கும்பம்

Published: Last Updated on

(அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)

குடும்பம்: கும்ப ராசிக்கு, ரிஷபம் அர்த்தாஷ்டக ராசியாகும்! அங்கு குரு பகவான் சஞ்சரிப்பது, நன்மை தராது. இருப்பினும், ஆயுள் ஸ்தானத்தையும், ஜீவன ஸ்தானத்தையும், விரய ஸ்தானத்தையும் தனது சுபப் பார்வையினால் பலப்படுத்துகிறார். வருமானம் போதுமான அளவிற்கு இருக்கும். முயன்றால், சிறிது சேமிக்கலாம். திருமண முயற்சிகளில், வரன் அமைவது தாமதப்படும். சிறு, சிறு உடல் உபாதைகள், ஆடி மற்றும், ஆவணி மாதத்தின் முதல் பகுதியில் ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால் குணமேற்படும். நெருங்கிய உறவினர்களிடையே நிலவும் சுமுக உறவு, கருத்துவேற்றுமையினால், பாதிக்கப்படக்கூடும். கணவர் – மனைவியரிடையே சிறு பிரச்னையினால், அந்நியோன்யம் குறையும். நீதிமன்ற வழக்குகள் இருப்பின், இழுபறி நிலை நீடிக்கும். சிறு விஷயங்களுக்குக்கூட, அதிகமாக பாடுபடவேண்டியிருக்கும். நண்பர்களுடன் நிலவி வந்த நட்பையும், அன்பையும் சிறு தவறினால், இழக்க நேரிடும்.

உத்தியோகம்: ஜென்ம ராசியில் சனி பகவான் அமர்ந்திருந்தாலும், அது அவரது ஆட்சிவீடாகும்! அலுவலகத்தில், பணிச் சுமை சக்திக்கு மீறியதாக இருக்கும். பலர், அடிக்கடி பொறுப்புகள் சம்பந்தமாக வெளியூர்களுக்குச் சென்றுவர நேரிடும். விற்பனை அதிகாரிகள் (sales exectuvies and sales representatives) வெளியூர்களுக்கு அடிக்கடி செல்ல வேண்டியிருப்பதால், குடும்பப் பொறுப்புகளை கவனிக்க இயலாது. ஆரோக்கியத்திலும் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. இருப்பினும், உழைப்பிற்கேற்ற ஊதியம் தந்தருள்வார், குரு பகவான்!! நிர்வாகத்தினர், உங்கள் திறமையைப் பாராட்டுவார்கள்.

தொழில், வியாபாரம்: கடினமான போட்டிகளை ஏற்படுத்துவார், ெஜன்ம ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான்! ஆயினும், அதற்கேற்ற லாபத்தையும், வருமானத்தையும் தந்தருள்வார், குருவும், சனியும். தன ஸ்தானத்தில், சஞ்சரிக்கும் ராகுவினால், ெசலவுகளும் அதிகரிக்கும். வரவேண்டிய பாக்கிகளை வசூலிப்பதில் பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக, ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலிருந்து வரவேண்டிய பாக்கிகளை வசூலிப்பதில் சிரமங்கள் ஏற்படும். புதிய ஆர்டர்களை ஏற்பதில், கவனமாக இருத்தல் அவசியம் என்பதை குருவின் நிலை வற்புறுத்திக்காட்டுகின்றது.

கலைத்துறையினர்: குரு பகவான் சஞ்சரிக்கும், ரிஷப ராசி, கலைத்துறைக்கு அதிபதியான சுக்கிரனின் வீடாகும். ஆதலால், வரும் ஒரு வருடக் கால ரிஷப ராசி சஞ்சாரம் குரு பகவானால், பல நன்மைகளை உங்களுக்கு சற்று தாராளமாகவே அளிக்கக்கூடிய காலகட்டமாகும். புதிய வாய்ப்புகள் அதிகரிக்கும். வருமானம் உயரும். நடிகை – நடிகர்களுக்குக் கடினமான பாத்திரங்களில் நடிக்கவேண்டிவரும். உடல் நலனிலும் கவனம் இருக்கட்டும். அதிக உழைப்பினாலும், நேரம் கெட்ட நேரத்தில் நடிக்கவேண்டி இருப்பதாலும், ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். எளிய சிகிச்சையினால், குணம் ஏற்படும்.

அரசியல்துறையினர்: சுக்கிரனின் ராசியில், குரு சஞ்சரிக்கும் காலம் உங்கள் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கிய தருணமாகும். பல கட்சிகளிலிருந்து, தங்கள் கட்சிகளில் சேருமாறு அழைப்புகள் வந்துகொண்டேயிருக்கும். தீர சிந்தித்து, முக்கிய முடிவு எடுப்பதற்கு குரு பகவானின் சஞ்சார நிலை உதவுகிறது.

மாணவ – மாணவியர்: ரிஷப ராசியில் அமர்ந்துள்ள குரு பகவான், வித்யா காரகரான புதனின் வீடான கன்னி ராசியைப் பார்வையிடுவதால், அஷ்டம ஸ்தான தோஷத்தைப் போக்கிவிடுகிறார், வரும் ஒருவருட காலத்திற்கு கல்வி முன்னேற்றம் எவ்வித பாதிப்புமின்றி நீடிக்கிறது. நினைவாற்றலும், கிரகிப்புத் திறனும் பலமாக துணை நிற்கின்றன, உங்களுக்கு!

விவசாயத் துறையினர்: வயல் பணிகளில், உழைப்பு கடுமையாக இருப்பினும், அதற்கேற்ற விளைச்சலையும், வருமானத்தையும் தந்தருள்வார், குரு பகவான்! தற்போது நிலவும் தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், சிறு விளை நிலம் ஒன்று சொந்தமாக வாங்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளதை குருவின் சஞ்சார நிலை குறிப்பிட்டுக்காட்டுகிறது. பழைய கடன்கள் இருப்பின், அவை நிவர்த்தியாகும். கால்நடைகளின் பராமரிப்பில், செலவுகள் அதிகரிக்கும். காரணம், ராகுவின் நிலையே!!

பெண்மணிகள்: குரு பகவானின் அர்த்தாஷ்டக ராசி சஞ்சார நிலை உங்களுக்கு அளவோடு நன்மை தரும். அதே தருணத்தில், சில பிரச்னைகளும் ஏற்படக்கூடும் – ராகுவின் நிலையினால்! ராகுவினால் ஏற்படும் சிரமங்களைக்கூட, குரு பகவான் பெருமளவில் குைறத்துவிடுகிறார். வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகளுக்கு, அலுவலகத்தில் கடினமாக உழைக்க நேரிடும். ஆயினும், அதற்கேற்ற கூலியை வாங்கிக் கொடுத்துவிடுவார், குரு பகவான்! ஜோதிடக் கலையின் விதிகளின்படி, குருவிற்கு அஷ்டம ராசி மற்றும் அர்்்த்தாஷ்டக சஞ்சார தோஷங்கள் கிடையாது என்றும் பிரசித்திப்பெற்ற ஜோதிடக் கிரந்தங்களில் கூறப்பட்டுள்ளது. சில ஜோதிட நூல்களில் இத்தோஷங்கள் குருவிற்கு மிக, மிகக் குறைவாகவே இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அறிவுரை: அதிக உழைப்பையும், வெளியூர்ப் பயணங்களையும் குறைத்துக் கொள்ளுங்கள். வெளியே செல்லும்போதும், வெளியூர்ப் பயணங்களின்போதும், அதிக பணத்தை எடுத்துக் செல்ல வேண்டாம். பணத்தை இழப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதை குருவின் நிலை எடுத்துக்காட்டுகிறது. சிக்கனமாகச் செலவு செய்யுங்கள். உணர்ச்சிவசப்படுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக உறவினர், நண்பர்களுடன் நிதானத்தை இழந்து பேசிவிடாமல் இருக்கவும்.

பரிகாரம்: 1. வியாழக்கிழமைதோறும், உங்கள் வீட்டின் பூஜையறையிலோ அல்லது திருக்கோயில் ஒன்றிலோ மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வந்தால், நல்ல பலன் கிட்டும். இந்தப் பரிகாரம், சூட்சும ஜோதிட கிரந்தங்களிலும், மந்திர சாஸ்திர பிரயோக முறைகளிலும் விவரிக்கப்பட்டுள்ளது. செய்வதற்கு எளிது, ஆனால், பலனோ அளவற்றது!! குரு பகவானின் திருவுள்ளத்திற்கு, மிகவும் பிடித்தது, இந்தப் பரிகாரம்.

வியாழக்கிழமைகளில் உபவாசம் இருப்பது தன்னிகரற்ற பரிகாரமாகும். முடியாதவர்கள், பால் – பழம் மட்டு்ம் சாப்பிடலாம். அருகிலுள்ள ஆலயம் ஒன்றில் எள் எண்ணெய் தீபம் ஏற்றி வைத்து, தரிசித்து வருவது அரிய பரிகாரமாகும்.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us