மிதுனம்

22-4-2023 முதல் 13-4-2024 வரை

(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)

குடும்பம்: லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் மற்றும் ராகு ஆகிய மூவரும் சேர்ந்திருக்கும் தருணத்தில், குரு பகவானும் அவருடன் இணைவது மிகச் சிறந்த யோக பலன்களை உங்களுக்கு அளிக்கவுள்ளது. மேலும் பாக்கிய ஸ்தானத்தில், சனி பகவான் அமர்ந்திருப்பதும் நன்மையே! ராசிக்கு 3, 5, 7ம் இடங்களை குரு பார்ப்பதும், நன்மைகளையே தரும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். முயற்சிகள் அனைத்தும் கைகூடும். புதிய வஸ்திரம், ஆடைகள், ஆபரணங்கள் சேரும் யோகம் அமைந்திருப்பதை குருவின் மேஷ ராசி சஞ்சாரம் குறிப்பிட்டுக் காட்டுகிறது. பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெறலாம். குடும்பத்தில், சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். திருமண வயதில் பெண் அல்லது பிள்ளைகள் இருப்பின், சிறு முயற்சியிலேயே நல்ல வரன் அமையும். நீதிமன்ற வழக்குகளில், சாதகமான தீர்ப்பினை எதிர்பார்க்கலாம்.

உத்தியோகம்: லாப ஸ்தானத்தில் குரு மாறியிருப்பதால், உத்தியோகம் காரணமாக பிரிந்திருக்கும் கணவர் – மனைவியர் ஒன்று சேர்வர். வெளிநாடுகளில் வசித்துவரும் மிதுன ராசி தம்பதியினருக்கு, இது மிகவும் பொருந்தும். பணியாற்றும் இடத்தில், மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். பல நிறுவனங்களில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஊழியர்களுக்குப் புதிய வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று, பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் இருப்பின், ஆவணி மாதம் 7ம் தேதிக்கு மேல் முயற்சிக்கலாம். வெற்றி கிட்டும்.

தொழில், வியாபாரம்: வரும் சுமார் ஒரு வருடக் காலம் நல்ல யோக பலன்களை அளிக்கக்கூடிய நிலையில், குரு பகவான் சஞ்சரிக்கின்றார். கொடுப்பதில் ராகுவிற்கு நிகரில்லை என்பது ஜோதிட வாக்கு! அத்தகைய யோக ராகுவுடன் லாப ஸ்தானத்தில் குரு சேர்வது, மிகச் சிறந்த பலன்களை அளிக்கக்கூடிய நிலையாகும். எதிர்பாராத இடங்களிலிருந்து, உதவிகள் தேடிவரும். அவரவரது ஜாதகத்தின் கிரக நிலைகளின்படி, அதிர்ஷ்டபலன்கள் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சிக்கும் மிதுன ராசியினருக்கு, முதல் முயற்சியிலேயே நல்ல வேலை கிடைத்துவிடும். வெளிநாடு சென்று, வேலை பார்ப்பதற்கு ஆர்வமிருப்பின், அதற்கு முயற்சிக்க மிகவும் தகுந்த காலகட்டமிது.

கலைத்துறையினர்: கலைத் துறை அன்பர்களுக்கு, சுக்கிரன்தான் அதிபதியாவார். அவர், சோபகிருது ஆண்டின் உப தலைவர் (மந்திரி) ஆவார். ஆதலால், இந்தப் புத்தாண்டில் அதிக உழைப்பும், அலைச்சலும் இருப்பினும், அதற்கான நல்ல பலனும் குறைவில்லாது கிடைக்கும் என ஜோதிட நூல்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன. திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் ஆகியோருக்கு புதிய வாய்ப்புகளும், அதன் மூலம் வருமானமும் உயரும். நிதி நிறுவனங்களின் உதவி உங்்களைத் தேடி வரும். புதிதாக சினித் துறையில் அடியெடுத்து வைக்க விருப்பமுள்ள மிதுன ராசியினர், அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.

அரசியல்துறையினர்: குரு பகவானின் இந்த மேஷ ராசி மாறுதல், மிதுன ராசி அரசியல் துறையினருக்கு, நல்ல முன்னேற்றத்தை அளிக்கவுள்ளது. கட்சியில் ஆதரவும், செல்வாக்கும் ஓங்கும். பாக்கிய ஸ்தானத்தில் சனி பகவான், அவரது ஆட்சி வீட்டில் சுப பலம் பெற்றுத் திகழ்வதால், அரசாங்கப் பதவியொன்றில் அமர்வதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

மாணவ, மாணவியர்: மிகவும் அனுகூலமான காலகட்டத்தில் நீங்கள் இருப்பதை குருவின் சஞ்சார நிலை மிகத் தெளிவாகவும், உறுதியாகவும் எடுத்துக்காட்டுகிறது. பாடங்களில், ஆர்வம் மிகும். குறிப்பாக, தொழில் துறை, கணினித் துறை, பொறியியல் துறை ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கு, கல்வி முடிந்தவுடன் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு, வெளிநாட்டு நிறுவனங்களில் கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

விவசாயத் துறையினர்: குருவும், விவசாயத் துறைக்கு அதிபதியான செவ்வாயும் நட்புக் கிரகங்களாவர். மேலும், இந்த ஆண்டின் மேகாதிபதியும் குரு பகவான்தான்! ஆதலால், காலத்தில் மழை பொழியும். தண்ணீர்ப் பஞ்சமிராது. தான்யாதிபதியான சனி பகவானும் இத்தருணத்தில் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தி்ல் அமர்ந்திருப்பது, மேலும் பல நன்மைகள் கிடைப்பதற்கு ஆதாரமாக விளங்குகின்றது. கால்நடைகள் சிறந்த அபிவிருத்தியை அடையும். வயல்கள் செழித்து வளரும். அரசாங்க உதவிகள் எளிதில் கிட்டும்.

பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களைப் பாதுகாக்கும் குரு, சுக்கிரன் ஆகிய இருவருமே அனுகூல நிலைகளில் சஞ்சரிப்பதால், இந்த ஆண்டு “பெண்மணிகளின்” ஆண்டு என்றே கூறலாம். அனைத்து அம்சங்களிலும், நன்மைகள் ஏற்படும். ஆரோக்கியம் திருப்திகரமாகவே இருக்கும். உடல் உபாதைகள் நீங்கும். குரு பகவான், இடையில் சிறிது காலம் வக்கிர கதியில் செல்வது பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். ஏனெனில், அதிசார கதியிலும், வக்கிர கதியிலும் குருவிற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என புராதன ேஜாதிட கிரந்தங்கள் கூறுகின்றன. திருமண வயதை அடைந்துள்ள கன்னியருக்கு, மிக நல்ல வரனை அமைத்துத் தருவார், குரு பகவான்!

அறிவுரை: குருவுக்கென்று எந்தப் பரிகாரமும் உங்களுக்கு அவசியமில்லை! அந்த அளவிற்கு குரு பகவான் லாப ஸ்தானத்தில் சுப பலம் பெற்று அமர்ந்துள்ளார். அவரால் ஏற்படவுள்ள நன்மைகளைப் பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பரிகாரம்: குரு பகவானுக்கென்று பரிகாரம் எதுவும் இந்த ஆண்டு அவசியம் கிடையாது. தினமும் வியாஸ பகவான் அருளியுள்ள குரு தியான ஸ்லோகத்தை தினமும் சொல்லி அவரைப் பூஜித்து வந்தால், நன்மைகள் பல மடங்கு அதிகரிக்கும்.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us