14-4-24 முதல் 13-5-24 வரை
லட்சியத்தை அடைய இறுதி வரை போராடுவீர்கள். ராசி நாதன் சந்திர பகவான் உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்திறன் அதிகரிக்கும். கடமை உணர்வுடன் செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பநிலை மாறி மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை உங்கள் தேவைக்கேற்ப அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உடன் பிறப்புகளால் ஆதாயம் உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக இருக்கும். புதிய ஆபரணங்கள் சேர்க்கை அதிகரிக்கும்.வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தாயால் அனுகூலம் உண்டு. தாய் மற்றும் உறவுகளால் ஆதாயம் உண்டு. வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். குழந்தைகள் உடல் நலனில் கவனம தேவை. குழந்தைகளையும், குழந்தைகளின் நட்பு வட்டத்தையும் கண்காணிப்பில் வைத்து வழிநடத்தி செல்வது நல்லது. பூர்வீக சொத்து விஷயங்களில் கவனம் தேவை.எதிரிகளால் பிரச்னை இருந்தாலும் அதிர்ஷ்டம் உண்டு. எதிர்பாராத தனவரவு உண்டு. கணவன் மனைவி விவகாரங்களில் சொந்த பந்தம் மற்றும் வெளியாட்களின் தலையீட்டை முழுமையாக தவிர்க்கவும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் அதிக கவனம் தேவை. வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. அஷ்டமச்சனி இருப்பதால் வாகன பயணங்களில் கவனம் தேவை. தந்தை உடல்நலனில் கவனமுடன் இருப்பது நல்லது. 11ல் குரு இருப்பதால் தொழில் மற்றும் உத்யோகத்தில் அலைச்சல் இருந்தாலும் முன்னேற்றம் உண்டு. புதிய பொறுப்புகள் மற்றும் வாய்ப்புகள் தேடி வரும்.
சந்திராஷ்டம நாட்கள்: மே 2, 3, 4.
பரிகாரம்: ஓசூரில் உள்ள சந்திர சூடேஸ்வரரை திங்கள் கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.