோர் நட்பு ேதடிவரும்…! “என்கிறது “ஜோதிட அலங்காரம்” எனும் புராதன ஜோதிட கிரந்தம். அது தவறான பழக்க, வழக்கங்களில் மனதை ஈடுபடச் ெசய்யும். பாடங்களில் மனம் ஈடுபடுவது பாதிக்கப்படும். பரிகாரம் மிக, மிக அவசியம் செய்ய வேண்டும், மறந்துவிடவேண்டாம்!!
பெண்மணிகள்: அஷ்டம ராசியில் அமர்ந்துள்ள கேதுவின் நிலை காரணமாக, உடல்நலன் பாதிக்கப்படும். மருத்துவ சிகிச்சை தேவைப்படும். ராகுவினால், அடிக்கடி முன்கோபமும், நெருங்கிய உறவினர்களைக் கண்டாலே வெறுப்பும், விரோதமும் உண்டாகும். குழந்தைகளின் படிப்பு, ஆேராக்கியம் பற்றிய கவலை மேலிடும்.
அறிவுரை: ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கூடியவரையில், பிறருடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்க்கவும். மாணவ, மாணவியர் பிறர் நட்பைத் தவிர்த்தல் அவசியம். கல்வியைத் தவிர வேறு விஷயங்களில் மனதைச் செலுத்த வேண்டாம்.
பரிகாரம்: உங்கள் வீட்டின் பூஜையறையில் 24 சனிக்கிழமைகளிலும், 24 செவ்வாய்க்கிழமைகளிலும் 5 தீபங்கள் ஏற்றி வந்தால் போதும்.