விருச்சிகம்

17-7-2024 முதல் 16-8-2024 வரை

(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)

குடும்பம்: சப்தம (7) ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குருவின் சுப பலத்தினால், இம்மாதம் முழுவதும் தேவையான அளவிற்கு பண வசதி இருக்கும். உடல் நலனும் திருப்திகரமாக உள்ளது. ஆடி 15-ம் தேதி வரை, சுக்கிரனும் அனுகூலமாக சஞ்சரிக்கிறார். அதன் பிறகு, அவரால் நன்மை எதுவும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை! குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் சிறிது தடைபடும் என்பதை பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் நிலைகொண்டுள்ள ராகுவின் நிலை எடுத்துக்காட்டுகிறது. விவாக வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், நல்ல வரன் அமையும். சிலருக்கு, புத்திர பாக்கியம் அமையும். அர்த்தாஷ்டகத்தில், வக்கிர கதியில் சனி பகவான் சஞ்சரிப்பதால், அவ்வப்போது உடல் உபாதைகள் ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால் குணமும் ஏற்படும். வீண் செலவுகளில் பணம் விரயமாகும் என்பதை லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ள கேதுவின் நிலை குறிப்பிடுகிறது. குடும்பத்தில், சுப நிகழ்ச்சிகளும், அவற்றின் காரணமாக சுபச் செலவுகளும் அதிகமாக இருக்கும். உத்தியோகம் அல்லது வர்த்தகம் காரணமாக, பிள்ளை அல்லது பெண் வெளிநாடு சென்று – வர வாய்ப்புகள் உருவாகும்.

உத்தியோகம்: அர்த்தாஷ்டக ராசியில், வக்கிர கதியில் ஜீவன காரகரான சனி பகவானும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகுவும், அமர்ந்து இருப்பதால்,வேலை பார்க்கும் இடத்தில், உழைப்பு கடினமாக இருக்கும், மேலதிகாரிகளின் அளவிற்கு மீறிய கண்டிப்பு, பணிகளில் வெறுப்பையும், விரக்தியையும் ஏற்படுத்தும். கூடியவரையில், உணர்ச்சிவசப்படுவதைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஏனெனில், தவறான அவசர முடிவுகளை எடுத்துவிடுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. பின்பு வருத்தப்படுவதனால், என்ன பயன்?

தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள சனி, ராகு, செவ்வாய் ஆகிய கிரகங்கள் அனுகூலமாக இல்லை. ஆடி 16-ம் தேதியிலிருந்து, சுக்கிரனும் மாறிவிடுவதால், வியாபாரத்தில், பல திடீர்ப் பிரச்னைகளை நீங்கள் சமாளிக்க நேரிடும். மூன்றாம் வாரத்திலிருந்து, நிதி நிறுவனங்களினாலும், தொல்லைகள் ஏற்படும். கூட்டாளிகளில் ஒருவராலும், பல சிரமங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தை கவனிக்க இயலாமல், மன அமைதி பாதிக்கப்படும். சந்தை நிலவரமும், திடீரென்று, அனுகூலமில்லாமல் மாறும். வெளி மாநிலங்களிலிருந்து வந்து தொழிற்சாலைகளில் பணியாற்றிவரும் ஊழியர்களினால், புதிய பிரச்னைகளைச் சமாளிக்க நேரிடும். லாபமும் பாதிக்கப்படும்.

கலைத் துறையினர்: ஆடி மாதம் 15-ம் தேதி வரை கிரக நிலைகள் சாதகமாக அமைகிறார். அதன் பிறகு அந்த அளவிற்கு கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை. 3-ம் வாரத்திலிருந்து வாய்ப்புகள் குறையும். வருமானமும் பாதிக்கப்படும். பழைய கடன்களும் தொல்லை தரும். பரிகாரம் அவசியம்.

அரசியல் துறையினர்: முதல் இரண்டு வாரங்கள் வரை ஓரளவு முன்னேற்றம் காணமுடியும். கட்சியில் ஆதரவு பெருகும். மேல் மட்டத் தலைவர்களுக்கு, உங்கள் மீதுள்ள நம்பிக்கை அதிகரிக்கும். இருப்பினும், மூன்றாம் வாரத்திலிருந்து கட்சியில் எதிர்ப்பு உருவாகும். உங்கள் நற்பெயருக்கு, களங்கம் விளைவித்து, கட்சியில் சிலர் நடந்துகொள்வார்கள். பொறுமையும், நிதானமும் அவசியம்.

மாணவ – மாணவியர்: கல்வித் துறையைத் தங்கள் பிடியில் வைத்துக்ெகாண்டுள்ள கிரகங்கள் சுப-பலம் பெற்று, சஞ்சரிப்பதால், மாணவர்களுக்கு பல நன்மைகள் ஏற்படவுள்ளன. பாடங்களில் மனம் தீவிரமாக படியும். நற்குணங்கள் அமைந்த மாணவர்களின் சேர்க்கை ஏற்படும். தேர்வுகளில் சரியான பதிலளித்து நல்ல மதிப்ெபண்களைப் பெறுவதற்கு, சாதகமாக புதனும் மற்ற கிரகங்களும் சஞ்சரிக்கின்றனர்.

விவசாயத் துறையினர்: செவ்வாய், ராகு, சூரியன் ஆகிய மூன்று கிரகங்களும் விவசாயத் துறையுடன் சம்பந்தப்பட்டவை. இந்த மூவரும் இம்மாதம் முழுவதும் அனுகூலமற்ற நிலைகளில் வலம் வருவதால், விவசாயத் துறையினருக்கு அதிக நன்மைகளை எதிர்பார்க்க இயலாது. இம்மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதிக வெயிலினால், பயிர்கள் சேதமடையக்கூடும். நிதி நிறுவனங்களும் தக்க தருணத்தில் உதவும்.

பெண்மணிகள்: மாதம் முழுவதும் குரு பகவான், ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் அமர்ந்து, பல நன்மைகளை உங்களுக்கு வழங்கவிருக்கிறார்! உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். சப்தம ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பதால், திருமணமான பெண்கள், கருத்தரிப்பதற்கு இந்த ஆடி மாதம் மிகவும் ஏற்றது.

அறிவுரை: உத்தியோகஸ்தர்களும், வர்த்தகத் துறையினரும், அவரவர்கள் பணிகளிலும், பொறுப்புகளிலும் கண்டிப்புடன் செயலாற்ற வேண்டும். இல்லாவிடில், பிறரால் ஏமாற்றப்படக்கூடும் என்பதை கிரக நிலைகள் உணர்த்துகின்றன.

பரிகாரம்: 1.திருப்பதி சென்று, திருவேங்கடத்து இன்னமுதனைத் தரிசித்துவிட்டு வந்தால், இன்னல்கள் கண்டிப்பாக தீரும். நம்பிக்கையுடன் சென்று வாருங்கள்! (2) 24 வியாழக்கிழமைகளில், வீட்டில் பூஜையறையில் பிரதோஷ காலமாகிய மாலை நேரத்தில், மூன்று அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றிவந்தால் மகத்தான பலன்களைக் கண்கூடாகக் காண்பீர்கள்.

அனுகூல தினங்கள் ஆடி: 3-5, 9-14, 19-22, 28, 30, 31.

சந்திராஷ்டம தினங்கள் ஆடி: 15 பின்னிரவு முதல், 18 காலை வரை.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us