
18-8-23 முதல் 17-9-23 வரை
எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும். ராசிநாதன் செவ்வாய் பகவான் ராசிக்கு 10 ல் சஞ்சரிப்பதால் ஆளுமை திறன் அதிகரிக்கும். குரு 6 ல் இருப்பதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பேச்சில் கவனம் தேவை. பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வு வந்து நீங்கும். குடும்ப தேவைக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். நீண்ட நாளாக வங்கி கடனுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வங்கி கடன் கிடைக்கும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். தங்க நகை ஆபரணச் சேர்க்கை உண்டு. பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. சனி 4 ல் இருப்பதால் தாய் உடல் நலனில் கவனம் தேவை. குழந்தைகளால் மகிழ்ச்சி இருந்தாலும் மருத்துவச் செலவினங்கள் உண்டு. குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும். எதிரிகளால் வீண் பிரச்சனைகள் வந்து நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு.எதிர்பாராத அதிர்ஷ்டமும் தன வரவும் உண்டு. தந்தை உங்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பார். வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் உண்டு. தொழில் மற்றும் உத்யோகத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்வீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்: செப்டம்பர் 8 9 10
பரிகாரம்: தர்மபுரி அதியமான் கோட்டையில் உள்ள கால பைரவரை செவ்வாய்க்கிழமையில் சென்று வழிபட கடன் எதிரி பிரச்னைகள் நீங்கும்.