
18-8-23 முதல் 17-9-23 வரை
தந்திரத்தால் எதையும் சாதிப்பீர்கள். ராசிநாதன் புதன் பகவான் ராசிக்கு 12 ல் சஞ்சரிப்பதால், எதிலும் கவனம் தேவை. யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். சில நேரங்களில் நம்பிக்கை துரோகத்திற்கு ஆளாவீர்கள். வீண் விரயங்கள் மருத்துவச் செலவினங்கள் ஏற்படும். 2 ல் கேது இருப்பதால் பேச்சில் அதிக கவனம் தேவை. வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பொருளாதாரங்களில் ஏற்ற தாழ்வுகள் வந்து நீங்கும். எடுக்கும் முயற்சிகள் தடைபட்டாலும் விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள். மனோ பலம் அதிகரிக்கும். எதையும் சாதிக்கும் ஆற்றல் உருவாகும். நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். உங்கள் உடைமைகளை கவனமாக கையாளுங்கள். தாயுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புதிய வீடு வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும்.குழந்தைகளின்உடல் நலத்தில் கவனம் தேவை. குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும். வழக்கு விஷயங்கள் சாதகமாக மாறும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமும் ,நட்பும் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அன்பு ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு.தடைகள் பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். சுக்கிரன் 11 ல் இருப்பதால் தந்தையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பிதுர் வழிபாடு நன்மை தரும். தொழில் மற்றும் உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எதிலும் காலதாமதத்தை தவிர்ப்பது நல்லது.
சந்திராஷ்டம நாட்கள்: செப்டம்பர் 3 4 5
பரிகாரம்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை புதன்கிழமை சென்று வழிபடுவதால் எந்த சூழ்நிலையும் எதிர்கொள்ளும் ஆற்றல் ஏற்படும்.