
18-8-23 முதல் 17-9-23 வரை
பொறுமையே பெருமை தரும் என்பது உணர்ந்து செயல்படுவீர்கள். ராசிநாதன் சுக்கிர பகவான், ராசிக்கு 3 ல் இருப்பதால் வாழ்வில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். ஆளுமை திறன் உண்டாகும். புதன் 4 ல் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. பொருளாதார நிலை உயரும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். தங்க நகை ஆபரணச் சேர்க்கை உண்டு. பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பார்கள். தாயால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். புதன் 4 ல் இருப்பதால் குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. பூர்வீக சொத்து விஷயங்களை கவனமாக கையாளுங்கள். வழக்கு விஷயங்கள் சாதகமாக அமையும். முக்கிய பிரமுகரின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். அதன் மூலம் ஆதாயம் உண்டு. கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்கள் நன்மை தரும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் தன வரவும் உண்டு. தந்தையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். தொழில் மற்றும் உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. எதிலும் காலதாமதத்தை தவிர்ப்பது நல்லது. உங்கள் பணியில் சிரத்தையுடன் செயல்படுங்கள்.
சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 26, 27 28
பரிகாரம்: பள்ளிகொண்டாவில் உள்ள பள்ளிகொண்ட பெருமாளை வெள்ளிக்கிழமை சென்று வழிபட வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.