14-4-24 முதல் 13-5-24 வரை
இலக்கில் குறியாக இருந்து வெற்றி பெறுவீர்கள். ராசிநாதன் சூரியன் உங்கள் ராசிக்கு 9ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த தடைகள், பிரச்னைகள் நீங்கி சுபிட்சம் ஏற்படும். நல்ல மாற்றம், முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் ஆளுமை திறன் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களில் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து, அனுசரித்து செல்வது நல்லது. மாத முற்பகுதியில் பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வு இருந்தாலும், மாத பிற்பகுதியில் பொருளாதார நிலை உயரும். பேச்சில் அதிக கவனம் தேவை. வீண்வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. உடன் பிறப்புகளால் ஆதாயம் உண்டு.3 ல் கேது இருப்பதால் மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய ஆபரணங்கள் சேரும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.தாய் உடல் நலனில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவுகளால் மனகசப்புகள் உருவாகும். வீடு, வாகனம் தொடர்பான ஆவணங்களில் கவனம் தேவை. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. நீண்டநாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். குலதெய்வ மற்றும் இஷ்டதெய்வ வழிபாடு நன்மை தரும். எதிரிகளால் பிரச்னை வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். இல்லறம் இனிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் ஆதாயத்தை ஏற்படுத்தி தரும். எதிர்பாராத அதிர்ஷ்டமும், தனவரவும் உண்டு. தந்தையால் அனுகூலம் உண்டு. 10 ல் குரு இருப்பதால் தொழில் மற்றும் உத்யோகத்தில் பணிச்சுமை இருந்தாலும் நன்மை உண்டு. உங்கள் திறமை வெளிப்படும்.
சந்திராஷ்டம நாட்கள்: மே 4, 5, 6.
பரிகாரம்: காஞ்சி வரதராஜப்பெருமாளை ஞாயிற்றுக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.