17-7-2024 முதல் 16-8-2024 வரை
(கிருத்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)
குடும்பம்: சூரியன், சுக்கிரன், கேது, ராகு ஆகிய நான்கு கிரகங்களினாலும், பல நன்மைகளை எதிர்பார்க்கலாம். குரு உள்ளிட்ட மற்ற கிரகங்கள் அனுகூலமாக இல்லை!! பண வசதி திருப்திகரமாக இருப்பினும், வரவிற்கேற்ற செலவுகளும் சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால், கடன் வாங்க வேண்டிய அவசியம் வராது. ஜென்ம ராசியில் அக்னி கிரகமாகிய செவ்வாய் அமர்ந்திருப்பதால், உஷ்ண சம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். குறிப்பாக, சரும உபாதைகள் உடலை வருத்தும். கூடிய வரையில், வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். ஒரு சிலருக்கு புதிய வாகன யோகமும் அமைந்துள்ளது. பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதையும் கிரகநிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. திருமண முயற்சிகளில், வரன் அமைவதில் குழப்பம் மேலிடும். தந்தையின் ஆரோக்கியத்தில் அதிருப்தி ஏற்படும். நெருங்கிய உறவினர்களிடையே ஒற்றுமை குறையும்.
உத்தியோகம்: ஜென்ம ஸ்தானத்தில், வக்கிர கதியில் சனி பகவான் உள்ளதால், உங்கள் கடமைகளிலும், பொறுப்புகளிலும் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். மேலதிகாரிகளின் அளவிற்கு மீறிய கண்டிப்பு, அன்றாடப் பணிகளில் அச்சமும் வெறுப்பும் மேலிடும். உணர்ச்சிவசப்படுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். சிறு தவறும் பெரும் பிரச்னையில் கொண்டுவிடக்கூடும் என கிரகங்கள் எச்சரிக்கை செய்கின்றன. சூரியன் சுபத்துவப் பாதையில் சஞ்சரிப்பதால். அரசு பணியாளர்களுக்கு சிரமங்கள் குறையும். ஒரு சிலருக்கு, இடமாற்றம் அல்லது பதவி மாற்றமும் ஏற்பட சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
தொழில், வியாபாரம்: வியாபாரிகளுக்கிடையே கடும் போட்டியை நீங்கள் இம்மாதம் சமாளிக்க நேரிடும். சில தருணங்களில், கடும் போட்டி காரணமாக, உங்கள் பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டி வரும். நிதி நிறுவனங்களின் ஆதரவும் எளிதில் கிடைக்காததால், நிதி நிலைமையையும் நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். சில்லரை வியாபாரிகளுக்கும், நடைபாதை விற்பனையாளர்களுக்கும், கடன் தொல்லைகள் அதிகரிக்கும். மாத ஆரம்பத்திலிருந்தே சந்தை நிலவரத்திற்கேற்ப திட்டமிட்டு செயல்பட்டால், இந்நிலையைத் தவிரக்க இயலும்! சகக் கூட்டாளிகளும் விலகிவிட வாய்ப்பு உள்ளதை கிரக நிலைகள் சுட்டிக்காட்டுகின்றன.
கலைத் துறையினர்: சுக்கிரன் அனுகூலமாக இருக்கும் இம்மாதத்தில், ராகுவும் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால், லாபகரமான வாய்ப்புகள் தேடி வரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். ஆயினும், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்ள முடியாது. ஜென்ம ராசியில் உலவும் செவ்வாயினால், உஷ்ண சம்பந்தமான பிணிகள் உடலை வருத்தும். வீண் அலைச்சல்களைத் தவிர்க்க இயலாது. திரைப்படத் துறையினருக்கு, கணவர் – மனைவியரிடையே கருத்துவேற்றுமை கவலையை அளிக்கும்.
அரசியல் துறையினர்: மாதம் முழுவதும் அரசியல் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால், கட்சியில் செல்வாக்கு குறைவின்றி நீடிக்கும். செல்வாக்கு நிறைந்த பிரமுகர் ஒருவரின் தொடர்பு ஏற்பட்டு, அதன் விளைவாக சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும். உங்கள் அரசியல் வாழ்க்கையில், மிக முக்கிய முடிவு ஒன்றை எடுக்க நேரிடும்.
மாணவ – மாணவியர்: ஆடி மாதத்தின் முதல் வாரம் கிரக நிலைகள் சாதகமாக இல்லை! அதன் பிறகு, கிரகங்கள் சுப-பலம் பெறுவதால், படிப்படியாகக் கல்வி முன்னேற்றம் ஏற்படும். உங்கள் விருப்பப்படி, உயர் கல்விக்கு இடம் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆசியும், வழிகாட்டுதல் காரணமாகவும், படிப்பில் உற்சாகம் மேலிடும்.
விவசாயத் துறையினர்: பூமி காரகரான செவ்வாய், ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால், வயல் பணிகளில் பாடுபட்டு உழைக்க வேண்டிவரும். பாக்கிய ஸ்தானத்திற்கு குரு பகவானின் சுபப் பார்வை கிடைப்பதினாலும், சூரியன் அனுகூலமாக சஞ்சரிப்பதாலும், உழைப்பிற்கேற்ற விளைச்சலும், வருமானமும் கிட்டும். சந்தையில் உங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.
பெண்மணிகள்: குரு பகவான் அனுகூலமாக இல்லை! இருப்பினும், இக்குறையை சுக்கிரன் ஈடுசெய்து விடுகிறார். குடும்பப் பொறுப்பிலுள்ள பெண்மணிகளுக்கு, முயற்சிகளில் வெற்றியைத் தேடித் தருகிறார், சுக்கிரன்!! வேலைக்குச் சென்றுவரும் வனிதையர்களுக்கு, அலுவலகச் சூழ்நிலை மன நிறைவைத் தரும். இருப்பினும், சனி பகவானின் நிலை காரணமாக, உழைப்பும், பொறுப்புகளும் சற்றுக் கடினமாகவே இருக்கும்.
அறிவுரை: ஜென்ம ராசியில் செவ்வாய் அமர்ந்திருப்பதால், ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். வெயிலில் வெளியே செல்வதைக் கண்டிப்பாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். பலருக்கு சரும சம்பந்தமான உபாதைகள் ஏற்படக்கூடும். அலட்சியம் செய்யாமல், உடனுக்குடன் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
பரிகாரம்: செவ்வாய், பரிகார திருத்தலமான வைத்தீஸ்வரன் கோயில் தரிசனம் மிகவும் ஏற்றது. இயலாதவர்கள், தங்கள் வீட்டின் பூஜையறையிலேயே மாலையில், பரிகார தீபம் ஒன்றை ஏற்றி வருதல் நல்ல பலனையளிக்கும்.
அனுகூல தினங்கள் ஆடி: 1, 6-9, 13-16, 20-22, 26-29.
சந்திராஷ்டம தினங்கள் ஆடி: 2 பின்னிரவு முதல், 5 காலை வரை. மீண்டும், 30 காலை முதல், 31 வரை.