(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)
குடும்பம்: மிதுன ராசி அன்பர்களுக்கு, இதுவரை, ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரித்த ராகு, ஜீவன ஸ்தானமாகிய மீனத்திற்கும், கேது சுக ஸ்தானமாகிய கன்னி ராசிக்கும் மாறுவது அளவோடு சில பிரச்னைகளை ஏற்படுத்தித் தரும் என பண்டைய ஜோதிட கிரந்தங்கள் கூறுகின்றன. எதிர்பாராத செலவுகளில் பணம் விரயமாகும். ராகு மாறியுள்ள மீன ராசி, உங்களுக்கு ஜீவன ஸ்தானமாகும். குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். வீண் செலவுகளைத் தவிர்க்க இயலாது. அதிர்ஷ்டவசமாக குரு பகவான் லாப ஸ்தானத்தில் உள்ளதால், வருமானத்தை அவர் ஓரளவு பார்த்துக்கொள்வார். சுப நிகழ்ச்சிகளில் பணம் விரயமாகும். வருமானத்தைவிட, செலவுகளே அதிகமாக இருக்கும். எவ்வளவுதான் முயன்றாலும், சேமிப்பிற்கு சாத்தியமில்லை. சில தருணங்களில், கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும். திருமண முயற்சிகளில் வரன் அமைவது, தள்ளிக்போகும். சுக ஸ்தானமாகிய கன்னி ராசியில், கேது சஞ்சரிப்பதால், குடும்ப உறவினர்களிடையே சுமுகமற்ற நிலையும், பரஸ்பர ஒற்றுமைக் குறைவும் ஏற்படக்கூடும். சிறு காரியமானாலும், அதிக உைழப்பும், கடின முயற்சியும் தேவைப்படும். அைலைச்சலும், வெளியூர்ப் பயணங்களும் உடலில் அசதியையும், சோர்வையும் ஏற்படுத்தும்.
உத்தியோகம்: மீனம், உங்களுக்கு ஜீவன ஸ்தானமாகும். அங்கு ராகு மாறியிருப்பது, அலுவலகப் பணிகளில் தாங்கள் கவனமாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. மேலதிகாரிகளுடனும் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, முன்கோபத்தை நீங்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மிதுனம், விவேகத்திற்கு அதிபதியான புதனின் ராசியாக இருப்பதால், சாதுர்யமும், பொறுமையும் தக்க தருணத்தில் கைகொடுக்கும். பொறுப்புகளும், பணிச் சுமையும் கூடும். ஒரு சிலர் இடமாற்றம் செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளதையும், ராகுவின் சஞ்சார நிலை உணர்த்துகிறது. வெளிநாடு சென்று, பணியாற்ற விரும்பும் மிதுன ராசி அன்பர்கள், இடைத் தரகர்களின் மறைமுக சூழ்ச்சிகளில் அகப்பட்டுக் கொண்டு துன்பப்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. தீர விசாரிக்காமல், ஒப்புக்கொள்ள வேண்டாம். கேது சுகஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால், குடும்பம், குழந்தைகளிடமிருந்து தற்காலிகமாக பிரிந்திருக்க நேரிடும்.
தொழில், வியாபாரம்: நியாயமற்ற, மிகக் கடுமையான போட்டிகளை நீங்கள் சந்திக்க நேரிடும். லாபத்தைத் தக்கவைத்துக் கொள்ள மிகவும் பாடுபட வேண்டியிருக்கும். சகக் கூட்டாளிகளினால் பிரச்னைகள் ஏற்பட்டு, மன நிம்மதி பாதிக்கப்படும். கேதுவின் நிலையினால், அதிக அலைச்சலும், வெளியூர்ப் பயணங்களில் ஏமாற்றமும் ஏற்படக்கூடும். எதையும் திட்டமிட்டுச் செய்வது, அவசியமாகும்.
கலைத் துறையினர்: வாய்ப்புகள் குறையும். வருமானத்திற்குள் வாழ்க்கை நடத்துவது சற்று சிரமமாகவே இருக்கும் என கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. திரைப்படத்துறை யினருக்கு சற்று சிரமமான காலகட்டம் இது. வருமானத்தையும் மீறிய செலவுகள் கவலையை அளிக்கும். புதிய வாய்ப்புகள் குறையும். தசா, புக்திகள் பாதகமாக இருப்பின், வழக்குகளைச் சந்திக்க நேரிடும். திருமணமான நடிகர், நடிகைகள் ஆகியோரிடையே கருத்துவேற்றுமை அதிகரிக்கும்.
அரசியல் துறையினர்: பேச்சிலும், நடத்தை யிலும், கட்சித் தலைவர்களுடன், கட்சிப் பணிகள் பற்றி விவாதிப்பதிலும், கவனமாக இருக்கவேண்டிய கால கட்டம் இது என்பதை ராகுவின் நிலை நினைவூட்டுகிறது. நீங்களே உங்களுக்கு எதிரியாகும் சூழ்நிலையை ஏற்படுத்துவார், ராகு! சுக ஸ்தானத்தில் உலவும் கேதுவினாலும், பிரச்னைகள் உருவாகும். கட்சித் தொண்டர்களை முழுவதுமாக நம்பிவிட இயலாது.
விவசாயத் துறையினர்: வயல் பராமரிப்பிலும், கால்நடைகளின் பாதுகாப்பிலும் பணம் விரயமாகும். உடல் உழைப்பு கடுமையாக இருக்கும். கேதுவின் நிலையினால், பழைய கடன்கள் மன நிம்மதியைப் பாதிக்கும். சிலருக்கு, பூர்வீகச் சொத்துக்கள் கைநழுவிப்போகும்.
மாணவ, மாணவியர்: வித்யா ஸ்தானம் சுப பலம் பெற்றுத் திகழ்வதால், கல்வி முன்னேற்றம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. அவ்வப்போது சிறு, சிறு உடல்நல பாதிப்பு ஏற்படக்கூடும். ஆயினும், கல்வி முன்னேற்றத்தை அது பாதிக்காது. விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவியருக்கு கேதுவின் நிைலயினால் அடிக்கடி பணப் பற்றாக்குறை ஏற்படும். வசதிகள் குறையும்.
பெண்மணிகள்: ராகு தொழில் ஸ்தானத்தில் உள்ளதால், வேலை பார்க்கும் பெண்மணிகள், தங்கள் அன்றாடக் கடமைகளிலும், பொறுப்புகளிலும் கவனமாக இருத்தல் அவசியம். தவறுகள் ஏற்பட வழிவகுத்துவிடுவார், கேதுவின் நிலையினால்! கற்பனையான கவலைகளும் எதிர்காலத்ைதப் பற்றிய பயமும் மனதை உறுத்தும்.
அறிவுரை: கைப் பணத்தை எண்ணி, எண்ணிச் செலவு செய்யுங்கள். திடீர்ச் செலவுகள் ஏற்படக்கூடும். வேலை செய்யும் அலுவலகத்தில் பிறருடன் பழகுவதில் அளவோடு இருக்கவும்.
பரிகாரம்: பரிகாரம் மிகவும் அவசியம். அருகிலுள்ள தி்ருக்கோயில் ஒன்றில், சனிக்கிழமை மாலை நேரத்தில் சிறிது எள் எண்ணெயும், செவ்வாய்க்கிழமைகளில் சிறிது பசு நெய்யும் சேர்த்து, தரிசித்துவந்தால் போதும்.