(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)
குடும்பம்: குரு பகவானின் ஸப்தம (7-ம் இடம்) சஞ்சார காலம் பல நன்மைகளை உங்களுக்கு அளிக்கவுள்ளது. மேலும், உங்கள் ஜென்ம ராசி, லாப ஸ்தானம் மற்றும் மகரம் ஆகிய இடங்களை, தனது பார்வையினால், பல நன்மைகளை அளிக்கவுள்ளர், வரும் ஒரு வருடக் காலத்திற்கு, குரு பகவான்! கணவர் – மனைவியரிடையே ஒற்றுமையும் பரஸ்பர அந்நியோன்யமும் ஏற்படும். ஆேராக்கியம் அபிவிருத்தியடையும். திருமண முயற்சிகளுக்கு, மிகச் சிறந்த ஆண்டாகும் இது, குரு பகவானின் சுப பல சஞ்சாரத்தினால்!! குடும்பத்தில், நிச்சயதார்த்தம், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நிகழும். இவற்றின் காரணமாக, செலவுகள் அதிகமாக இருப்பினும், வருமானம் போதிய அளவிற்கு இருப்பதால், பிரச்னை எதுவும் ஏற்பட வாய்ப்பில்ைல. கருவுற்றிருக்கும் பெண்களுக்கு, சுபப் பிரசவம் உறுதி. உத்தியோகம் காரணமாக, வெளிநாடுகளில் பிரிந்திருக்கும் பிள்ளை அல்லது பெண் ஆகியோரின் எதிர்பாராத வரவு, குடும்பத்தை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். ஒருசிலருக்கு, வசதியான வீட்டிற்கு மாற்றம் ஏற்படும்.
உத்தியோகம்: அர்த்தாஷ்டக ராசியில், சனி பகவான் அமர்ந்திருப்பதால், ேவலைச் சுைமயும், பொறுப்புகளும் அதிகமாக இருக்கும். குரு பகவானின் பார்ைவ விேசஷத்தினால், பதவியுயர்வு ஒன்றும் ஊதிய உயர்வும் கிட்டும். வேலையில்லாத விருச்சிக ராசியினருக்கு, சிறு முயற்சியிலேேய மனத்திற்கு திருப்தியளிக்கும் நல்ல ேவலை கிைடக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு, பணி நிரந்தரமாகும் யோகம் உள்ளது.
தொழில், வியாபாரம்: அர்த்தாஷ்டக சனியினால், சந்தையில் நியாயமற்ற போட்டிகள் கடுமையாக இருக்கும். இருப்பினும், லாபம் ஒரே சீராக இருக்கும். நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை. லாப ஸ்தானத்திற்கு குரு பகவானின் பார்வை கிடைப்பதால், நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிட்டும். விற்பனை அபிவிருத்திக்காக, கடன் வாங்குவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். சனி பகவான் மட்டுமல்ல, ராகுவும் அனுகூலமாக இல்லாததால், கடன் வாங்குவதையும், கடன் கொடுப்பதையும் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும். வாங்கினால், வளரும்! கொடுத்தால், திரும்பி வராது…!! எனக் கூறுகின்றன, மிகப் பழைமையான ஜோதிடக் கிரந்தங்கள். இத்தகைய முக்கிய தருணங்களில், இருட்டில் வழிகாட்டும் ஒளிவிளக்குபோல், நமக்கு எச்சரிக்கை செய்து, காப்பாற்றுகிறது, ஜோதிடம் எனும் ஒப்புயர்வற்ற காலக் கண்ணாடி!!
கலைத்துறையினர்: வரும் ஒரு வருடக் காலத்திற்கு, குரு பகவானால் பல நன்மைகள் உங்களுக்கு எற்படும். கணவர் – மனைவியரிடையே ஒற்றுமை ஓங்கும். வருமானம் உயரும். புதிய வாய்ப்புகள் அதிக முயற்சியின்றி கிடைக்கும். திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, அனுகூலமான மாதமிது! ஏனெனில், கலைத் துறைக்கு அதிபதியான, சுக்கிரனின் வீட்டில் அமர்ந்துள்ள குரு பகவான், விருச்சிக ராசிக்கு, லாப ஸ்தானமாகிய கன்னி ராசியை, ஐந்தாம் பார்வையாகப் பார்க்கிறார். வருமானத்தை உயர்த்துவார், குரு! மக்களிடையே செல்வாக்கும், ஆதரவும் உயரும்.
அரசியல்துறையினர்: இந்த குரு பகவானின் ரிஷப கால சஞ்சாரக் காலம், தக்க தருணத்தில் நிகழ்ந்துள்ள, ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். சனி பகவானின் அர்த்தாஷ்டக சஞ்சார நிலையினால், அலைச்சலும், போட்டிகளும் அதிகமாக இருக்கக்கூடும். இருப்பினும், வெற்றிக்கனி உங்கள் மடியில்…!!
மாணவ – மாணவியர்: குரு பகவானின் ஒரு வருட சஞ்சாரக் காலம், உங்கள் கல்வி முன்னேற்றத்திற்குத் துணை நிற்கும் என்பதே கோள்சார விதிகள் எடுத்துக்காட்டும் உண்மையாகும்.
உயர்கல்விக்கு உங்கள் விருப்பப்படி இடம் கிடைக்கும். மேல் படிப்பிற்கு, உதவி கிடைக்கும். நேர்முகத் தேர்வுகளில், பங்கேற்பதற்கு, குரு பகவானின் பார்வை பலமும், சஞ்சார பலமும் துணை நிற்கும்.
விவசாயத் துறையினர்: சனி பகவான் ஒருவரால், வயல் பணிகளில் உழைப்பு கடினமாக இருக்கும். ஆயினும், உழைப்பிற்கேற்ற விளைச்சலும், வருமானமும் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெறலாம். ஜனன கால கிரக நிலைகள் சுப பலம் பெற்றிருப்பின், சிறு புதிய விளைநிலம் வாங்கும் யோகமும் அமைந்திருப்பதை, குருவின் சஞ்சார நிலை குறிப்பிட்டுக்காட்டுகிறது. கால்நடைகளும் சிறந்த அபிவிருத்தியை அடையும்.
பெண்மணிகள்: குரு, சுக்கிரன் ஆகிய இருவருமே உங்களுக்கு அனுகூலமாக நிலைெகாண்டுள்ளனர், ஓராண்டிற்கு! வருமானமும் போதிய அளவிற்கு இருப்பதால், குடும்ப நிர்வாகத்தில், எவ்விதப் பிரச்னையும் இராது. லாப ஸ்தானத்திற்கு குரு பகவானின் பார்வை ஏற்பட்டிருப்பினும், மேலும் ஏற்படவிருக்கும் நன்மைகளை எடுத்துக்காட்டுகிறது.
அறிவுரை: சிக்கனமாக இருந்து, சிறிது பாடுபட்டால், சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற உங்கள் நெடுநாளைய ஆசை இப்புத்தாண்டில் நிறைவேறும் என்பதை கிரக நிலைகள் உறுதி ெசய்கின்றன. ஆதலால், சிக்கனமாக இருந்து, உங்கள் நெடுநாளைய ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.
பரிகாரம்: சனி பகவான், ராகு ஆகிய இருவருக்கும் பரிகாரம் செய்வது மிகவும் நல்லது. திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, திருநாகேஸ்வரம் தரிசனம் மிகவும் ஏற்றது. இயலாத அன்பர்கள், வாரந்தோறும், மூன்று மாதங்களுக்கு, ஏழை ஒருவருக்கு அன்னதானம் செய்வித்தால், கைமேல் பலன் கிட்டும்.
அருகிலுள்ள எந்த சிறு கோயினாலும் சரி, மாலையில் மண் அகல் விளக்கில் நெய் ேசர்த்து தீபம் ஏற்றிவைத்தால் அல்லது தூங்கா விளக்கில் நெய் ேசர்த்து தரிசித்துவிட்டு வந்தால் அதியற்புத பலன் கிட்டும். இதை அனுபவத்தில் காணலாம்.