மீனம்

22-4-2023 முதல் 13-4-2024 வரை

(பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை)

குடும்பம்: மீன ராசிக்குத் தலைவர் குரு பகவான்! அவர், ராசிக்கு வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றிற்குப் பொறுப்பான மேஷ ராசிக்கு மாறியிருப்பது மிக நல்ல கிரக மாறுதலாகும். வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். வீண் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும். நெருங்கிய உறவினர் ஒருவரின் வருகை, மன நிறைவையளிக்கும். திருமண முயற்சிகளுக்கு, குரு பகவானின் சஞ்சார நிலை வெற்றியைத் தேடித் தருகிறது. ஆரோக்கியம் அபிவிருத்தியை அடையும். பிள்ளை அல்லது பெண் ஒருவருக்குப் படிப்பு முடிந்து நல்ல வேலையில் அமரும் பேறும் கிட்டும். முயற்சிகள் வெற்றிபெறும். ஒருசிலருக்கு சொந்த வீடு அமையும் பாக்கியம் உள்ளதை செவ்வாய் மற்றும் அவரது வீட்டில் அமர்ந்துள்ள குருவின் நிலை எடுத்துக்காட்டுகின்றன. குடும்பத்தில், உபநயனம், நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நிகழ சாத்தியக்கூறு உள்ளது.

உத்தியோகம்: மிகவும் அனுகூலமான பலன்கள் அளிக்கவுள்ளார், மேஷ ராசியில் அமர்ந்துள்ள குரு! பலருக்குப் பதவியுயர்வும், ஊதிய உயர்வும் காத்துள்ளன!! வேலைக்கு முயற்சித்துவரும் மீன ராசியினருக்கு, மனத்திற்குத் திருப்தியளிக்கும் வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டுமென்ற ஆர்வமிருப்பின், அதற்கான முயற்சிகளில் இப்போது ஈடுபடலாம். வேலை மாற்றத்திற்கு முயற்சிக்கும் மீன ராசி அன்பர்களுக்கு, நல்ல நிறுவனத்தில் வேறு வேலை கிடைக்கும். வேலையில்லாமல் அவதிப்படும் இளைஞர்களுக்கு சிறு முயற்சியிலேயே நல்ல வேலை கிடைக்கும்.

தொழில், வியாபாரம்: தன ஸ்தானத்தில் உங்கள் ராசி நாதன் அமர்ந்திருப்பதால், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உற்பத்தியை அதிகரிப்பதற்கு அனுகூலமாக அமைந்துள்ளன கிரக நிலைகள். ஒரு சிலர் தொழில் சம்பந்தமாக வெளிநாடு சென்று வரும் சாத்தியக்கூறு இருப்பதையும் குரு பகவானின் மேஷ ராசி சஞ்சார நிலை உறுதி செய்கிறது. ஏற்றுமதித் துறையினருக்கு, அவர்களே எதிர்பாராத அளவிற்கு, வெளிநாட்டு ஆர்டர்கள் கிடைக்கும். குறிப்பிட்ட காலத்திற்குள் சரக்குகளை அனுப்பி வைக்க முயற்சி செய்யுங்கள். இதை ஏன் கூறுகின்றோம் என்றால், மேஷ ராசியில் அமர்ந்துள்ள ராகுவினால், தடங்கல்கள் ஏற்படக்கூடும். மேலும், இந்திய நாணயத்தின் மதிப்பு அமெரிக்க டாலரின் ஏற்ற, இறக்கத்தினால் பாதிக்கப்படுவதால், சில தருணங்களில் பணப் பிரச்னை இருக்கக்கூடும்.

கலைத் துறையினர்: கலைத் துறையினருக்கு, குரு பகவானின் துணை எப்போதும் உண்டு! குருவின் மேஷ ராசி சஞ்சார காலத்தில், ஏராளமான திருக்கோயில்களுக்கு திருப்பணி முடிந்து, குடமுழுக்கு வைபவம் நிறைவேறும். சிற்பிகள், ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள், ஓதுவாமூர்த்திகள், பஜனை கோஷ்டியினர், நாதஸ்வர வித்வான்கள், சித்திரம் எழுதுவோர் அதிக நன்மைகளைப் பெற்றுத் திகழ்வார்கள். தெய்வீகச் சரித்திரங்களையும் நிகழ்ச்சிகளையும் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்கள் நல்ல வசூலைப் பெற்றுத் தரும்.

அரசியல் துறையினர்: மீன ராசியில் பிறந்துள்ள அரசியல் துறையினருக்கு, குரு பகவானின் ஆசி முழுமையாக உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. மூத்த தலைவர்களின் ஆதரவு, கட்சிப் பணிகளில் உற்சாகத்தையளிக்கும். தொண்டர்களின் ஆதரவும், துணைநிற்கும். சூரியனும், குருவுடன் இணைந்திருப்பதால், உங்கள் அரசியல் வாழ்க்கையில், ஓர் முக்கிய திருப்புமுனையாக அமையவுள்ளது.

மாணவ, மாணவியர்: மாணவ, மாணவியருக்கு குரு பகவானின் இதயத்தில் என்றுமே ஓர் தனி இடம் உண்டு! கோள்சாரத்தில் அவர் மேஷ ராசியில் சிறந்த சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், மீன ராசி மாணவ மணிகள் கிரகிப்புத் திறனுடனும், நினைவாற்றலும் கொண்டு திகழ்வர், குருவின் மேஷ ராசி சஞ்சார நிலை! உயர் கல்விக்குப் பண உதவி எளிதில் கிட்டும். பலருக்கு, படிப்பு முடிந்தவுடன் நேர்முகத் தேர்வுகளில் நல்ல உத்தியோகம் கிடைக்கும். கொடுப்பதில் அளவோடு இருப்பினும், குரு பகவான் தயங்காது கொடுத்தருள்வார். இந்த ஜோதிட உண்மையை மீன ராசி அன்பர்கள் இப்போது அனுபவத்தில் காண்பர்!

விவசாயத் துறையினர்: மேஷம் விவசாயத் துறைக்கு அதிபதியான செவ்வாயின் ஆட்சி வீடாகும். அதில் குரு அமரும்போது குரு – மங்கள யோகம் ஏற்படுகிறது. பயிர்கள் செழித்து வளரும்.வருமானமும் குறைவி்ன்றிக் கிடைக்கும். விரய ஸ்தானத்தில் பலம் வாய்ந்த சனி இருப்பதால், கால்நடைகளின் பராமரிப்பில் பணம் விரயமாகும்.

ெபண்மணிகள்: குரு பகவானின், மேஷ ராசி சஞ்சாரக் காலம், பெண்மணிகளுக்குப் பல நலன்களை அளிக்கவுள்ளது. குடும்ப நிர்வாகத்தில் எவ்விதப் பிரச்னையும் இல்லாது பார்த்துக்கொள்வார், குரு! பல பெண்மணிகள் கருத்தரிப்பதற்கு ஏற்ற நேரமிது!! உத்தியோகம் காரணமாக, வெவ்வேறு ஊர்களில் தனித்திருக்கும் பெண்மணிகள், தங்கள் கணவருடன் சேர்ந்து மகிழ்வார்கள். திருமண வயதிலுள்ள பெண்மணிகளுக்கு, நல்ல வரனை அமைத்துத் தருவார் குரு பகவான்! வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு, ஊதிய உயர்வு, தவறாமல் கிடைக்கும். வேலைக்கு முயற்சித்துவரும் நங்கையருக்கு மனத்திற்குப் பிடித்த வேலை கிடைக்கும்.

அறிவுரை: குரு பகவான், மிகச் சி்றந்த சுபபலம் பெற்றிருந்தாலும், விரயஸ்தானத்தில் சனி பகவான் பலத்துடன் அமர்ந்திருப்பதால், கடின உழைப்பும், வெளியூர்ப் பயணங்களும் சிறு, சி்று உடல்உபாதைகளும் வருத்தும். ஆதலால், அதிக உடலுழைப்பைக் குறைத்துக்கொள்ளுங்கள். வீண் கவலைகளைத் தவிர்த்துவிடுங்கள்.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில், நெய் தீபமும், சனிக்கிழமைகளில் எள் எண்ணெய் தீபமும் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ அல்லது உங்கள் வீட்டுப் பூஜையறையிலோ ஏற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வழக்கமாக பூஜையறையில் ஏற்றிவரும் தீபத்தைத் தவிர கூடுதலான பரிகார தீபமாகும் இது! சென்னையை அடுத்து செட்டிப் புண்ணியம் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள யோக ஹயக்ரீவரை மாணவ, மாணவியர் தரிசித்துவிட்டுவருவது நற்பலன்களை அதிகரிக்கச் செய்யும். திருச்சியை அடுத்த குணசீலம் திருத்தல தரிசனம் மிகவும்சக்திவாய்ந்த பரிகாரங்களில் முதன்மையானதாகும், நவபிருந்தாவன தரிசனம் மகத்தான புண்ணிய பலன்களைத் தரவல்லது.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us