14-4-2024 முதல் 13-5-2024 வரை
(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)
குடும்பம்: சித்திரை 12-ம் தேதியிலிருந்து, சுக்கிரன் அனுகூலமாக மாறுகிறார். சித்திரை 17ம் தேதி வரை குரு பகவான் லாப ஸ்தானத்தில், உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றார். அதன் பிறகு, அவரால் நன்மை எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. வரவும், செலவும் சமமாக இருக்கும். மூன்றாம் வாரத்திலிருந்து குடும்பச் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமங்கள் ஏற்படும். குடும்பத்திலும், உறவினர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்களும், ஒற்றுமைக் குறைவும் உண்டாவதால், மனதில் நிம்மதி குறையும். திருமண முயற்சிகள் தோல்வியடையும். நல்ல வரன்கள் கைநழுவிப் போகும். மாதக் கடைசியில் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படக்கூடும். முயற்சிகளில், தேவையற்ற அலைச்சலும், உழைப்பும் மேலிடும். நண்பர்களே பகைவர்களாவார்கள். பிறருடன் பழகுவதில் சற்று விட்டுக் கொடுத்தும், அனுசரித்தும் நடந்துகொள்வது, எதிர்காலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அடிக்கடி ஏதாவதொரு சிறு உடல் உபாதை ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால் குணமாகும். சொத்து சம்பந்தமான பிரச்னைகள், நீதிமன்றம் வரை செல்லக்கூடும். எந்நிலையிலும், முன்கோபம், அவசர முடிவுகள், உணர்ச்சிவசப்படுதல் ஆகியவற்றைத் தவிர்த்தல் அவசியம்.
உத்தியோகம்: பாக்கிய ஸ்தானத்தில் ஜீவன காரகரான சனி பகவானும், செவ்வாயுடன் இணைந்திருப்பது, அன்றாடப் பணிகளில் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. நீங்கள் செய்யும் சிறு தவறும், மிகப் பெரிது போல் நிர்வாகத்தினரிடம் புகார் செய்யப்படும். இதற்குக் காரணம், உங்கள் சக-ஊழியர்களே! பொறுமை, நிதானம், சாதுர்யம் மிக, மிக அவசியம்.
தொழில், வியாபாரம்: கோள்சார விதிகளின்படி, பாக்கிய ஸ்தானத்தில் ஏற்படும் சனி – செவ்வாய் சேர்க்கை, நன்மை செய்வது சற்று சிரமமே! இருப்பினும், சனி பகவான் தற்போது நிலைகொண்டுள்ள கும்பம், அவருடைய ஆட்சி வீடாகத் திகழ்வதால், அதிக சிரமத்தை ஏற்படுத்த மாட்டார் என மிகப் புராதனமான “ஜோதிட அலங்காரம்”, “பூர்வ பாராசர்யம்” என்னும் நூல்கள் கூறுகின்றன. தொழிலில் கடுமையான போட்டிகள் இருப்பினும், அவற்றை முறியடிக்கும் திறனைக் கொடுத்தருள்வார், சனி பகவான். ஆதலால், லாபம் திருப்திகரமாக இருக்கும். அலைச்சல் மற்றும் உழைப்பு ஆகியவை சற்று கடுமையாக இருக்கும்.
கலைத் துறையினர்: புதிய வாய்ப்புகள் வர ஆரம்பிக்கும். இருப்பினும், இதுவரை இருந்துவந்தது போல், வருமானம் இராது. படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோருக்கு வழக்கத்தைவிட, வருமானம் சற்று குறைவாகவே இருக்கும். இருப்பினும், அடியோடு வருமானம் நின்றுபோன நிலை மாறி, மனதிற்கு நம்பிக்கையையும், மனோதைரியத்தையும் ஏற்படுத்தும். ஆன்மிக உபன்யாசகர்கள், பரதநாட்டியக் கலைஞர்கள், ஓதுவாமூர்த்திகள், தேவார, திருவாசகப் பாடகர்கள் ஆகியோருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். இதுவரை இருந்ததுபோல், இல்லாமல், இனி வருமானம் சீராக இருக்கப்போவதை, கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
அரசியல்துறையினர்: சித்திரை 12-ம் தேதி முதல், சுக்கிரன் மேஷ ராசிக்கு மாறுவதால், அதுவரை உங்களைப் புறக்கணித்துவந்த கட்சித் தலைவர்கள், உங்களைத் தேடி வந்து, உங்களைப் புகழ்ந்து, வரும் தேர்தலில் பயன்படுத்திக் கொள்வார்கள். அரசியலில் சமய-சந்தர்ப்பங்களுக்கேற்ப தற்காலிகப் பச்சோந்தியாக இருப்பது, தவிர்க்க இயலாதது என்பதை சாணக்கியரின் “அர்த்த சாஸ்திரம்” விவரித்துள்ளது. அரசியல் வெற்றிக்கு இந்தச் சாமர்த்தியம் அவசியம் என்பதையும் அந்நூல் விவரித்துள்ளது. அரிய இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
மாணவ – மாணவியர்: வித்யாகாரகரான புதன் மட்டுமின்றி, கல்வித் துறைக்கு ஆதிபத்யம் கொண்ட மற்ற கிரகங்கள்கூட, மாதம் முழுவதும் உங்களுக்கு சிறந்த சுபபலம் பெற்று சஞ்சரிப்பதால், பல நன்மைகள் உங்களுக்குக் காத்துள்ளன. தேர்வுகளில் உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்று, உயர் கல்விக்கு உங்கள் விருப்பத்திற்கேற்ப நல்ல கல்லூரியில், விருப்பப்பட்ட பாடத் துறையில் இடம் கிடைக்கும். சொல்லிக் கொடுக்கும் திறமை நிறைந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் அமைவார்கள்.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்கு தலைவரான செவ்வாய், சனி பகவானுடன் சேர்ந்து, பாக்கிய ஸ்தானத்தில் நிலைகொண்டிருப்பதால், நல்ல விளைச்சலும், வருமானமும் கிட்டும். ஆயினும், வயல் பணிகளில் உழைப்பு மிகவும் கடினமாக இருக்கும். குறிப்பாக, இரவு நேரப் பணிகளில் சற்று கூடுதல் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். சிறு விபத்து அல்லது விஷ ஜந்துக்களால் பாதிப்பு ஏற்படக்கூடும். எத்தகைய தருணங்களிலெல்லாம் எதனால், நமக்கு ஆபத்து ஏற்பட சாத்தியக்கூறு இருக்கிறதோ அவற்றை நமக்கு முன் கூட்டியே தெரிவித்து, எச்சரிக்கை செய்வதில் ஜோதிடம் என்ற விஞ்ஞானப்பூர்வமான கலைக்கு ஈடான வேறு கலை உலகத்தில் இல்லை.
பெண்மணிகள்: சித்திரை 18-ல் குரு பகவானும், 12-ல் சுக்கிரனும் அனுகூலமற்று மாறுவதால், மாதத்தின் முதல் 12 நாட்கள் பெண்மணிகளுக்கு பல அம்சங்களிலும் நல்லதே நடக்கும். பலருக்கு, வரன் அமையும். சிலருக்கு, மனத்திற்கு உகந்த வேலை கிடைக்கும். அதன் பிறகு, கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை. ஆதலால், மிதுனராசி சகோதரிகளுக்கு, இம்மாதம் நன்மையும், சோதனைகளும் மாறி, மாறி வரும்.
அறிவுரை: வேலை பார்க்குமிடத்தில், கடின உழைப்பு இருப்பினும், ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருங்கள். எவரிடமும், எந்த உதவியையும் எதிர்பார்த்தால், பிரச்னைகளில் சிக்கிக் கொள்ள நேரிடும்.
பரிகாரம்: மூன்று வியாழக் கிழமைகளில் மூன்று மண் அகலில் மாலை நேரத்தில் , நேய் தீபங்களும், மூன்று சனிக்கிழமைகளில் நல்ெலண்ணெய் தீபங்களும் ஏற்றிவரவும். நல்ல பலன் கிடைப்பதைக் கண்கூடாகக் காண்பீர்கள்.
2. வியாழன், ெவள்ளி, சனி ஆகிய மூன்று தினங்களிலும், ஓர் தினத்திலாவது அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று தீபத்தில் சிறிதளவு நெய் சேர்த்துவிட்டு, தரிசித்துவிட்டு வரவும்.
அனுகூல தினங்கள் சித்திரை: 1-4, 9-12, 16, 20-22, 26-28.
சந்திராஷ்டம தினங்கள் சித்திரை:17 காலை முதல், 19 முற்பகல் வரை.