14-4-24 முதல் 13-5-24 வரை
கருமமே கண்ணாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். ராசிக்கு யோகாதிபதியாகிய சுக்கிரன் பலம் பெறுவதாலும், புதன் பகவான் ஜென்மத்தில் இருப்பதாலும், தடைகள், பிரச்னைகள் வந்தாலும் அதையெல்லாம் எதிர்கொண்டு சமாளித்து விடுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். தெய்வ அனுகூலம் உண்டு. வீண் செலவுகள், மருத்துவ செலவுகள் வர வாய்ப்புள்ளதால் சிக்கனம் தேவை. பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். புதிய தங்க நகை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.உடன் பிறப்புகளுடன் மனகசப்புகள் வந்து நீங்கும். எடுக்கும் முயற்சிகளில் தடை வந்து பிறகு சரியாகும். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. தாய்க்கு மருத்துவ செலவீனங்கள் ஏற்படும். தாய் மற்றும் உறவுகளுடன் மனகசப்பு வந்து நீங்கும். வீடு, வாகன, சொத்து தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. வாகன பயணங்களில் எச்சரிக்கை தேவை. குழந்தைகளின் செயல்பாடுகள் பெருமைப்படக் கூடியதாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு. உங்கள் அறிவுத்திறன் வெளிப்படும். குல தெய்வ மற்றும் இஷ்ட தெய்வ அனுகூலம் உண்டு. நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். எதிரிகளால் பிரச்னை வந்து சரியாகும். கணவன் மனைவிக்குள் சிறு கருத்து வேறுபாடு வந்தாலும் புரிந்துணர்வு அதிகரிக்கும். தந்தையால் அனுகூலம் உண்டு. மூத்தோர்களின் ஆசி கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடி வரும். தொழில் மற்றும் உத்யோகத்தில் கவனம் தேவை. உயரதிகாரி மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.
சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 21,22,23
பரிகாரம்: திருச்சி உச்சி பிள்ளையாரை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.