தனுசு

Published: Last Updated on

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)

குடும்பம்: குரு பகவானின் ரிஷப ராசி சஞ்சாரம், உங்களுக்கு நன்மை செய்யாது! செலவுகளைத் திட்டமிட்டு, கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். “ஆறில் குரு, ஜீவ நதியையும் வற்றச் செய்யும்…!” -என்பது மகரிஷிகளின் வாக்காகும். எவ்வளவுதான் வருமானம் இருப்பினும், அத்தனை பணமும் எங்கு போயிற்று? -என்று நீங்களே வியப்படையும் அளவிற்கு செலவழியும். வீண் செலவுகள், திடீர்ச் செலவுகள், தவிர்க்க இயலாதவை என பல வழிகளிலும் பணம் விரயமாகும். சில தருணங்களில் கடன் வாங்குவதைத் தவிர்க்க இயலாது. திருமண முயற்சிகளில், தடங்கல்கள் ஏற்படும். கும்ப ராசியில், சனி பகவான் அமர்ந்திருப்பது, குரு பகவானால் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும். கணவர் – மனைவியரிடையே சிறு, சிறு அபிப்ராய பேதம் ஏற்பட்டு, பரஸ்பர அந்நியோன்யம் குறையும். நெருங்கிய உறவினரிடையே பகையுணர்ச்சி மேலிடும்.

உத்தியோகம்: உத்தியோகத்திற்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள சனி பகவான் அனுகூலமாக இருப்பினும், குரு பகவானின் சஞ்சார நிலை, சாதகமாக இல்லை. ராகுவும், அர்த்தாஷ்டகத்தில் நிலைகொண்டிருக்கிறார். கடினமாக உழைத்தும், நல்ல பெயர் கிடைப்பது கடினமே! உயரதிகாரிகளின் கண்டிப்பு, எதிர்காலத்தைப் பற்றி கவலையை ஏற்படுத்தும். இருப்பினும், சனி பகவான் சிறந்த சுப பலம் பெற்றிருப்பதால், உங்கள் வேலைக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. புதிய வேலைக்கு முயற்சித்துவரும் தனுர் ராசி அன்பர்களுக்கு, வேலை கிடைக்கும். ஆயினும், அதில் பூரண திருப்தியிராது.

தொழில், வியாபாரம்: குரு பகவானின் சஞ்சாரம், வர்த்தகத் துைறயினருக்கு சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். தனுர் ராசிக்கு, விருச்சிகம் ருண, ரோக, சத்ரு ஸ்தானமாக இருப்பதால், கடுமையான போட்டிகளும், பணப் பிரச்ைனகளும் கவலையை அளிக்கும். ஆயினும், ெதாழில் மற்றும் வியாபாரத் துறைகள், சனி பகவானின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. அத்தகைய சனி பகவான், சாதகமாக இருப்பதால், நல்ல விற்பனையும், லாபமும் திருப்திகரமாக இருக்கும். குரு பகவானின் நிலையினால், அதிக அைலச்சலும், அடிக்கடி வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்ல வேண்டிய அவசியமும், அதன் காரணமாக அசதியும் ஏற்படும். சிறு, சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு, உடல் ஓய்விற்குக் கெஞ்சும். ராசிக்கு ஆறாம் இடத்தில் குரு சஞ்சரிப்பதால், பண விரயம் அதிகமாகவே இருக்கும். வர ேவண்டிய பாக்கிகள் வசூலாவதில் பிரச்ைனகள் ஏற்படும்.

கலைத்துறையினர்: குரு பகவானின் ரிஷப ராசி சஞ்சார நிலை உங்களுக்கு அதிக அனுகூலத்ைதப் பெற்றுத் தர வாய்ப்பில்லை!! வருமானம் ஒரே சீராக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதில், தடங்கல்களும், தாமதங்களும் கவலையும் உண்டாகும். கிடைக்கும் வாய்ப்புகளிலும், வருமானம் எதிர்பார்ப்பை விடக் குறைவாகவே இருக்கும். அவசியமற்ற ெசலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். இல்லாவிடில், வருடக் கடைசியில் நிதி நெருக்கடி ஏற்படக்கூடும்.

அரசியல்துறையினர்: அர்த்தாஷ்டக ராசியில் ராகு, அமர்ந்துள்ள நிலையில், குரு பகவானின் ரிஷப ராசி மாறுதல், ஏற்படுகிறது! வரும் ஒரு வருட காலத்திற்கு, ரிஷப ராசியிலேயே தங்கியிருக்கிறார், வியாழன்!! அளவோடு நன்மைகள் ஏற்படும். மேல்மட்டத் தலைவர்களின் ஆதரவு உண்டு. ராகுவின் நிலை, உங்கள் கட்சியினரே உங்களுக்கு எதிராகச் செயல்படக்கூடும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

மாணவ – மாணவியர்: இந்த ஆண்டு முழுவதும், கல்வி முன்னேற்றம் ஒரே சீராக இருக்கும் என்பதை குரு மற்றும் புதனின் சஞ்சார நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. வியாழ பகவானின் ரிஷப ராசி சஞ்சாரம் கோள்சார விதிகளின்படி, உங்களுக்கு நன்மை செய்யாது. ஆயினும், புதனின் ஆதிக்கத்தில் உள்ள கல்வித் துறையை, குரு பகவான் பாதிக்கமாட்டார் என்பதை “பூர்வ பாராசர்யம்” எனும் மிகப் புராதனமான ேஜாதிட நூல் விவரித்துள்ளது.

விவசாயத் துறையினர்: வயல் பணிகளில் கடின உழைப்பு இருக்கும். பல தருணங்களில், பணத்தட்டுப்பாடு ஏற்படும். கால்நடைகளின் பராமரிப்பில், பணம் விரயமாகும். அதிக வெயிலினாலும், தேவைக்கு அதிகமான மழையினாலும் பயிர்கள் பாதிக்கப்படும்.

பெண்மணிகள்: குரு பகவானின் ரிஷப ராசி சஞ்சாரம், பெண்மணிகளுக்கு சிறு, சிறு பிரச்ைனகளை ஏற்படுத்தும். குடும்ப நிர்வாகத்தில், சிரமங்கள் ஏற்படும். கணவர் – மனைவியரிடையே அந்நியோன்யம் பாதிக்கப்படும். வெலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு, குடும்பக் கவலைகளும், பிரச்னைகளும் கவலையை அளிக்கும். திருமண வயதிலுள்ள கன்னியருக்கு, வரன் அைமவதில், தடங்கல்கள் உண்டாகும்.

அறிவுரை: ராகு மற்றும் குருவிற்கு பரிகாரம் அவசியம் செய்ய வேண்டும். வரும் ஒரு வருட காலத்திற்கு, பிரச்னைகள் ஏற்படும்போது, நிதானத்தையும், தன்னம்பிக்கையையும் இழந்துவிடாமல், பொறுமையாகவும், நிதானமாகவும் இருத்தல் அவசியம். ஒரு வருட காலம் ஓடிவிடும்.

பரிகாரம்: குரு மற்றும் ராகுவிற்கு பரிகாரம் அவசியம். பரிகாரத்திற்கு ராகுவை சனி பகவானாகக் கருத வேண்டும் என ஜோதிட கிரந்தங்கள் அறிவுறுத்துகின்றன. ஆதலால், சனிக் கிழமைகளில், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ அல்லது வீட்டின் பூஜையறையிலோ ஐந்து நல்லெண்ணெய் தீபங்களும், குரு பகவானுக்கு ஐந்து பசு நெய் தீபங்களும் ஏற்றி வருதல் வேண்டும். அற்புத பலன்கள் கிடைக்கும். 12 கிழமைகள் செய்தால் போதும். வரும் ஒரு வருட காலத்திற்கு, அதன் பலன் கிடைக்கும். இதனை அனுபவத்தில் உணர்வீர்கள். இயலாதவர்கள், தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும், லிகித ஜபமாகப் போற்றப்படும். நோட்டுப் புத்தகங்களில், “ராம ஜெயம்” ஆயிரத்து எட்டு முறைகள் எழுதி அந்தப் புத்தகத்திற்கு கற்பூர ஆரத்தி காட்டி, நமஸ்கரித்து வந்தால் போதும்.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us