14-4-24 முதல் 13-5-24 வரை
நீதிக்கு தலை வணங்குவீர்கள். ராசிநாதன் சுக்கிர பகவான் உங்கள் ராசிக்கு 6 ல் சஞ்சரிப்பதாலும், உச்சம் பெற்று இருப்பதாலும் இதுவரை இருந்த பிரச்னைகள் ஓரளவு குறையும். வாழ்வில் நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும். குடும்ப விஷயங்களில் பிரச்னைகள் வாய்ப்புள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பேச்சில் கவனம் தேவை. பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வு ஏற்பட வாய்ப்புள்ளதால் தேவையற்ற செலவினங்களை தவிர்ப்பது நல்லது. உடன்பிறப்புகள் உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பர். புதிய தங்க நகை ஆபரணங்கள் சேரும். மனோ பலம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தாய் உடல்நலனில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவுகளால் மனகசப்புகள் உருவாகும். வீடு மற்றும் வாகனம் தொடர்பான பிரச்னைகள் அதிகரிக்கும். மனம் அமைதியற்று அலைபாயும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடி வரும். பூர்வபுண்ணிய பலம் உங்களை காக்கும். நீண்டநாளாக குழந்தை பாக்கியத்திற்கு எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குல தெய்வ மற்றும் இஷ்ட தெய்வ அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரித்தாலும், வாழ்க்கைத்துணையின் அதிகாரத்திற்கு கட்டுப்பட வேண்டிய சூழல் உருவாகும். 8 ல் குரு இருப்பதால் தடைகள், பிரச்னைகள் இருந்தாலும் அதனை சமாளிக்கும் ஆற்றல் உண்டு. தந்தையுடன் கருத்துவேறுபாடு வந்து நீங்கும். தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும். உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் உருவாகும்.
சந்திராஷ்டம நாட்கள்: மே 9, 10, 11.
பரிகாரம்: திருநாகேஸ்வரம் ஸ்ரீ உப்பிலியப்பனை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.