(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)
15-5-2025 முதல் 14-6-2025 வரை
குடும்பம்: லாப ஸ்தானத்தில் சனி, ராகு இணைந்திருப்பதால், இம்மாதம் முழுவதும், பணப் பற்றாக்குறை இருப்பதற்கு வாய்ப்பில்லை. திருதீய ஸ்தானத்தில், குரு பகவான் அமர்ந்திருப்பதால், வருமானத்திற்கேற்ப செலவுகளும் இருப்பதால், சேமிப்பிற்கு சாத்தியக்கூறு இல்லை! குடும்ப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால், குடும்பக் கவலைகள் மனதை அரிக்கும். திருமண முயற்சிகளில் வீண் அலைச்சல்கள்தான் மிஞ்சும். அர்த்தாஷ்டகத்தில் செவ்வாய், நீச்சம் பெற்று நிலைகொண்டுள்ளதால், உஷ்ண சம்பந்தமான உபாதைகள் உடலை வருத்தும். வருமானத்திற்கு ஏற்ப செலவுகளும் ஏற்படும். புத்திர ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால், குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படக்கூடும். எளிய சிகிச்சையின் மூலம் குணமும் கிட்டும். பாக்கிய ஸ்தானத்தில் உள்ள சனி மற்றும் ராகுவை குரு பகவான் பார்ப்பதால், வருமானம் போதிய அளவிற்கு இருக்கும். நெருங்கிய உறவினர்களுடன், கருத்து வேற்றுமையும், தேவையற்ற வாக்கு – வாதங்களும் ஏற்படுவதால், மனதில் வேதனை உண்டாகும். நிம்மதி குறையும்.
உத்தியோகம்: லாப ஸ்தானத்தில் ஜீவன காரகரான சனி பகவானுடன், ராகு இணைந்திருப்பது சிறந்த யோக பலன்களைக் குறிக்கிறது. இதுவரை, உங்களுக்கு மறுக்கப்பட்டுவந்த ஊதிய உயர்வு மற்றும் பதவியுயர்வு, இனி எதிர்பார்க்கலாம். சிலருக்கு, இடமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. வேலையில்லாமல் அவதியுறும் இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று, வேலை பார்க்க வேண்டுமென்ற விருப்பமிருப்பின், இப்போது முயற்சிக்கலாம். தற்காலிகப் பணியாளர்கள் அவரவரது பணிகளில் நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
தொழில், வியாபாரம்: இவ்விரண்டு துறைகளுக்கும் அதிபதியான சனி பகவான், ராகுவுடன் சேர்ந்து, லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சிறந்த முன்னேற்றத்தைக் குறிக்கிறது. மேலும், சனி மற்றும் ராகுவிற்கு, குரு பகவானின் சுபப் பார்வை கிடைப்பதால், தொழிலை அபிவிருத்தி செய்து கொள்வதற்கு ஏற்ற மாதம் இந்த வைகாசி! உற்பத்தியை அதிகரித்துக் கொள்ளலாம். புதிய விற்பனை நிலையங்களைத் திறக்கலாம். வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்கள் ஒத்துழைக்கும். சகக் கூட்டாளிகள் சுமூகமாக நடந்துகொள்வார்கள். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலிருந்து வரவேண்டிய பாக்கிகள் இம்மாதம் கிட்டும்.
கலைத் துறையினர்: கலைத் துறையைத் தங்கள் அதிகாரத்தில் கொண்டுள்ள அனைத்து கிரகங்களும் சுப பலம் பெற்றுத் திகழ்வதால், புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். வருமானம் உயரும். மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். தற்போதைய தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், வெளிநாடுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அதன் காரணமாக, வருமானமும் உயரும். பரத நாட்டியப் பள்ளிகள் திறப்பதற்கு ஏற்ற மாதம் இந்த வைகாசி! கர்நாடக சங்கீத வித்வான்கள், திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் ஆகியோருக்கு வருமானம் உயரும். திரைப்படத் தயாரிப்பாளர்கள், புதிய படங்களில் துணிந்து முதலீடு செய்யலாம். சரித்திர நிகழ்்ச்சிகளைப் பின்னணியாகக் கொண்டு தயாரிக்கப்படும் படங்கள் நல்ல லாபத்தைப் பெற்றுத் தரும்.
அரசியல் துறையினர்: அரசியல் துறையைத் தங்கள் அதிகாரத்தில் கொண்டுள்ள கிரகங்கள், சுப பலம் பெற்று சஞ்சரிக்கின்னறன. ஆதலால், அரசியல் துறையினருக்கு, லாபகரமான மாதம் இது. மேலிடத் தலைவர்களின் ஆதரவு கிடைப்பது மன நிறைவையளிக்கும். தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், அரசு பதவியொன்று உங்களைத் தேடிவரும்.
மாணவ – மாணவியர்: கல்வித் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள கிரகங்கள் சாதகமாக சஞ்சரிப்பதால், இம்மாதம் முழுவதும் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், கிரகிப்புத் திறன் அதிகரிக்கும். நினைவாற்றல் பெருகும். பலருக்கு, நேர்முகத் தேர்வில் வெற்றி கிட்டும். ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் ஆகியோரின் நேரிடை ஆதரவு, படிப்பில் உற்சாகத்தை ஏற்படுத்தும். வெளிநாடு சென்று, பிரத்யேக உயர்கல்வி பயில விருப்பமிருப்பின், இப்போது முயற்சிக்கலாம். கல்வி உதவித் ்தொகை கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது – கிரகங்களின் சஞ்சார அடிப்படையில்.
விவசாயத் துறையினர்: பூமி காரகரான செவ்வாய், நீச்சம் பெற்று அர்த்தாஷ்டக ராசியில் வலம் வருவதால், வயல் பணிகளில் உழைப்பு சற்று கடினமானதாக இருக்கும். உஷ்ண சம்பந்தமான உபாதைகள் அடிக்கடி ஓய்வெடுக்கத்
தூண்டும். குறிப்பாக, இரவு நேர வயல் பணிகளின்போது, சற்று விழிப்புடன் செயல்படுவது அவசியம் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
பெண்மணிகள்: இம்மாதம் முழுவதும், குரு பகவான் அனுகூலமாக இல்லை! அதற்கு ஈடு செய்வதுபோல், சுக்கிரன் சுப பலம் பெற்று வலம் வருகிறார். வழக்கமான குடும்பக் கவலைகளும், சிறு சிறு உடல் உபாதைகளும் மன-நிம்மதியைப்பாதிக்கும். எளிய சிகிச்சையினால், குணம் கிடைக்கும். மணமாலைக்குக் காத்திருக்கும் கன்னியருக்கு, வரன் அமைவது மேலும் தாமதமாகும். பரிகாரம் உதவும்.
அறிவுரை: கைப் பணத்தை எண்ணி, எண்ணிச் செலவழிக்கவும். வீண் அலைச்சலையும், கடின உழைப்பையும் தவிர்க்கவும். கண்ட கண்ட தரக் குறைவான இடங்களிலும் உணவருந்துவதைத் தவிருங்கள்.
பரிகாரம்: அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், சனிக்கிழமைதோறும், மாலையில் தீபத்தில் சிறிது எண்ணெய் அல்லது பசு நெய் சேர்த்துவந்தால் போதும். நல்ல பலன் கிடைக்கும். உங்களால் இயலாவிட்டாலும், உங்கள் நண்பரிடமோ அல்லது அறிமுகமானவர்களிடமோ கொடுத்து அனுப்பி, இப்பரிகாரத்தைச் செய்யலாம். பலன் உங்களை வந்தடைவது திண்ணம்.இயலாதவர்கள், உங்கள் வீட்டுப் பூஜையறையிலே இதைச் செய்யலாம்.
- “லிகித ஜெபமாக”ப் போற்றிக் கொண்டாடப்படும், ÿராம ஜெயம் எனும் தாரக மந்திரத்தை காலை – மாலை இரு வேளைகளிலும், 1008 முறையோ அல்லது 108 முறைகளோ நோட்டுப் புத்தகங்களில் எழுதி வந்தாலும் மகத்தான பரிகாரமாக அமையும்.
அனுகூல தினங்கள்
வைகாசி : 2-4, 8-11, 15-17, 22-25, 29, 30.
சந்திராஷ்டம தினங்கள்
வைகாசி : 1 பிற்பகல் வரை. மீண்டும், வைகாசி 26 காலை வரை, 28 இரவு வரை.