மீனம்

17-7-2024 முதல் 16-8-2024 வரை

(பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை)

குடும்பம்: ஏழரைச் சனியின் ஆரம்ப கட்டத்திலுள்ள மீன ராசி அன்பர்களுக்கு, இந்த ஆடி மாதம் சுக்கிரனும், செவ்வாயும் மட்டும் அனுகூலமாக உள்ளனர். ராசி நாதன் குரு உட்பட மற்ற கிரகங்கள் அனைத்தும் அனுகூலமற்ற நிலைகளில் சஞ்சரிக்கின்றனர். குரு பகவானால் அளிக்க முடியாததை, சுக்கிரன் கொடுத்து நிறைவு செய்கிறார்! வருமானம் ஒரே சீராக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல்நலனில் கவனமாக இருத்தல் நல்லது. வீண் செலவுகளில் பணம் விரயமாகும். எதிர்காலத்தைப் பற்றிய கற்பனையான கவலைகளினால் மனதில் விவரிக்க இயலாத அச்சமும், கவலையும் ஏற்படும். திருமண முயற்சிகளில் வரன் அமைவது கடினமாக இருக்கும். செவ்வாய் அனுகூலமாக இருப்பதால், சிலருக்கு சொந்த வீடு அமையும் யோகமும் உள்ளது. உடல் ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படக்கூடும். எதிர்பாராத பணவரவிற்கு சாத்தியக்கூறு உள்ளது.

உத்தியோகம்: சனி பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், பணிச் சுமை அதிகமாக இருக்கும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு குறையும். உங்கள் உழைப்பிற்கும், பொறுப்புகளுக்கும் ஏற்ற ஊதியம் கிடைப்பது கடினமே! புதிதாக வேலைக்கு முயற்சிக்கும் மீன ராசியினருக்கு, மனதிற்கு இசைந்த வேலை கிடைக்காது!! வெளிநாடுகளில் வேலை பார்த்துவரும் மீன ராசியினருக்கு, கடும் பிரச்னைகள் காத்துள்ளன, இம்மாதத்தில்!

தொழில், வியாபாரம்: மிகக் கடுமையான போட்டிகளை நீங்கள் சமாளிக்க வேண்டிவரும்! சந்தை நிலவரமும் உங்களுக்குச் சாதகமாக இல்லை. புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடங்கல்கள் உண்டாகும். நிதிநிறுவனங்களினால், பிரச்னைகள் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்காது. புதிய முதலீடுகளைக் கண்டிப்பாக தவிர்க்கவும். ஏழரைச் சனியின் ஆரம்பப் பகுதியாக இருப்பதால், கொடுக்கல் – வாங்கலில் கடும் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். வரவேண்டிய பாக்கிகளை வசூலிப்பதில் பிரச்னைகள் ஏற்படும். லாபத்தைத் தக்கவைத்துக்கொள்ள கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும். சந்தை நிலவரம் அடிக்கடி மாறுவதால், பிரச்னைகள் மேலும் கடினமாக உருவாகும்.

கலைத் துறையினர்: கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை! வருமானம், தேவைக்கு மிகவும் குறைவாகவே இருக்கும். வாய்ப்புகள் குறையும். திரைப்படத் துறையினருக்கு, மீண்டும் தலையெடுக்க முடியாதபடி, பிரச்னைமேல் பிரச்னை உருவாகும். திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, பணப் பற்றாக்குறையினால், படங்கள் பாதியில் நின்றுபோகும். பலருக்கு, கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

அரசியல் துறையினர்: சுக்கிரனும், செவ்வாயும் உங்களுக்கு ஆதரவாக நிலைகொண்டிருப்பதால், கட்சியில் செல்வாக்கு நீடிக்கிறது. தலைவர்களுக்கு, உங்கள் மீதுள்ள நம்பிக்கை நீடிக்கிறது. நீங்கள் எதிர்பார்த்திருந்த பதவி ஒன்று, கிடைப்பதில் தடங்கல்கள் ஏற்பட்டு, ஏமாற்றத்தையளிக்கும். சிலருக்கு, நீதிமன்ற வழக்குகளைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உரு வாகும். பலவிதப் பிரச்னைகளினாலும், கட்சி உட் பூசல் களினாலும், எதிர்காலத்தைப் பற்றிய அச்சமும் சந்தேகமும் ஏற்படக்கூடும் என்பதை கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. எத்தகைய சூழ் நிலையிலும் நிதானத்தை மட்டும் இழந்துவிடாதீர்கள்! ஒருசிலருக்கு, கட்சி மாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை சம்பந்தப்பட்ட கிரகங்கள் குறிப்பிடுகின்றன.

மாணவ – மாணவியர்: ஏழரைச் சனியின் பிடியிலுள்ள மாணவ – மாணவியருக்கு, வித்யாகாரகரான புதனும், இம்மாதம் சாதகமாக இல்லை! மிகவும் பாடுபட்டு, கண்விழித்துப் படிக்க வேண்டிவரும். தகாத மாணவர்களின் சேர்க்கையினால், உங்கள் கல்வி முன்னேற்றம் பாதிக்கப்படும். தவிர்ப்பது அவசியம்.

விவசாயத் துறையினர்: செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகிய இருவரும் உங்களுக்கு ஆதரவாக வலம் வருகின்றனர். இவ்விரு கிரகங்களுக்குமே விவசாயத் துறையின்மீது ஆதிக்கம் உண்டு. ஆதலால், விளைச்சலும் வருமானமும் திருப்திகரமாக இருக்கும். ஏழரைச் சனியினால், வயல் பணிகளில் உழைப்பு கடினமாக இருக்கும்.

பெண்மணிகள்: நீங்கள் இம்மாதம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது, உடல்நலன் பற்றியதேயாகும்! சக்திக்கு மீறிய உழைப்பும், அலைச்சலும் உடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. ெநருங்கிய உறவினர்களுடன் பழகுவதில் சற்று அனுசரித்து நடந்துகொள்வது அவசியம். திருமணத்திற்குக் காத்துள்ள கன்னியருக்கு, வரன் அமைவதில் சிறு, சிறு பிரச்னைகள் ஏற்படும். மன அமைதி பாதிக்கப்படக்கூடும்.

அறிவுரை: ஏழரைச் சனிக்காலம் நடைபெறுவதால், இரவு நேரங்களில் வாகனங்கள் ஓட்டுவதையும், தனியே வெளிச் செல்வதையும் தவிர்ப்பது மிகவும் அவசியம்.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று, அங்குள்ள தீபத்தில் சிறிது நெய் அல்லது எள் எண்ெணய் சேர்த்து, தரிசித்துவிட்டு வந்தால் போதும். பலன் கைமேல் கிடைக்கும்.

அனுகூல தினங்கள் ஆடி: 1, 5-8, 12-16, 20-23, 28, 29.

சந்திராஷ்டம தினங்கள் ஆடி: 25 மாலை முதல், 27 பின்னிரவு வரை.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us