14-3-2024 முதல் 13-4-2024 வரை
(பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை)
குடும்பம்: குரு, சுக்கிரன் ஆகிய இருவரும் உங்களுக்கு ஆதரவாக உள்ளனர், இம்மாதம் முழுவதும். ஏழரைச் சனியின் முதல் பகுதியும் நடைபெறுகிறது, உங்களுக்கு! வருமானத்திற்குக் குறைவிராது. அலைச்சல் அதிகரிக்கும். களத்திர ஸ்தானமாகிய கன்னி ராசியில் கேது இருப்பதால், மனைவிக்கு சிறு, சிறு உடல் உபாதைகள் ஏற்படும். எளிய சிகிச்சையினால் குணம் கிடைக்கும். ராசி நாதனாகிய குரு பகவானின் சுபப் பார்வை – ருண, ரோக, சத்ரு, ஆயுள் ஜீவன ஸதானங்களுக்குக் கிடைப்பதால், பிரச்னைகள் அனைத்தும் அளவோடு நிற்கும். திருமண முயற்சிகள் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
உத்தியோகம்: ஜென்ம ராசியில் ராகு, விரயத்தில் சனி! மேலதிகாரிகள், நிறுவனத்தினர் ஆகியோருடன் சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. மேலதிகாரிகள், சக – ஊழியர்கள் ஆகியோருடன் கருத்து வேறுபாடு உருவாகும். பொறுப்புகளும், வேலைச் சுமையும் சக்திக்கு மீறியதாகவே இருக்கும். அந்நிய நாட்டு வேலைக்கு ஆைசப்பட்டு, இடைத்தரகர்களிடம் பணம் இழக்க நேரிடும். சிலருக்கு இடமாற்றம், அல்லது பதவி மாற்றம் ஏற்படும். எத்தகைய சூழ்நிலையிலும், பொறுமையை மட்டும் இழந்துவிடாதீர்கள். முன்கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.
தொழில், வியாபாரம்: கிரக நிலைகள் ஓரளவே அனுகூலமாக உள்ளன. குரு – சுக்கிரனின் சுப பலம் கைகொடுக்கும். கடினமான, நியாயமற்ற போட்டிகளை இம்மாதம் நீங்கள் சமாளிக்க வேண்டிவரும். நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் – தன ஸ்தானத்தில் ராசி நாதன் நிற்பதால்! உற்பத்தி ஒரே சீராக நீடிக்கும். சகக் கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். ஏழரைச் சனிக் காலத்தின் தோஷம் இருப்பதால், வெளியூர்ப் பயணங்களின்போது, பணம், பொருட்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். விஸ்தரிப்புத் திட்டங்களை தற்போதைக்கு ஒத்திப் போடவும்.
கலைத் துறையினர்: கலைத் துைறக்கு அதிகாரத்துவம் பெற்ற சுக்கிரன், சாதகமான நிலையில் சஞ்சரிப்பதால், வாய்ப்புகள் தேடிவரும். தன ஸ்தானத்தில் உங்கள் ராசிநாதன், சுப பலம் பெற்றுள்ளதால், வருமானம் திருப்திதரும். சனி மற்றும் ஜென்ம ராசி, ராகுவினால் வீண் அலைச்சலும், ஓய்வின்றி உழைத்தலும், உடல் நலனைச் சற்று பாதிக்கும். ஆபத்தான காட்சிகளில் நடிக்கும் “ஸ்டண்ட்” நடிகர்கள், நடிப்பின்போது விழிப்புடன் இருத்தல் அவசியம். ஏனெனில், விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதை சனி – ராகுவின் சஞ்சார நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
அரசியல்துறையினர்: சுக்கிரன் மிகவும் சுப பலத்துடன் திகழ்வதால், கவலையளிக்கும் அளவிற்கு எவ்விதப் பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும், ஜென்ம ராசியில் ராகுவும், விரயத்தில் சனியும் நிலைகொண்டிருப்பதால், கட்சியில் மறைமுகப் பேச்சுக்களும், சூழ்ச்சிகளும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. உங்களால் நன்மை பெற்ற சிலராலேயே உங்களுக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதை ராகுவின் நிலை எடுத்துக்காட்டுகிறது. எல்லோரையும் எளிதில் நம்பிவிடும் சுபாவம் கொண்டவர்கள் மீன ராசியினர். அத்தகைய உயர் குணம் கொண்டுள்ள உங்களுக்கு, ஜென்ம ராசி ராகுவும், விரயச் சனியும், பிரச்னைகளை ஏற்படுத்துவார்கள். கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபடாமல் சிறிது காலத்திற்கு விலகி இருப்பது நல்லது என்பதைக் கிரக நிலைகள் உணர்த்துகின்றன.
மாணவ – மாணவியர்: கல்வி முன்னேற்றம் நீடிக்கிறது. பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். கிரகிப்புத் திறனும், நினைவாற்றலும் குறையாது. ஏழரைச் சனியின் தாக்கத்தினால், சிறிது ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டு, சிறிது ஓய்விற்குப் பிறகு சரியாகிவிடும்.
விவசாயத் துறையினர்: வயல் பணிகளில் உழைப்பு கடினமாக இருக்கும். அடிப்படை விவசாய வசதிகள் குறையாமல் பார்த்துக் கொள்வார்கள், குருவும், சுக்கிரனும். சனி பகவானின் தோஷத்தினால், அடிக்கடி சோர்வும், தளர்ச்சியும் ஏற்படும். கால்நடைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதால், அவற்றின் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களைப் பாதுகாக்கும் குரு, சுக்கிரன் ஆகிய இருவருமே சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், மனநிறைவை அளிக்கக்கூடிய மாதமாகும், இந்தப் பங்குனி!! இருப்பினும், ஜென்ம ராகு, விரய சனியினால் ஏற்படும் தோஷம், ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும். கவனமாக இருங்கள். சிறிதளவே உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும், அதை உதாசீனப்படுத்தாமல், உடனடியாக மருத்துவரை அணுகி, தகுந்த சிகிச்சை – மருந்து, மாத்திரைகளை குறித்த நேரத்தில் எடுத்துக் கொண்டால், பெரிய உபாதைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். நம்முடைய உடல்நலன் நம்கையில்தான் உள்ளது என்பதை உணர்ந்துகொண்டால், எதிர்கால நலனிற்கு நன்மை பயக்கும்.
அறிவுரை: குறித்த நேரத்தில் உண்பதும், உறங்கச் செல்வதும் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்ய ஏதுவாக இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் அவசியம். வீண் அலைச்சலைத் தவிர்ப்பதும், உடலை வருத்திக்ெகாள்ளாமல், அடிக்கடி ஓய்வெடுப்பதும் மிக, மிக அவசியம்,
பரிகாரம்: ஒன்பது சனிக்கிழமைகளில், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், மாலையில் ஐந்து எள் எண்ணெய் தீபம் ஏற்றிவந்தால் போதும்.
அனுகூல தினங்கள்
பங்குனி: 1, 2, 5-7, 11-12, 17-21, 25-27, 31.
சந்திராஷ்டம தினங்கள்:
பங்குனி: 13 பின்னிரவு முதல், 14, 15, 16 பிற்பகல் வரை.