14-4-24 முதல் 13-5-24 வரை
உழைப்பே உயர்வு தரும் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு 3 ல்யோகாதிபதி சுக்கிரன் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த குழப்பநிலை, தடுமாற்றம் மாறி தெளிவு ஏற்படும். டென்ஷன் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை உங்கள் தேவைக்கேற்ப உயரும். விலகி சென்ற உறவுகள் விரும்பி வரும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை உயரும். இருப்பினும் 2 ல் சனி இருப்பதால் எதிலும் அதனுடைய சாதக, பாதகங்களை சிந்திக்காமல் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். யாரையும் முழுமையாக நம்பி எந்த செயலிலும் இறங்க வேண்டாம். பொறுமை, விழிப்புணர்வு, நிதானம் அவசியம். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து, தன்னால் சாதிக்க முடியும் என்ற நேர்மறை எண்ணத்தை வளர்த்து கொள்ளுங்கள்.3 ல் ராகு இருப்பதால் உடன் பிறப்புகளால் ஆதாயம் உண்டு. எடுக்கும் முயற்சிகளில் முதலில் தடை இருந்தாலும் பின்பு வெற்றி உண்டு. தாய் மற்றும் உறவுகளால் மனகசப்புகள் வந்து நீங்கும். வீடு, வாகனம் தொடர்பான பிரச்னைகள் உருவாகும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் ஈடேறும். குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. குழந்தைகளையும், குழந்தைகளின் நட்பு வட்டத்தையும் கண்காணிப்பில் வைத்து கொள்வது நல்லது. குல தெய்வ மற்றும் இஷ்ட தெய்வ வழிபாட்டால் வீண் பிரச்னைகளை தவிர்க்கலாம். கணவன், மனைவிக்குள் புரிந்துணர்வு அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் லாபத்தை தரும். தந்தையால் மனக்கசப்புகள் வந்து நீங்கும் தொழில் மற்றும் உத்யோகத்தில் நன்மை ஏற்படும்.
சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 18,19,20
பரிகாரம்: ஆம்பூரில் உள்ள காட்டுவீர ஆஞ்சநேயரை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.