14-4-24 முதல் 13-5-24 வரை
எதையும் திட்டமிட்டு செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். ராசி நாதன் புதன் பகவான் உங்கள் ராசிக்கு 9 லும், 10 லும் சஞ்சரிப்பதால் இது வரை இருந்த தடைகள், பிரச்னைகள் குறையும். வாழ்வில் நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும். உடல் ஆரோக்கியமடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலையில் இருந்த முடக்கம் சிறிது சிறிதாக சரியாகும். நீண்டநாளாக வரவேண்டிய பணம் கைவந்து சேரும். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு. வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். தாய் உடல் ஆரோக்கியம் பெறும். தாய் மற்றும் உறவுகளிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் ஈடேறும். மனம் அமைதி பெறும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாக இருக்கும். குல தெய்வ மற்றும் இஷ்ட தெய்வ அனுகூலம் உண்டு. மறைமுக எதிரிகளால் பிரச்னை இருந்தாலும் அதனை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டு. இருப்பினும் நிதானம், பொறுமை தேவை. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். அஷ்டம சனியின் தாக்கம் இருப்பதால் உங்களுக்கு தொடர்பில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். வாகன பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்டதூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.தந்தை உடல் நலத்தில் கவனம் தேவை. தந்தை வழியில் தேவைகள் நிறைவேறும். மூத்தோர் வழிபாடு நன்மை தரும் தொழில் மற்றும் உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. உங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படுங்கள். யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம்.
சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 30, மே 1, 2
பரிகாரம்: ஸ்ரீசோளிங்கர் நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயரை சனிக்கிழமை சென்று வழிபடுவது நன்மை தரும்.