2.5.2024 முதல் 8.5.2024 வரை
சாதகங்கள்: குரு ஐந்தாம் இடத்தில் அமர்ந்து ராசியைப் பார்வையிடுவது சிறப்பு. இரண்டாம் இடத்தில் சனி ஆட்சி பெற்று இருக்கின்றார். ராசிநாதன் ஆட்சி பலத்தோடு இருப்பதாலும், மகர ராசிக்காரர்களுக்கு பெரிய பாதிப்பு செய்ய மாட்டார். மூன்றில் உள்ள ராகு மிகச் சிறந்த அமைப்பு. உப ஜெயஸ்தானத்தில் உள்ள சர்ப்ப கிரகம், தொழில் வருமானம் எதிர்பாராத வாய்ப்புகள் புகழ் முதலிய பல விஷயங்களை முன்னெடுத்து வெற்றியைத் தரும். பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்த ஞானகாரகனான கேது உங்கள் தெய்வ சிந்தனையை அதிகரித்து புனித பயணங்களுக்கு தூண்டுவார். அதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். கலைஞர்களுக்கு இழந்த வாய்ப்புகள் திரும்ப கிடைக்கும். அதன் மூலம் வருமானம் அதிகரிக்கும். அரசாங்க காரியங்களில் உள்ள தடை நீங்கும்.
கவனம் தேவை: வாக்கு ஸ்தானம் சனி என்று இருப்பதால் பேசுகின்ற வார்த்தைகளும் நினைக்கின்ற எண்ணங்களிலும் தூய்மை தேவை. தேவையில்லாத வார்த்தைகளை கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். கண்களை கவனித்துக் கொள்ளுங்கள். சகோதரர் உறவுகளில் உள்ள கருத்து வேறுபாடுகளை அதிகப்படுத்தி கொள்ள வேண்டாம்.
பரிகாரம்: கணபதியை வணங்க கவலைகள் அகலும். சனிக்கிழமை அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வாருங்கள். நல்லது நடக்கும்.