
18-8-23 முதல் 17-9-23 வரை
வாழ்க்கையை எளிமையாக கையாளுவீர்கள்.ராசிக்கு 2 ல்குரு பகவான் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார நிலையில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். பேச்சால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். தடைபட்ட காரியங்கள் இனிதாக முடியும். சனி 12 ல் இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். நண்பர்கள் உறவினர்களால் நம்பிக்கை துரோகங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சுக்கிரன் 5 ல் இருப்பதால் மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். முயற்சிகள் திருவினையாகும். எதையும் வெல்லும் ஆற்றல் ஏற்படும். தாயால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வீடு வாகனம் சொத்து தொடர்பான வில்லங்கங்கள் உருவாகும். ஷேர் மார்க்கெட்டில் லாபம் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. குலதெய்வ வழிபாடு நன்மை தரும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்னைகள் உருவாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் குழப்பங்கள் ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் தேவை. தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தொழில் மற்றும் உத்யோகத்தில் பதவி உயர்வு ஊதிய உயர்வு தேடி வரும். வீண் விரயங்கள் மருத்துவச் செலவுகள் ஏற்படும். நண்பர்களிடம் கவனம் தேவை.
சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 21 22 23
பரிகாரம்: திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரரை வியாழக்கிழமை சென்று வழிபடுவதால் எதிர்மறை பிரச்சனைகள் குறைந்து நேர்மறை சிந்தனை அதிகரிக்கும்.