ரிஷபம்

14-4-2024 முதல் 13-5-2024 வரை

(கிருத்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)

குடும்பம்: சித்திரை 18-ம் தேதி குரு பகவான் ஜென்ம ராசிக்கு மாறுகிறார். அந்தத் தேதியிலிருந்து, பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய கன்னியையும், களத்திர ஸ்தானமாகிய விருச்சிகத்தையும், பாக்கிய ஸ்தானமாகிய மகரத்தையும் தனது சுபப் பார்வையினால், பலப்படுத்துகிறார். மாதம் முழுவதும் சுக்கிரனும், ராகுவும் உங்களுக்கு ஆதரவாக நிலைகொண்டுள்ளனர். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி மற்றும் செவ்வாயின் கூட்டுச் சேர்க்கை உள்ளது. வருமானம் திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் குறையும். மாதத்தின் மூன்றாவது வாரத்திலிருந்து, வீண் அலைச்சலும், உழைப்பும். ேதவையற்ற செலவுகளும் அதிகமாக இருக்கும். சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், ஆரோக்கியத்தில் சிறிது பின்னடைவு ஏற்படக்கூடும். ஜென்ம ராசி குருவினால், கணவர் – மனைவியரிடையே அந்நியோன்யம் குைறயும். வெளியூர்ப் பயணங்களில் சென்ற காரியம், நிறைவேறாது. திருமண முயற்சிகளில், தடங்கல் ஏற்படும்.

உத்தியோகம்: உத்தியோகத்தைக் குறிப்பிடும் கும்ப ராசியில் செவ்வாய், சனி பகவானின் கூட்டுச் சேர்்க்கை ஏற்பட்்டுள்ளது. வேலை பார்க்குமிடத்தில் உழைப்பு கடினமாக இருக்கும். கும்பம், சனிபகவானின் ஆட்சி வீடாக இருப்பதாலும், லாப ஸ்தானத்தில், சுக்கிரன் – ராகு சேர்க்கை ஏற்பட்டுள்ளதாலும், நிர்வாகத்தினரின் பாராட்டுதல்களும், ஆதரவும் கிட்டும். ஜெனனகால தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், பதவியுயர்வும், ஊதிய உயர்வும், கூடுதல் சலுகைகளும் கிட்டும். ஒருசிலருக்கு, வெளியூர் மாற்றமும் ஏற்படக்கூடும். வெளிநாடு சென்று, பணியாற்ற விருப்பமிருப்பின், முயற்சிக்கலாம், வெற்றி கிட்டும். புதிய வேலைக்கு முயற்சிக்க கிரக நிலைகள் சுப பலம் பெற்றுள்ளன.

தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறைக்குத் தொடர்புள்ள அனைத்து கிரகங்களும் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிப்பதால், நல்ல அபிவிருத்தி ஏற்படும். போட்டிகளும், வெளியூர்ப் பயணங்களும், அலைச்சலும் அதிகமாக இருந்தாலும், அதற்கேற்ற நல்ல லாபம் கிட்டும். புதிய வர்த்தகத் துறையில் ஈடுபட விருப்பமிருப்பின், முயற்சிக்கலாம். ஆயத்த ஆடைகள், இரும்பு, பெட்ரோலியம், வெள்ளி ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளுக்கு, நல்ல லாபம் கிட்டும். வெளியூர்ப் பயணங்கள் லாபகரமாக இருக்கும். கூட்டாளிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

கலைத்துறையினர்: கலைத்துறைக்கு அதிபதியான கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால், வாய்ப்புகள் அதிகரிக்கும். வருமானம் சென்ற மாதத்தைவிட, சிறிது அதிகரிக்கும். திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். இயக்குநர்கள், நடிகர் – நடிகைகள் ஆகியோருக்கு, புதிய வாய்ப்புகள் கைகொடுக்கும். பல மாதங்களாக, வருமானம் நின்றுபோன நிலையில், வாடி, வதங்கும் கடைநிலை ஊழியர்களுக்கு மீண்டும் வருமானம் துளிர்க்கும்.

அரசியல்துறையினர்: சுக்கிரன் மற்றும் செவ்வாய், ராகு ஆகிய மூவருக்கும் அரசியலில் தொடர்பு உண்டு. மூவரும் அனுகூலமாக நிலைகொண்டிருப்பதால், அரசியல் துறையினருக்கு, உற்சாகத்தையளிக்கும் மாதமாகும். ஒருசிலருக்குக் கட்சிமாற்றம் ஏற்படவிருப்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. பல ரிஷப ராசி அரசியல் துறையினருக்கு, ஓர் திருப்பு முனையாக அமையவுள்ளது, இம்மாதம்.

மாணவ – மாணவியர்: கல்வித் துறையைத் தங்கள் பிடியில் வைத்துக்கொண்டுள்ள கிரகங்கள், அனுகூலமான நிலைகளில் சஞ்சரிக்கின்றன. மனதில் ஏற்பட்ட சஞ்சலங்கள், சபலங்கள் குறையும். படிப்பில், ஆர்வம் மேலிடும். உயர் கல்விக்கு உதவிகள் தேடி வரும். நீட் தேர்வு எழுதியிருந்தால், வெற்றி வாய்ப்பு மிக, மிகச் சிறப்பாக உள்ளது. விளையாட்டுகள், இதர போட்டிகள் ஆகியவற்றிலும் எளிதில் வெற்றி கிட்டும்.

விவசாயத் துறையினர்: செவ்வாய் மற்றும் சனி பகவானின் கூட்டுச் சேர்க்கை உங்களுக்கு அதிக நன்மைகளை அளிக்கக்கூடிய கிரகக் கூட்டணியாகும்! வயல்கள் செழித்து வளரும். தண்ணீர் வசதிக்குக் குறைவிராது. சந்தைகளில், உங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். பழைய கடன்கள் கவலையை அளிக்கும். கால்நடைகள் சிறந்த அபிவிருத்தியை அடையும். கைப் பணத்தை எண்ணி, எண்ணிச் செலவழிக்கவும்.

பெண்மணிகள்: குடும்பப் பொறுப்பிலுள்ள பெண்மணிகளுக்கு, நன்மையும், சிரமங்களும் கிட்டத்தட்ட சமமாகவே இருக்கும். பணப் பற்றாக்குறை இராது. மூன்றாம் வாரத்தில் உறவினர்களிடையே ஏற்படும் கருத்துவேறுபாடு கவலையை அளிக்கும். குழந்தைகளின் கல்வி பற்றிய பிரச்னை ஒன்று மன நிம்மதியை பாதிக்கும்.

அறிவுரை: பெண்மணிகளுக்கு அலைச்சலும், உழைப்பும் கடினமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருங்கள்.

பரிகாரம்: திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கோடகநல்லுர் (திருநேல்வேலி மாவட்டம்) தரிசனம் மிகச் சிறந்த பரிகாரங்களாகும்.
2. குருவாயூர் திருத்தல தரிசனமும், தினமும் ஒரு தசகம் மந் நாராயணீயம் பாராயணம் செய்துவந்தால் பலன் கைேமல்.
3. வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் மாலையில் தீபத்தில் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து வந்தால் போதும். சிறந்த பலன் கிடைக்கும்.

அனுகூல தினங்கள்

சித்திரை: 4-7, 12-14, 18-20, 23-26, 30.

சந்திராஷ்டம தினங்கள்

சித்திரை: 15 முதல், 17 காலை வரை.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us