விருச்சிகம்

(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)

குடும்பம்: விருச்சிக ராசி அன்பர்களுக்கு, இப்ேபாது ராகு, ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும், கேது லாப ஸ்தானத்திற்கும் மாறியுள்ளார். ராகுவினால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பில்லை! ஆனால், கேதுவினால் அனுகூலங்கள் ஏற்படும்!! குழந்தைகளின் உடல்நலனில் கவனமாக இருத்தல் நலம் பயக்கும். விவாக முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். என்றோ பட்ட கடன்கள் தொல்லை தரும். காரணமில்லாமல் மனநிம்மதி குறையும். ஜெனன கால ஜாதகத்தில் தோஷம் இருப்பின், தீயவரின் நட்பு ஏற்படும். அது குடும்ப நலன்களைப் பாதிக்கும். தவறான பழக்க – வழக்கங்களில் மனம் செல்லும். பாடுபட்டுச் சம்பாதிக்கும் பணம் தவறான வழிகளில் விரயமாகும். அவசியமில்லாமல், நண்பர்களிடமோ அல்லது, உறவினர்களிடமோ கடன் வாங்க மனம் விழையும். அதிர்ஷ்டவசமாக, கேது லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது, ராகுவினால் ஏற்படும் தோஷத்தைக் குறைக்கிறது. வருமானம் குறையாமல் பார்த்துக் ெகாள்வார், லாப ஸ்தானத்திலுள்ள கேது!! குடும்பத்தில் கருத்து வேற்றுமை ஏற்படும்போது (ராகுவினால்), அது மிகப் பெரிய பிரச்னையாக வளராமல் பார்த்துக் கொள்வார், கேது! கருவுற்றிருக்கும் பெண்மணிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்கும். அந்த அறுவை சிகிச்சை நல்லபடி முடிவதற்குக் கேதுவின் அனுகூலமான அருள் கிட்டும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில், வரனை நிர்ணயிப்பதில் உறவினர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவார், ராகு!!

உத்தியோகம்: “பதவீ பூர்வபுண்ணியானாம்…” என்கிறது ஜோதிடக் கலை! அதாவது, முற்பிறவியில் நாம் செய்துள்ள நற்செயல்கள் (தான, தர்மம்), தீச் செயல்கள் (அதர்மம் – பாபம்) ஆகியவற்றிற்கு ஏற்பவேதான், இப்பிறவியில் உத்தியோகமோ, தொழிலோ அமையும் என்பது பொருள். அது உண்மையே!! ஜாதகத்தில் மிகவும் முக்கியமான இந்த இடத்தில், ராகு அமர்ந்திருக்கும்போது, நல்ல நிறுவனத்தில், மனத்திற்குப் பிடித்த ேவலை கிடைப்பது கடினம். கிடைத்துள்ள பணியிலும் திருப்தி ஏற்படாது. எவ்வளவுதான் பாடுபட்டு உழைத்தாலும், மேலதிகாரிகளைத் திருப்தி செய்ய இயலாது. பதவிக்கு ஏற்ப, ஊதியமும் கிடைக்காது. சதா, ஓய்வில்லாமல், சுற்றிச் சுற்றி வரும் செக்கு மாடுகள் போல் உழைக்க வேண்டிவரும். அன்றாடப் பணிகளில் பொறுமை, நிதானம் மிக, மிக அவசியம். மேலதிகாரிகளுடன் அனுசரித்து, நடந்துகொள்ள வேண்டும்.

தொழில், வியாபாரம்: கடினமான போட்டிகளை நீங்கள் சந்திக்க நேரிடும். கூட்டாளிகளுடன் கருத்து வேற்றுமை ஏற்படும். லாபம் குறையும். புதிய முயற்சிகளுக்குத் தடங்கல்கள் ஏற்படும். பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. லாப ஸ்தானத்தில் கேது இருப்பதால் நிதி நிறுவனங்களின் ஆதரவும், உதவியும் தக்க தருணங்களில் கை கொடுக்கும்!

கலைத் துறையினர்: வருமானம் ஒரே சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்வார், லாப ஸ்தானத்தில் உள்ள கேது! இருப்பினும், பணம் பல வழிகளிலும் செலவழியும். சிலர் புதிய கடன்களை ஏற்க நேரிடும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதில், தாமதத்தை ஏற்படுத்துவார், ராகு!!

அரசியல் துறையினர்: கூடியவரையில், கட்சி விவகாரங்களிலிருந்து விலகியிருப்பது நல்லது. பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும், அதிகளவில் பேசுவதையும் சில மாதங்களுக்குத் தவிர்ப்பது நல்லது. “நுணலும் தன் வாயால் கெடும்…” -என்ற பழமொழி தங்களுக்கும் பொருந்துமாறு செய்துவிடுவார், ராகு! அதனால்தான் இந்த எச்சரிக்கை!!

விவசாயத் துறையினர்: விளைச்சல் திருப்தியளிக்கும். ஆயினும், சந்தையில் நிலவும் கடும் போட்டியினால், உங்கள் விளைபொருட்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் விற்பனையும், லாபமும் இராது. இருப்பினும், உங்களுக்குச் சாதகமான நிலையில் சஞ்சரித்துவரும் கேது பகவான் உங்களுக்கு எவ்வித நஷ்டமும் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்வார்.

மாணவ, மாணவியர்: ராகுவின் நிலையினால், உங்கள் கல்வி முன்னேற்றம் பாதிக்கப்படாது. கேது லாப ஸ்தானத்தில் உலவுவதால், உயர்மட்டக் கல்விக்கு செல்வாக்குள்ளவர்களின் ஆதரவும், பண உதவிகளும் கிடைக்கும். மேலும், வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவ, மாணவியருக்கு விசா பெற அதிகப்படியாக அலைய வேண்டிவராது. விசா உடனே கிடைத்து, வெளிநாடு பறந்து செல்லும் யோகமும் உண்டாகும்.

பெண்மணிகள்: ராகுவின் நிலையினால், மன அமைதி குறையும். கணவர், குழந்தைகள் ஆகியோரின் எதிர்காலம் பற்றிய கற்பனையான கவலைகளை ஏற்படுத்துவார். ராகு – கேதுவின் நிலை காரணமாக, மனத்தில் தெய்வ பக்தி அதிகரிக்கும். மனப் புண்ணிற்கு அருமருந்தாக அமையும் உங்களுடைய உண்மையான, களங்கமற்ற பக்தி!

அறிவுரை: ராகுவினால் மனதில் உருவாகும் தாழ்வு மனப்பான்மை (Inferiority complex), கற்பனையான கவலைகள், எளிதில் உணர்ச்சிவசப்படுதல் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

பரிகாரம்: ராகுவிற்கு பரிகாரம் மிகவும் அவசியம். கேதுவிற்கு அவசியமில்லை. இருப்பினும், செய்தால் நன்மை அதிகமாகும். அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் உள்ள தீபத்தில் 24 சனிக்கிழமைகள் எள் எண்ணெயும், 24 செவ்வாய்க்கிழமைகள் பசு நெய்யும் சேர்த்து வந்தால், அற்புத பலன் கிட்டும். குறைந்தது 12 கிழமைகள் செய்வது மிகச் சிறந்த பலனளிக்கும்.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us