14-4-24 முதல் 13-5-24 வரை
குடும்ப உறவுகளுக்கு அதிக மதிப்பு கொடுப்பீர்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிர பகவான் ராசிக்கு 11 ல் சஞ்சரிப்பதால் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் காலம் ஆகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். புகழ், அந்தஸ்து, செல்வாக்கு உயரும். நீண்டநாள் ஆசைகள், கனவுகள் நிறைவேறும். இது வரை இருந்த டென்ஷன் மனகுழப்பம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை தேவைக்கேற்ப மேம்படும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை உயரும். தாய் உடல் நலனில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். வீடு மற்றும் வாகனத்தை செலவு செய்து சீர்படுத்துவீர்கள். வாகன பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்டதூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. தங்க நகை ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. குழந்தைகளின் செயல்பாடுகள் பெருமைப்படக்கூடியதாக இருக்கும். பூர்வீக சொத்தால் ஆதாயம் உண்டு. குரு 5 ஐ பார்ப்பதால் பூர்வ புண்ணிய பலம் உங்களை காக்கும். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். இஷ்ட தெய்வ மற்றும் குல தெய்வ வழிபாடு உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னை நீங்கி அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு.தொழில் மற்றும் உத்யோகத்தில் பிரச்னை வர வாய்ப்புள்ளதால் விழிப்புடன் இருப்பது அவசியம். உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.
சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 27,28,29
பரிகாரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.