கடகம்
(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)
குடும்பம்: கடக ராசி அன்பர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் இருந்த ராகு, பாக்ய ஸ்தானத்திற்கு மாறியுள்ளார். அதே தருணத்தில், சுக ஸ்தானத்தில் இருந்துவந்த கேது, திரிதீய ஸ்தானமாகிய கன்னிக்கும் மாறியிருக்கிறார். ராகுவின் நிலையினால், குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். வருமானம் குறையும். பாக்கிய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கும்போது, பாடுபட்டு சம்பாதிக்கும் பணம் தவறான வழிகளில் விரயமாக சாத்தியக்கூறு உருவாகும் என பண்டைய ஜோதிட நூல்கள் தெளிவாகவும், உறுதியாகவும் கூறுகின்றன. ஆதலால், கடக ராசியினர், இத்தகைய காலகட்டத்தில் லாட்டரி டிக்கெட், இணையதள சூதாட்டாம், பங்குச் சந்தை ஆகியவற்றில் ஈடுபட்டால், அது மிகப் பெரிய நஷ்டத்தையும், குடும்பப் பிரச்னைகளையும் ஏற்படுத்தும். மேலும், கடன் வாங்கினால், அது மீளமுடியாத அளவிற்கு வளர்ந்துவிடும் என்பதையும் பண்டைய ஜோதிட நூல்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன (ஆதாரம்: “காலப்ரகாஸிகா”, “ஜோதிட ரத்னாகரம்” ஆகிய ேஜாதிட நூல்கள்). மானிட வாழ்க்கையில், நாம் எப்பொழுதெல்லாம், எந்தெந்த அம்சங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தெரிவித்து நம்மைக் காப்பாற்றுவதால், ஜோதிடக் கலையை பெற்ற தாயாகவும், உற்ற நண்பனாகவும் போற்றிப் புகழ்ந்துள்ளனர், நமது பக்திக்கு உரிய வேதகால மகரிஷிகள்! கேதுவினால், பல நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். முயற்சிகள் அைனைத்தும் ெவற்றி ெபறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும். பணப்பற்றாக்குறை ஏற்படும்போது, எதிர்பாராத இடங்களிலிருந்து உதவி தேடி வரும். திருமண முயற்சிகள் கைகூடும். ராகுவினால் ஏற்படும் செலவுகள் பெரும்பாலும் சுபச் செலவுகளாகவே இருக்கும். மகான்கள், பெரியோர்களின் ஆசி கிட்டும்.
உத்தியோகம்: தற்போது பார்த்துவரும் வேலையில் அதிருப்தி ஏற்படும். வேறு வேலைக்கு மாற ஆர்வம் மேலிடும். சக ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்படும். நிதானத்துடன் செயல்படுவது மிகவும் அவசியம். உயரதிகாரிகளின் கண்டிப்பு, கவலையை அளிக்கும். அத்தகைய தருணங்களில், கேது கைகொடுத்து உதவுவார். அவசர முடிவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டிய தருணம் இது. வெளிநாடுகளில் பணியாற்றிவரும் கடக ராசியினர், தங்கள் அன்றாடப் பொறுப்புகளில் கவனமாக இருத்தல் வேண்டும்.
தொழில், வியாபாரம்: போட்டிகள் அதிகரிக்கும். அவற்றைச் சமாளிப்பதற்கு மிகவும் கடினமாக உழைக்க நேரிடும். அத்தகைய தருணங்களில் கேதுவின் சுப பலம் உதவுகிறது. லாபம் சிறிது குறையுமே தவிர, நஷ்டம் ஏற்படாது. கூட்டாளிகளுடன் இருந்துவந்த ஒற்றுமை பாதிக்கப்படும்.வெளிமாநிலத் தொழிலாளர்களால் பிரச்னைகள் ஏற்படும். வெளியூர் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் ஏமாற்றத்தில் முடியும். ஏற்றுமதித் துறையினருக்கு, சிறிது முன்னேற்றத்தை அளித்தருள்வார், கேது! புதிய முதலீடுகள், விஸ்தரிப்புத் திட்டங்களை ஒத்திப்போடுதல் நல்லது.
கலைத்துறையினர்: ராகுவின் சஞ்சார நிலையினால், வாய்ப்புகள் பாதிக்கப்படும். வருமானம் குறையும். ஆடம்பர வசதிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துவார், ராகு பகவான்! கேதுவின் சஞ்சாரம், உதவிகரமாக அமைந்திருப்பதால், கடன் வாங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படாது.
அரசியல் துறையினர்: பாக்கிய ஸ்தானம் வலுவான ராகுவின் தோஷத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதால், வருமான வரித் துறை, லஞ்ச ஒழிப்புத் துறையினரின் கவனம் உங்கள் மீது விழக்கூடும். மறைந்திருந்து காட்டிக்கொடுக்கும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளதை, ராகுவின் நிலை எடுத்துக்காட்டுகிறது. எவரையும் முழுவதுமாக நம்பாமலிருத்தல் வேண்டும். தசா, புக்திகள் பாதகமாக இருப்பின், அதிஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும். நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்களின் அஜாக்கிரதை காரணமாக, பெரிய பிரச்னையில் சிக்கிக்கொள்ள நேரிடும்.முன்கூட்டியே எச்சரிக்கை ெசய்து, தவறு செய்பவர்களைக் காப்பாற்றும் குணம் கொண்டவர், ராகு! கட்சியினரிடமும் ஜாக்கிரதையாகப் பழக வேண்டிய காலம் இது. ஆபத்து சூழ்ந்துள்ள காலத்தைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டும் அரிய சக்தி கொண்டவர் ராகு!
விவசாயத் துறையினர்: விளைச்சலும், வருமானமும் எதிர்பார்க்கும் அளவிற்கு இராது. வரவும் – செலவும் சமமாகவே இருக்கும் என கிரக நிலைகள் ஊறுதி செய்கின்றன. கேதுவின் நிலையினால், எத்தகைய சூழ்நிலையிலும், கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட வாய்ப்பில்லை.
மாணவ, மாணவியர்: வித்யா ஸ்தானம் பாதிக்கப்படவில்லை. மற்ற கிரகங்களும் சாதகமாகவே உள்ளதால், கல்வி முன்னேற்றம் தடைப்படாது. சிலருக்குக் கூடாநட்பும், அதன் காரணமாக பண விரயமும் ஏற்பட வாய்ப்புள்ளது. பிற மாணவ, மாணவியருடன் நெருங்கிப் பழகாமல் இருப்பது மிக, மிகஅவசியமாகும். ஆசிரியர்களின் ஆதரவு உண்டு.
பெண்மணிகள்: வருமானத்திற்குள் குடும்பச் செலவுகளைக் சமாளிப்பது கடினமாக இருக்கும். அதிக அலைச்சலும், உழைப்பும் இருக்கும். ராகுவினால் ஏற்படும் தோஷத்தைக் கேது குறைத்துவிடுகிறார்.
அறிவுரை: சிக்கனமாகச் செலவு செய்யுங்கள். அடிக்கடி வெளிச் செல்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
பரிகாரம்: ராகுவிற்கு பரிகாரம் அவசியம். கேதுவிற்கு அவசியமில்லை. திருநாகேஸ்வரம், திருக்காளஹஸ்தி, நாகமங்களா (கர்நாடகா) இவற்றில் ஏதாவது ஒரு திருத்தலத்தை தரிசித்துவிட்டு வந்தாலே போதும். ராகுவின் தோஷம் அடியோடு நீங்கிவிடுவதை அனுபவத்தில் காணலாம்.