கும்பம்

22-4-2023 முதல் 13-4-2024 வரை

(அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)

குடும்பம்: கும்ப ராசிக்கு, வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றிற்கு, ஆதிபத்தியம் கொண்டவர் குரு பகவான்! அவர், ராசிக்கு திருதீய ஸ்தானமாகிய மேஷத்திற்கு மாறியிருப்பது, நன்மைகளை அளிக்கக்கூடிய நிலையல்ல!! குடும்பப் பொறுப்புகள் காரணமாக, அதிக அலைச்சல், கடின உழைப்பு ஏற்படும். உடலில் அசதியும், சோர்வும் உண்டாகும். மேலும், ஜென்ம ராசியில் தனது ஆட்சி வீட்டில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். அடிக்கடி ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். வரவிற்கு மீறிய செலவுகள் கவலையை அளிக்கும். திருமண முயற்சிகளில் தடங்கல்களும், தாமதங்களும் ஏற்படும். களத்திர, பாக்கிய, லாபஸ்தானங்களுக்கு, குருவின் பார்வை இருப்பதால், பிரச்னைகள் அனைத்தும் அளவோடு நிற்கும்.

உத்தியோகம்: பணிகளில் கவனமாக இருக்கவேண்டியதன் அவசியத்தை குருவின் மேஷ ராசி சஞ்சார நிலை எடுத்துக்காட்டுகிறது. நண்பர்களுக்கோ அல்லது சக ஊழியர்களுக்கோ உதவுவதற்காக, ஜாமீன் கையெழுத்துப் போடுவது அல்லது கடன் வாங்கி உதவி செய்வது ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மேலதிகாரிகளுடன் பழகுவதில், அளவோடு இருப்பது அவசியமாகும். நிறுவனம் சம்பந்தமான விஷயங்களை விவாதிக்கும்போது, உங்கள் கருத்துதான் சரி என வாக்குவாதம் செய்ய வேண்டாம். ஏனெனில் ஜென்ம ராசியில் சனி அமர்ந்துள்ள நிலையில், குருவும் அனுகூலமற்ற மேஷ ராசியில் நிலைகொண்டிருப்பது, புதிய பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடிய கிரக நிலையாகும். சிலருக்கு, நியாயமாக நிர்வாகத்தினர் கொடுக்கவேண்டிய ஊதிய உயர்வு, பதவியுயர்வு, சலுகைகள் மறுக்கப்படும். அத்தகைய தருணங்களில் பொறுமை, சாதுர்யம் அவசியம். சக ஊழியர்களுடன் உங்கள் பிரச்னைகள் பற்றி விவாதிக்க வேண்டாம். அன்றாடப் பணிகளில் நீங்களுண்டு உங்கள் பணிகளுண்டு என்று அனைத்து விஷயங்களிலிருந்தும் ஒதுங்கியிருப்பது உங்கள் எதிர்காலத்திற்கு நன்மை செய்யும்.

தொழில், வியாபாரம்: போட்டிகள் கடுமையாகும். அன்றாட விற்பனையில் பின்னடைவு ஏற்படும். சந்தை நிலவரம் கவலையை அளிக்கும். அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதால், வர்த்தகமும் வருமானமும் பாதிப்பிற்குள்ளாகும். சீன நாட்டிலிருந்து, அதிக பொருட்கள் இறக்குமதியாவதால், நமது ஏற்றுமதி குறையக்கூடும். பல தொழிற்சாலைகளில் உற்பத்திப் பொருட்கள் தேங்கிவிடும். சில தருணங்களில், நிதிப் பற்றாக்குறையினால், பிரச்னைகள் கடுமையாக இருக்கும்.

கலைத் துறையினர்: வருமானம் அளவோடு நிற்கும். வாய்ப்புகள் கனிசமாகக் குறையும்.வசதிகளையும், ஆடம்பரச் செலவுகளையும் குறைத்துக்கொள்வது நல்லது. திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, பண வசதி கிடைப்பதில் பிரச்னைகள் ஏற்படும். திரைப்படத்் தயாரிப்புகள் பாதியில் நின்றுபோகும்.

அரசியல் துறையினர்: கிரக நிலைகள் சாதகமாக இல்லை, மனத்தில் ஏற்பட்ட குழப்பமும், தெளிவற்ற நிலையும் நீடிக்கின்றன. எச்சரிக்கையுடன் இருப்பது மிக, மிக அவசியம். கூடிய விரைவில், மாற்றுக் கட்சித் தலைவர்களைப் பற்றி தரக்குைறவாகப் பேசாமலிருப்பது, விவேகமாகும். இல்லாவிடில், மன நிம்மதியை இழக்க நேரிடும்.

மாணவ, மாணவியர்: குரு பகவானின் மேஷ ராசி சஞ்சாரக் காலம், உங்கள் கல்வியைச் சிறிதளவும் பாதிக்காது! ஏனெனில், கல்வித் துறைக்கு அதிபதியான புதனும், கும்ப ராசியின் வித்யா ஸ்தானமும் தோஷமில்லாமல் இருப்பதே காரணமாகும்!! வழக்கம்போல் உங்கள் பாடங்களில் மனத்தைச் செலுத்துங்கள். ஜென்ம ராசியில் சனி பகவான் இருப்பதால், இரவில் வெகுநேரம் கண்விழித்துப் படிக்க வேண்டாம். உடல் நலனிலும் சற்று கவனம் இருக்கட்டும்.

விவசாயத் துறையினர்: செவ்வாய் உங்களுக்கு அனுகூலமாக நீடிப்பதால், விளைச்சலும் வருமானமும் திருப்திகரமாகவே இருக்கும். ஆயினும், ஜென்ம ராசியில் பலம் வாய்ந்த ராகு இருப்பதால், வயல் பணிகளில் கடுமையாக உழைக்க நேரிடும். இரவு நேரப் பணிகளின்போது, விஷ ஜந்துக்களால் ஆபத்து நேரிடக்கூடும். ஆதலால், எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம்.

பெண்மணிகள்: கும்ப ராசியின் வாக்கு, தனம், குடும்பம் ஆகிய ராசிகளுக்கு, குரு பகவான்தான் அதிபதியாவார்! ஆதலால், குடும்பப் பொறுப்பிலுள்ள பெண்மணிகளுக்கு, அதிகக் கஷ்டங்கள் ஏற்படாது. சிறு, சிறு உடல் உபாதைகளைத் தவிர மற்றபடி, ஆரோக்கியம் திருப்திகரமாகவே இருக்கும். வரனுக்குக் காத்துள்ள கன்னியருக்கு, மனதிற்குப் பிடித்த மணாளன் அமைவது தாமதமாகும். நெருங்கிய உறவினர்களுடன் விட்டுக்கொடுத்து, அனுசரித்து நடந்துகொள்வது வீண் பிரச்னைகள் ஏற்படாதவாறு தவிர்ப்பதற்கு உதவி செய்யும்.

அறிவுரை: நண்பர்கள், உறவினர் ஆகியோர் எவ்வளவுதான் நீங்கள் உணர்ச்சிவசப்படும்படி நடந்துகொண்டாலும், நிதானத்தை இழந்துவிடாதீர்கள்! இறுதியில் வெற்றி பெறுபவர் நீங்களாகவே இருப்பீர்கள்!!

பரிகாரம்: 12 வியாழக்கிழமைகள் அருகிலுள்ள திருக் கோயில் ஒன்றில் தீபத்தில் சிறிது பசு நெய் சேர்த்து, தரிசித்துவிட்டு வந்தால் போதும். தோஷங்கள் விலகிச் சென்றுவிடும். 2. ஒருமுறை ஸ்ரீவில்லிபுத்துார் திருத்தலத்தில் எழுந் தருளியிருக்கும் ஆண்டாள்-ரங்க மன்னார் தரிசனம் மகத்தான புண்ணிய பலனைக் கொடுக்கக் கூடியதாகவும் அமையும்; அதேசமயம் நல்லதொரு பரிகாரமாகவும் அமைந்து, நல்வாழ்வளிக்கும்.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us