14-4-2024 முதல் 13-5-2024
(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)
குடும்பம்: லாப ஸ்தானத்தில் சனி, செவ்வாய் கூட்டு சேர்க்கை ஏற்பட்டுள்ளது. மேலும், சித்திரை 18-ம் தேதி குரு பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுவதும், மிகச் சிறந்த கிரக மாறுதலாகும். சுக்கிரனாலும் நன்மையே! இம்மாதம் முழுவதும் பணப் பிரச்னை இல்லாமல் இவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!! சற்று தாராளமாகவே செலவு செய்யலாம். இருப்பினும், கிரகங்கள் கொடுக்கும்போது, செலவு செய்வதை விடச் சேமித்து வைத்துக் கொள்வதே விவேகமாகும். ஜென்ம ராசியில், சூரியனும், விரயத்தில் ராகுவும் நிலை கொண்டுள்ளதால், உஷ்ண சம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்பட்டு, மருத்துவ சிகிச்சையினால் குணமாகும். ஆதலால், மருத்துவச் செலவுகளும் உண்டு. ருண ஸ்தானத்தில் கேது நிலைகொண்டிருப்பதால், பழைய கடன்களை அடைத்து, நிம்மதி பெறலாம். திருமண முயற்சிகளுக்கு மிகவும் ஏற்ற மாதமாகும் இந்தச் சித்திரை. ஒரு சிலருக்கு, வீடுமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. ெவளிநாட்டில் வேலை பார்க்கும் பிள்ளை அல்லது பெண் விடுப்பில் வருகை தருவது மகிழ்ச்சியை அளிக்கும். குடும்பத்தில் சிறு சுப காரியமொன்று நிகழும்.
உத்தியோகம்: உத்தியோகத் துறைக்கு அதிபதியான சனி பகவான், லாப ஸ்தானத்தில் நல்ல சுப பலத்துடன் சஞ்சரிப்பதால், மேலதிகாரிகளின் ஆதரவும், உதவியும் கிடைக்கும். அலுவலகச் சூழ்நிலை, நிம்மதியைத் தரும். தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், ஊதிய உயர்வு அல்லது பதவியுயர்வு கிடைப்பதற்குச் சாத்தியக்கூறு உள்ளது. சனி பகவானுடன் செவ்வாய் இணைந்திருப்பதால், வேலைச் சுமையும், பொறுப்புகளும் உங்கள் பொறுமைக்கு சோதனையாக அமையும். ஒருசிலருக்கு இடமாற்றம் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. புதிய வேலைக்கு முயற்சித்து வரும் மேஷ ராசியினருக்கு, வெற்றி கிட்டும். குறிப்பாக, வெளிநாடு செல்ல வேண்டுமென்ற விருப்பமிருப்பின், முயற்சிக்கலாம்.
தொழில், வியாபாரம்: போட்டிகள் கடுமையாக இருப்பினும், அவையனைத்தையும் சமாளித்து விற்பனையை அதிகரிக்கும் திறனை சனிபகவானும், செவ்வாயும் தந்தருள்கிறார்கள். புதிய முதலீடுகளிலும், விஸ்தரிப்புத் திட்டங்களிலும் ஈடுபடுவதற்கு இம்மாதம் ஏற்றதாக இல்லை. ஏனெனில், விரய ஸ்தானத்தில் பலம் வாய்ந்த ராகு அமர்ந்திருக்கிறார். சில்லரை வியாபாரிகள் கடன் வாங்குவதை இம்மாதம் தவிர்ப்பது நல்லது. விரய ராகு, கடனை விருத்தி செய்வார் என புராதன ஜோதிட நூல்கள் விவரித்துள்ளன. வெளிமாநிலப் பயணங்களும், தொடர்புகளும் லாபகரமாக இருக்கும். நிதி நிறுவனங்கள் தக்க தருணங்களில் உதவும்.
கலைத்துறையினர்: கலைத் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள சுக்கிரன், இம்மாதம் முழுவதும் உங்களுக்கு ஆதரவாகவே சஞ்சரிப்பதால், வாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும். உங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவர ஏற்ற மாதமிது என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. மக்களிடையே புகழ் அதிகரிக்கும். உங்கள் நிதி நிலைமையை சரி செய்துகெள்ள ஏற்ற தருணமிது. பரத நாட்டியம், சங்கீதம் ஆகியவற்றைப் பயிற்பிக்கும் பள்ளிகள் திறப்பதற்கு கிரக நிலைகள் மிகவும் அனுகூலமாக அமைந்துள்ளன. லாப கரமாக நடக்கும்.
அரசியல்துறையினர்: சுக்கிரன், செவ்வாய் ஆகிய இரு கிரகங்களுமே சுபத்துவப் பார்வையில் சஞ்சரிப்பதால், கட்சியில் ஆதரவு பெருகும். செல்வாக்கு ஓங்கும். பெரிய அரசியல் கட்சிகளிடமிருந்து போட்டி போட்டுக்கொண்டு அழைப்பு வரும். தீர சிந்தித்து, சரியான முடிவெடுப்பதற்கு கிரக நிலைகள் சாதகமாக உள்ளன.
மாணவ – மாணவியர்: புதனும் மற்ற கிரகங்களும் உங்களுக்கு ஆதரவாகவே நிலைகொண்டுள்ளனர், இம்மாதம் முழுவதும்! கல்வி முன்னேற்றம் நிச்சயம்!! தேர்வுகளில் சரியான விடைகள் எழுதுவதற்கு, புதனின் சஞ்சார நிலை ெபருமளவில் உதவுகிறது. நினைவாற்றலைத் தந்தருளும் மற்ற கிரகங்களின் நிலைகளும் சுபபலம் பெற்றிருப்பதால், நல்ல மதிப்பெண்களைப் பெற்றுத் திகழ சரியான மாதமிது.
விவசாயத் துறையினர்: பூமி காரகரான செவ்வாயின் சஞ்சார நிலையே, விவசாயத் துறையினரின் நன்மை – தீமைகளை நிர்ணயிக்கிறது. அத்தகைய பலத்தைப் பெற்றுள்ள செவ்வாய், இம்மாதம் முழுவதும் உங்களுக்கு ஆதரவாக நிைலகொண்டிருப்பதால், தண்ணீர், உரம் போன்ற அடிப்படை வசதிகளுக்குக் குறையிராது. வானம் பொய்க்காது, குறித்த காலகட்டங்களில் மழை பொழியும். அதுவும், அளவோடு நிற்கும். பயிர்கள் சேதமடையாமல், சந்தையில் நல்ல விலையையும் லாபத்தையும் பெற்றுத் தரும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து நிம்மதிபெற ஏற்ற தருணம், இந்தச் சித்திரை!
பெண்மணிகள்: நன்மை செய்யும் கிரகங்கள் அதிக சுப பலம் பெற்றுள்ளன. ஆதலால், மகிழ்ச்சியையும், மனநிறைவையும் சற்று தாராளமாக உங்களுக்கு அளிக்கக்கூடிய மாதமாகும். குடும்பத்தில், ஒற்றுமை நிலவும். உறவினர்களிடையே பரஸ்பர அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்துடன் தீர்த்த – தலயாத்திரை சென்று வரும் யோகம் அமைந்துள்ளதையும் இம்மாத கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
அறிவுரை: சிக்கனமாகச் செலவு செய்து, எதிர்காலத்திற்கென்று இன்றே சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
பரிகாரம்: அருகிலுள்ள, திருக்கோயில் ஒன்றில், வெள்ளிக்கிழமைகள்தோறும், தீபத்தில் சிறிது பசு நெய் சேர்த்துவரவும். ஈடிணையற்ற பரிகாரம் இது. விரய ஸ்தானத்தில் நிலைகெண்டுள்ள ராகுவின் தோஷத்தை இது அடியோடு போக்கவல்லது.
அனுகூல தினங்கள்:
சித்திரை: 1-3, 8-11, 15-15, 22-24, 29, 30.
சந்திராஷ்டம தினங்கள்:
சித்திரை: 12 இரவு முதல், 14 வரை.