14-4-24 முதல் 13-5-24 வரை
மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவீர்கள். உங்கள் ராசிக்கு, 12ல் சனிபகவான் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் விரயங்கள், மருத்துவச்செலவுகள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. உங்கள் செயல்களில் கவனமாகவும், விழிப்புணர்வோடு இருங்கள். ஜென்ம ராகு இருப்பதால் எதிலும் கவனம் தேவை. சுபச்செலவுகள் வந்து நீங்கும். குடும்ப விஷயங்களில் கவனம் தேவை. பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வு வந்து நீங்கும். சூரியன் 2 ல் இருப்பதால் பேச்சில் அதிக கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் எப்படியும் வெற்றி கிடைத்து விடும். லட்சுமி கடாட்ஷம் உண்டு. தாயால் அனுகூலம் உண்டு. தாய் மற்றும் உறவுகளால் ஆதாயம் உண்டு. புதிய வீடு, வாகனம் சொத்து சேர்க்கை உண்டாகும். குழந்தைகளின் செயல்கள் பெருமைப்படக்கூடியதாக இருக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் கவனம் தேவை. நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவைற்றுவீர்கள். குடும்பத்தேவைக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் லாபமும், விரயமும் சமமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களால் லாபம் உண்டு. சிறு தடைகள், பிரச்னைகள் வந்து நீங்கும்.தந்தையால் அனுகூலம் உண்டு. தொழில் மற்றும் உத்யோக விஷயமாக வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.
சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 23,24,25
பரிகாரம்: தென்குடித்திட்டை வசிஸ்டேஸ்வரர் மற்றும் குருபகவானை வியாழக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.