
18-8-23 முதல் 17-9-23 வரை
எதிலும் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். ராசிக்கு யோகாதிபதியாகிய செவ்வாய் பகவான் 2 ல் சஞ்சரிப்பதால் எத்தனை தடைகள் பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொண்டு சமாளிப்பீர்கள். தெய்வ அனுகூலம் எப்போதும் உங்களை காத்து நிற்கும். எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம். கோபமான பேச்சை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலையில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. தங்க நகை ஆபரணச் சேர்க்கை உண்டு. தாய் உடல் நலனில் கவனம் தேவை. உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். வீடு வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள் உண்டு. குழந்தைகளின் செயல்கள் பெருமைப்படக்கூடியதாக இருக்கும். பூர்வீக சொத்தால் ஆதாயம் உண்டு. ஷேர் மார்க்கெட்டில் லாபம் அதிகரிக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. சனி 8 ல் இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் தேவை. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். மற்றவர்கள் உங்கள் மீது வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். குரு 10 ல் இருப்பதால் தந்தையால் அனுகூலம் உண்டு.பிதுர் வழிபாடு நன்மை தரும். தொழில் மற்றும் உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.
சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 30 31 செப்டம்பர் 1 2
பரிகாரம்: சிறுவாபுரி முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமை சென்று வணங்க தடைகள் பிரச்னைகள் குறைந்து சுபிட்சம் உண்டாகும்.