(பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை)
குடும்பம்: 7½ சனியின் ஆரம்பக் கட்டத்தில் உள்ள நிலையில், உங்களுக்கு ராகு ஜென்ம ராசிக்கும், ேகது சப்தம ஸ்தானத்திற்கும் மாறுகின்றனர். அதிர்ஷ்டவசமாக, ராகு பிரவேசிப்பது குருவின் ஆட்சிவீடான மீனமாகும்! எந்தப் பாபக் கிரகமானாலும், குரு பகவானின் ஆட்சி வீடுகளான தனுர் ராசியிலும், மீன ராசியிலும் சஞ்சரிக்கும் காலத்தில், தங்கள் வீர்யத்தை ஓரளவு இழப்பதாக, “பிருஹத் ஸம்ஹிதை”, “பூர்வ பாராசர்யம்” “உத்தர காலாம்ருதம்” ஆகிய பண்டைய ஜோதிட நூல்கள் விவரித்துள்ளன. குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். கன்னி, உங்கள் ராசிக்கு களத்திர ஸ்தானமாக இருப்பதால், மனைவியின் உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருத்தல் நல்லது. விவாகம் சம்பந்தமான முயற்சிகளில் வரன் அமைவது தாமதப்படும். பலவழிகளிலும் பணம் விரயமாகும். பணம் பொருட்கள் களவு போகக்கூடும். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
உத்தியோகம்: உங்களை அறியாமலேயே பணிகளில் தவறுகள் ஏற்படக்கூடும். சக ஊழியர்கள், உங்களைப் பற்றித் தவறாக, மறைமுகமாகப் ேபசுவார்கள். மேலதிகாரிகளும் நியாயமாக நடந்து கொள்ள மாட்டார்கள். இருப்பினும், ராசி நாதனாகிய குரு பகவான் சுப பலம் பெற்றுள்ளதால், உங்கள் உத்தியோகத்திற்கு பங்கம் ஏற்படாது. நிர்வாகத்தினரிடம் அனுசரித்து நடந்து கொள்வது நன்மை தரும். புதிய வேலைக்கு முயற்சிக்கும் மீன ராசியினருக்கு மனத்திற்கு திருப்தி அளிக்காத வேலை கிடைக்கும்.
தொழில், வியாபாரம்: திடீரென்று சந்தை நிலவரத்தில் பின்னடைவு ஏற்படும். நிதி நிறுவனங்களின் உதவி கிடைப்பதும் சற்று கடினம்தான். அதனால், ஆட்குறைப்பு தவிர்க்க இயலாத சூழ்நிலை உருவாகும். தேவைக்கு ஏற்ப உற்பத்தியை அளவோடு வைத்துக் கொள்வது அவசியம். விஸ்தரிப்புத் திட்டங்களை ஒத்திப்போடுவது நன்மை தரும்.
கலைத்துறையினர்: வாய்ப்புகள் குறையும். “நிச்சயம் நமக்குத்தான்…” என உறுதியுடன் எதிர்பார்த்திருந்த மிக நல்ல வாய்ப்புகள் கைநழுவிப் போகும். அது மனத்தை மிகவும் பாதிக்கும். திரைப்படத் தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் முதலீடு செய்து படம் எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். சிக்கனமாகச் செலவு செய்தல் அவசியம்.
அரசியல் துறையினர்: உயர்மட்டத் தலைவர்களின் ஆதரவு குறையும். கட்சியில் ெசல்வாக்கு பாதிக்கப்படும். தசா, புக்திகள் சாதகமாக இல்லாவிடில், வீண் வழக்குகளில் சிக்கிக்கொள்ள நேரிடும். சென்ற நாட்களில் ெசய்த தவறுகளுக்காக, இப்போது வருந்த நேரிடும். கட்சியில் உள்ள ஒருவரால், எதிர்பாராத பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும்.
விவசாயத் துறையினர்: உழைப்பிற்கேற்ற பலன் இருக்கும். கால்நடைகளின் பராமரிப்பில் அதிக செலவுகள் ஏற்படும். வயல் பணிகளில் கடும் உழைப்பு இருக்கும்.
மாணவ, மாணவியர்: வித்யா ஸ்தானத்திற்கு ராகுவினாலோ அல்லது கேதுவினாலோ மீன ராசி மாணவ, மாணவிகளுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது. குருவின் வீட்டில் ராகுவிற்கும், கல்விக்கு அதிபதியான புதன் ராசியான கன்னியில் கேதுவிற்கும் கல்வியைப் பாதிக்கும் அதிகாரம் கிடையாது. ஆதலால், கல்வி முன்னேற்றம் தடைபடாது. உடல்நலனில் மட்டும் கவனம் இருக்கட்டும்.
பெண்மணிகள்: ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படக்கூடும். குடும்பச் செலவுகளைச் சமாளிப்பதில் பற்றாக்குறை ஏற்படக்கூடும்
அறிவுரை: உடல் நலனில் அக்கறையுடன் இருத்தல் அவசியம். இந்த அறிவுரையைத் தவிர்த்தால், விளைவு, மருத்துவச் செலவு!
பரிகாரம்: ராகு, கேது இருவருக்கும் பரிகாரம் அவசியம். தினமும் “மந்திர ராஜபத ஸ்தோத்திரம்” எனும் அதியற்புத ஸ்லோகம் உள்ளது. லட்சுமி நரசிம்மர் மீது இயற்றப்பட்டுள்ள மகா மந்திரம் இது. தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் படித்து, அவரது திருவடிகளைப் பூஜித்து வந்தால் போதும். கவலையின்றி இருக்கலாம். வசதியிருப்பின், சோளிங்கபுரம், அஹோபிலம் போன்ற நரசிம்ம திருத்தலங்களில் ஏதாவது ஒன்றை தரிசித்தாலே திருவுள்ளம் மகிழ்ந்து, காப்பாற்றி அருள்புரிவான், கருணையே உருவான லட்சுமி நரசிம்மன்!