
18-8-23 முதல் 17-9-23 வரை
உழைப்பே உயர்வு தரும் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். ராசிக்கு யோகாதிபதியாக புதன் பகவான் 7 ல் இருந்து உங்கள் ராசியை பார்ப்பதால் எத்தனை தடைகள் பிரச்னைகள் வந்தாலும் எதிர் கொண்டு வெற்றி பெறுவீர்கள். ஏதோ ஒரு தெய்வ சக்தி உங்களை காத்து நிற்கும். யோகா தியானம் பயில்வதால் மன அழுத்தம் குறையும். எதிர்மறை சிந்தனை தவிர்த்து நேர்மறை சிந்தனை வளர்த்துக் கொள்ளுங்கள். 3 ல் குரு இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். பேச்சுக்கு மதிப்பு மரியாதை உண்டு. எதிர்காலம் பற்றிய பயம் கவலை வந்து நீங்கும். எடுக்கும் முயற்சியில் தடை தாமதம் இருந்தாலும் விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள். தாய் உடல் நலனில் கவனம் தேவை. வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு வீட்டு உரிமையாளரால் பிரச்னைகள் உருவாகும். சிலர் காவல்துறை வாகனம் தணிக்கையின் போது பிரச்னைக்கு உள்ளாவார்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. ஷேர் மார்க்கெட்டில் லாபம் அதிகரிக்கும். குலதெய்வம் மற்றும் வழிபாடு நன்மை தரும்.கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதால் தேவையற்ற பிரச்னைையை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவர். நண்பர்களால் ஆதாயம் உண்டு.
சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 19 20 21 செப்டம்பர் 15 16 17
பரிகாரம்: ஆம்பூரில் உள்ள காட்டுவீர் ஆஞ்சநேயரை சனிக்கிழமை சென்று வழிபடுவதால் மனம் தெளிவு வரும்.