14-4-24 முதல் 13-5-24 வரை
நேர்மையுடன் செயல்படுவீர்கள். ராசிநாதன் செவ்வாய் பகவான் 11 ல் சஞ்சரிப்பதால் தைரியம், தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். 2 ல் குரு இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். பேச்சால் மற்றவரை எளிதில் கவருவீர்கள். உடன் பிறப்புகளால நன்மை இருந்தாலும் இழப்பு உண்டு என்பதால் கவனம் தேவை. தங்க நகை ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். தாயால் அனுகூலம் உண்டு. தாய் மற்றும் உறவுகளால் மகிழ்ச்சி ஏற்படும்.வீடு, வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். மன அமைதி அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. குழந்தைகளின் செயல்பாடுகள் பெருமைப்படக்கூடியதாக இருக்கும். பூர்வீக சொத்தால் ஆதாயம் உண்டு. பூர்வபுண்ணிய பலன்கள் தேடி வரும். குல தெய்வ மற்றும் இஷ்ட தெய்வ அருளும் முழுமையாக கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும், தன வரவும் உண்டு. எதிரிகளின் பலம் குறையும். கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. புதிய ஒப்பந்தங்களால் ஆதாயம் உண்டு. தடைகள், பிரச்னைகள் இருந்தாலும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். தந்தையால் அனுகூலம் உண்டு. தந்தை உடல் நிலை சீராகும். மூத்தோர் மற்றும் குருவின் ஆசி கிடைக்கும்.தொழில் மற்றும் உத்யோகத்தில் இதுவரை இருந்த தடைகள், பிரச்னைகள் விலகும்.நிலுவையில் இருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்ட உயரதிகாரிகள், சக ஊழியர்கள் சாதகமாக மாறுவார்கள்.
சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 25,26,27
பரிகாரம்: தருமபுரி அதியமான் கோட்டையிலுள்ள காலபைரவரை செவ்வாய் கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.