(கிருத்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)
குடும்பம்: இதுவரை உங்கள் ராசிக்கு விரயஸ்தானத்தில் உலவிய ராகு, இப்போது லாப ஸ்தானத்திற்கு மாறியிருப்பதும், பூர்வ புண்ணிய ராசிக்கு, கேது பிரவேசிப்பதும் மிகவும் அனுகூலமான கிரக மாறுதல்களாகும். ஆேராக்கியத்தில் நல்ல அபிவிருத்தி ஏற்படுவதை அனுபவத்தில் காணலாம். கருவுற்றிருக்கும் பெண்களுக்கு சுகப் பிரசவம் நிச்சயம். விரய ஸ்தானமாகிய மேஷத்தில் இருந்தவரை, கைப்பணம் எங்கே போயிற்று? எனத் ெதரியாத அளவிற்கு செலவுகள் ஏற்பட்டிருக்கும். எத்தனைதான் சிக்கனமாக இருப்பதற்கு முயற்சித்தாலும், சேமிக்க இயலாத சூழ்நிலையை ஏற்படுத்தியிருப்பார், ராகு! அந்நிலை இப்போது மாறும். “ராகு” என்றாலே தீய பலன்களை மட்டும்தான் கொடுப்பார் என்ற கருத்து தவறாகும்!! அதன் உண்மையை இப்போது நீங்கள் பார்க்கலாம். நிரந்தர நோய்கள், வயோதிகம் ஆகியவற்றின் காரணமாக, சிகிச்சை பெற்று வரும் ரிஷப ராசியினருக்குக்கூட வியக்கத்தக்க குணத்தைத் தந்தருள்வார், ராகு. திருமணம் சம்பந்தமான சமயங்களில், “எப்படிச் சமாளிப்போம்?” என்ற மனநிலையில் உள்ள பெண்களின் பெற்றோர்களுக்கு எதிர்பாராத இடங்களி லிருந்து பணம், பொருட்கள் உதவிகளைப் பெற்றுத் தருவார், ஸிம்ஹிகை மைந்தன்.
உத்தியோகம்: லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ள ராகு, உங்களுக்கு இதுவரை எவ்வித காரணமும் இல்லாமல் மறுக்கப்பட்டுவந்த சலுகைகள், பதவியுயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றைத் தனது லாப ஸ்தான சஞ்சார காலத்தில் பெற்றுத் தருவார்! எந்த உயரதிகாரியாவது, நியாயமில்லாமலும், தகுந்த காரணம் இல்லாமலும், உங்கள் மீது பகையுணர்வைக் காட்டி, உங்களைக் கொடுமைப்படுத்தியிருந்தால், அந்த அதிகாரியை இடமாற்றம் செய்து உங்கள் உள்ளத்திற்கு அமைதியைப் பெற்றுத் தருவார், நிழல் கிரகமானாலும், அளவற்ற சக்தி வாய்ந்த ராகு. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள கேதுவும், உங்கள் அன்றாடப் பணிகளில் துணை நிற்பார்.
தொழில், வியாபாரம்: சந்தை நிலவரத்தைச் சாதகமாகச் ெசய்து, விற்பனையை உயர்த்தி, லாபத்தைப் பெற்றுத் தருவதில் ராகுவிற்கு இணை அவரே! புதிய விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கு அவசியமான உதவிகள் கிடைப்பதற்கும் உதவுவார். அதனால், லாபம் உயரும். ஜீவன ஸ்தானத்தில் சனி பகவானும் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்துள்ளது, ராகுவினால் ஏற்படும் நன்மைகளை அதிகரிக்கச் செய்கிறது. ேகது, கன்னி ராசியில் இருப்பதால், கிடைக்கும் லாபத்தில் சிறு பங்கு தர்ம காரியங்களுக்குச் செலவிடுவீர்கள். புதிய முயற்சிகள், வர்த்தக விஸ்தரிப்புத் திட்டங்கள் ஆகியவை மகத்தான வெற்றியைப் பெற்றுத் தரும்.
கலைத்துறையினர்: புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தருவார், ராகு! அதன் மூலம் வருமானம் உயரும். வசதிகள் பெருகும். சினிமாத் துறையினருக்கு, விசேஷ நன்மைகளை அளித்தருள்வார். கேதுவின் நிலையினால், கர்நாடக சங்கீத வித்வான்கள், ஓதுவா மூர்த்திகள், தெய்வ பக்தியைப் பின்னணியாகக் கொண்ட திரைப்படத் தயாரிப்புகளின் தயாரிப்பாளர்கள் நல்ல லாபத்தையும் புதிய சந்தர்ப்பங்களையும் பெறுவார்கள்.
அரசியல் துறையினர்: அரசியல் வெற்றிக்கு மிகவும் அவசியமான சாதுர்யம், தந்திரம், பேச்சுத் திறன், செல்வாக்கு நிறைந்த அரசியல் பிரமுகர்களின் தொடர்பு, அனைத்திற்கும் மேலாக, மறைமுக வருமானம் ஆகியவற்றைச் சற்று தாராளமாகவே அளித்தருள்வார், ராகு இப்போது! வழக்குகள் இருப்பின், தகுந்த சாட்சிகளை ேஜாடித்து, அவற்றிலிருந்து விடுபட்டு, ெவளிவர வழி வகுத்துத் தருவார், சமயத்திற்கு ஏற்றாற்போல் சாட்சி சொல்லும் சாமர்த்தியசாலிகளைத் தேடித் தருவார், ராகு! நீதிபதிகளுக்கே வியப்பைத் தரும் வகையில் சாட்சியளிக்கும் திறனை அளிப்பவர்கள், சுக்கிரனும், ராகுவும் மட்டுேம எனக் கூறுகிறது சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம். இந்த உண்மையை இப்போது நீங்கள் பார்க்கலாம்.
விவசாயத் துறையினர்: தேவையான அளவிற்கு தண்ணீர் வசதி, கால்நடைகள் அபிவிருத்தி ஆகியவற்றை ஏற்படுத்தித் தருவார், ராகு.கேது. பசுக்களை அபிவிருத்தி செய்வார். பால் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மாணவ, மாணவியர்: அடுத்துவரும் சுமார் 15 மாதங்களுக்கு, ராகுவினால் ஏற்படவுள்ள பல நன்மைகள் உங்களுக்குக் கிடைக்கும். உயர் கல்விக்குப் பண உதவியைப் பெற்றுத் தருவார், ராகு. ஆசிரியர்களின் ஆசி கிடைக்கும். வெளிநாடு சென்று உயர்கல்வி பெறுவதற்கு எளிதில் விசா கிடைக்க உதவுவார், ராகு! மனதில் எவ்விதத் தவறான சபலங்களும், தீய நட்பும் ஏற்படாதவாறு அருள்புரிவார், கேது.
பெண்மணிகள்: பல மாதங்களாக உடலை வருத்திய உபாதைகள், நோய்கள் ஆகியவற்றிலிருந்து நல்ல குணத்தை அளிப்பார், ராகு. கேதுவின் நிலையினால், தெய்வ பக்தியும், குழந்தைகளின் மீது பாசமும் அதிகரிக்கும். பல பெண்களுக்கு புத்திர பாக்கியத்தை அளித்து அருள்வார், கேது! காரணம், ரிஷப ராசி அன்பர்களுக்கு, கன்னி ராசி பூர்வ புண்ணிய, புத்திர ராசியாக இருப்பதேயாகும். பூர்வ புண்ணிய ராசியில் மோட்சகாரகரான கேது சஞ்சரிப்பது புத்திர பாக்கியத்தை அளிக்கும் எனக் கூறுகிறது, “பிருஹத் ஸம்ஹிதை” எனும் தன்னிகரற்ற ஜோதிட கிரந்தம்!
அறிவுரை: சில தருணங்களில் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களின் மூலம் உதவி பெறச் செய்வார், ராகு! கிடைக்கிறதே உதவி என்று ஏற்றுக்கொண்டுவிட வேண்டாம். கொடுப்பவர்களின் பின்னணியைத் தெரிந்துகொண்டு, அதன் பின்பே அவர்கள் செய்யும் உதவியைப் பெற்றுக் கொள்வது எதிர்காலத்திற்கு பாதுகாப்பாகும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில், மாலை நேரத்தில் (5.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள்ளாக) அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றின் தீபத்தில் சிறிது எள் எண்ணெய் சேர்த்துவந்தால் போதும், 12 கிழமைகள் செய்ய வேண்டும். அதியற்புதப் பலன் கிடைக்கும்.