மிதுனம்

Published: Last Updated on

(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)

குடும்பம்: இது வரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமாகிய மேஷ ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான், வரும் ஒருவருடகாலத்திற்கு விரய ஸ்தானமாகிய ரிஷப ராசியில் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கு, சுக ஸ்தானம் மற்றும் ருண, ரோக, சத்ரு ஸ்தானம் மற்றும் ஆயுள் ஸ்தானம் ஆகியவற்றைப் பார்வையிடுகிறார். “குரு பார்க்கில், கோடி தோஷம் விலகும்….!” -எனக் கூறுகின்றன, மிகப் பழைமையான ஜோதிடக் கிரந்தங்கள். ருண, ரோக, சத்ரு ஸ்தானம், சுக ஸ்தானம் மற்றும் ஆயுள் ஸ்தானங்களையும் பார்வையிடுகிறார், ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். குடும்பத்தில் மனத்தை பாதித்து வந்த பல பிரச்னைகள் நல்லபடி தீருவதால், மனத்தில் மீண்டும் அைமதி பிறக்கும் உடலை வருத்திவந்த பல பிரச்னைகள், எளிய சிகிச்சையினால் நல்லபடியாகும். குழந்தைகளின் எதிர்கால நலன்பற்றிய கவலை தீரும். பல காலமாக உறவினர் ஒருவருடன் ஏற்பட்டுவந்த பிரச்னை ஒன்று நல்லபடி தீரும். திருமண முயற்சிகளில், வெற்றி கிட்டும். இருப்பினும், குரு நிலைகொண்டிருப்பது, மிதுன ராசிக்கு விரய ஸ்தானமாக இருப்பதால், செலவுகளும் சக்திக்கு மீறியதாகவே இருக்கும்.

உத்தியோகம்: ஜீவன ஸ்தானத்தில், ராகு அமர்ந்திருக்கும் இத்தருணத்தில், குரு பகவானின் ரிஷப ராசி மாறுதல், நிகழ்ந்துள்ளது! மேலதிகாரிகளின் கண்டிப்பு, தளரும்!! அன்றாடப் பணிகளில் உடலை வருத்திய பணிச் சுமையும் குறையும். இதுவரை தடைப்பட்டிருந்த ஊதிய உயர்வு, இனி எதிர்பார்க்கலாம். சக-ஊழியர்களினால் ஏற்பட்டுவந்த, மறைமுகப் பிரச்னைகள், இனி பெருமளவில் தீரும். வெளிநாடு சென்று வேலை பார்க்க ஆர்வமிருப்பின், அத்தகைய முயற்சிகளுக்கு, குரு பகவான் உதவி செய்வார். வேலையில்லாத ரிஷப ராசியினருக்கு, சிறு முயற்சியில் வேலை கிடைக்கச் செய்வார், குரு!

தொழில், வியாபாரம்: தொழில் ஸ்தானத்தில் நிலை கொண்டுள்ள ராகுவினால், மிகக் கடுமையான போட்டிகளைச் சந்தித்து வரும் இத்தருணத்தில், இந்த குரு பகவானின் ரிஷப ராசி மாறுதல், உங்களுக்கு சமய சஞ்சீவியாக ஏற்பட்டுள்ளது. நியாயமற்ற போட்டிகளைச் சமாளிக்கும் திறனையும், பொறுமையையும் அளித்தருள்கிறார், குரு பகவான்! அதிகரித்துக் கொண்டேயிருக்கும் மூலப் பொருட்களின் விலை சற்று குறையும். கூட்டாளிகளினால் ஏற்பட்டுவந்த தொல்லைகளையும் நீக்கி அருள்புரிவார், வியாழ பகவான்! அன்றாடம் கடன் வாங்கி, பொருட்களை விற்பனை செய்யும் சில்லரை வியாபாரிகளுக்கு, கடன் தொல்லையைக் குறைத்திடுவார் குரு!!

கலைத்துறையினர்: கலைத் துறைக்கு அதிகாரி சுக்கிரன்!! அவரது ஆட்சி வீடுதான், ரிஷபம். மிதுன ராசிக்கு, ஜீவன ஸ்தானமாகிய மீன ராசிக்கு அதிபதியான குரு பகவான், ரிஷபத்தில் சஞ்சரிப்பது, நல்ல யோக பலன்களை அளிக்க வல்ல காலகட்டமாகும்.

அரசியல்துறையினர்: அரசியல் துறைக்கும் அதிபதி சுக்கிரன்தான்! அவரது ஆட்சி வீட்டிற்கு, குரு மாறியிருப்பது, பல நன்மைகளை அளிக்கவல்லது. கட்சியில், ஆதரவு பெருகும். மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். மக்களிடையே கிடைக்கும் வரவேற்பு, மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையையும் அளிக்கும்.

மாணவ – மாணவியர்: கல்வித் துறைக்கும், குரு பகவானுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு! நல்ல மாணாக்கர்களுடன் சேர்க்கை, திறமை மிகுந்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைத்தல், மாணவர்களின் மனதில் பதியும்படி பாடங்களை போதிக்கும் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் கிடைத்தல், உயர் கல்விக்கு நிதியுதவி ஆகிய கிடைத்தற்கரிய பல பேறுகளைப் பெற்றுத் தருவார், ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான்! இவற்றின் பலனாக, படிப்பில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும்.

விவசாயத் துறையினர்: விவசாயிகளின் குடும்பங்களில், கவலையளித்துவந்த பல பிரச்னைகள் இப்போது நல்லபடி தீரும். கால்நடைகள் அபிவிருத்தியடையும். கணவர் – மனைவியரிடையே ஏற்பட்டுவந்த கருத்துவேற்றுமை நீங்கி, குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெறுவதற்கு உதவி செய்வார், குரு பகவான்!

பெண்மணிகள்: குடும்பப் பொறுப்புகளை ஏற்றுள்ள பெண்மணிகளின் நலன்களைப் பாதுகாக்கும் பொறுப்பு, குருவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, மிகப் புராதனமான ஜோதிட நூல்கள் விளக்கியுள்ளன.

மனத்தை அரித்துவந்த பல பிரச்னைகள் இப்போது நல்லபடியே தீரும். மனதில் நிம்மதி பிறக்கும்.

அறிவுரை: குரு பகவானால் ஏற்படும் நன்மைகளை எதிர்காலத்திற்கென்று, திட்டமிட்டு சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பரிகாரம்: வியாழக் கிழமைதோறும், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிற்குக் கட்டாயம் சென்று, தீபத்தில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து தரிசித்துவிட்டு வருவது, கைமேல் பலனளிக்கும். ஒவ்வொரு திருக்கோயிலிலும், சக்திவாய்ந்த, மந்திர சக்தி ஊட்டப்பெற்ற யந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இயலாதவர்கள், காலை – மாலை இருநேரங்களிலும், லிகித ஜபமாகப் போற்றிக் கொண்டாடப்படும் “ராம ெஜயம்” எனும் தாரக மந்திரத்தை, நோட்டுப் புத்தகங்களில் 1008 முறைகள் எழுதி வந்தால் போதும். புத்தகம் நிறைவு பெற்றவுடன், பூஜையறையில் வைத்து, கற்பூர ஆரத்தி காட்டி நமஸ்கரித்து வந்தாலே போதும். ஐம்புலன்களாகிய, கண், காது, மூக்கு, செவி, கைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு “ராம ெஜயம்” எழுதுவதையே லிகித ஜெபம் என்கிறோம்.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us