மகரம்

17-7-2024 முதல் 16-8-2024 வரை

(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)

குடும்பம்: வாக்கு, தனம், குடும்ப ஆகிய ஸ்தானங்களில் வக்கிர கதியில் சனி பகவான் அமர்ந்துள்ளார். ஏழரைச் சனிக் காலத்தில், கடைசி பகுதியாகும் இது! இக்கடைசி பகுதியில், சனி பகவான் ஓரளவு நன்மை செய்வார் என்பதே மகரிஷிகளின் வாக்காகும். சென்ற ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, இருந்துவந்த அலைச்சல், கடின உழைப்பு, பிரயாணங்கள் ஆகியவை இனி இராது!! ஏழரைச் சனியினால், பட்ட பாட்டிற்கு, வரும் இரண்டரை வருடக் காலத்தில், ஓரளவு நன்மைகளை எதிர்பார்க்கலாம். அதற்கேற்ப, சுக ஸ்தானத்தில், குரு அமர்ந்திருப்பதும், நன்மைகளை அளிக்கக்கூடிய கிரக நிலையாகும். அதிக அலைச்சலும், உழைப்பும், வெளியூர்ப் பயணங்களும் இருப்பினும், அவற்றின் மூலம் வருமானத்தை உயர்த்தியருள்வார், சனி பகவான்! கொடுப்பதில் சனி பகவான், ராகுவிற்கு இளைத்தவரல்லர்!! ஆரோக்கியத்திலும், நல்ல அபிவிருத்தி ஏற்படும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்திருப்பதால், திருமண முயற்சிகளுக்கு, மிகவும் ஏற்ற மாதம் இந்த ஆடி!!

உத்தியோகம்: உத்தியோகத் துறையைத் தனது பிடியில் வைத்துக்கொண்டுள்ளார், சனி பகவான்! ஏழரைச் சனியின் முதல் ஐந்து வருடக் காலத்தில் பட்ட சிரமங்களுக்கு ஈடாக, இப்போது பல நன்மைகளை அளித்தருள்வார், சனி பகவான்!! தற்காலிகப் பணியாளர்கள், அவரவர்களின் பணிகளில் நிரந்தரம் செய்யப்படுவார்கள். வேலையில்லாமல், துன்பப்படும் மகர ராசியினருக்கு, நல்ல வேலையை அளித்தருள்வார், சனி பகவான்!

தொழில், வியாபாரம்: தொழில் மற்றும் வர்த்தகத் துறைகள் அனைத்தும், சனி பகவானின் ஆதிக்கத்தில்தான் உள்ளன. அவர் தற்போது, ஜென்ம ராசியை விட்டு, விலகியுள்ளதால், செய்தொழிலில் நல்ல முன்னேற்றத்தை அளித்தருள்வார்! புதிய விற்பனையகங்களைத் திறப்பதற்கும், ஏற்றமாதம் இந்த ஆடி!! சகக் கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். சந்தை நிலவரம் உங்களுக்குச் சாதகமாகத் துணை நிற்கும்! லாபம் படிப்படியாக உயர்வதை அனுபவத்தில் காண முடியும். ஏற்றுமதித் துறையினருக்கும், லாபகரமான மாதமிது. புதிய முதலீடுகளில் துணிந்து இறங்கலாம். லாபம் கிடைக்கும்.

கலைத்துறையினர்: ஏழரைச் சனியின் தோஷம் பெருமளவில் குறைந்துள்ளது. சென்ற சுமார் மூன்று வருடங்களாகவே கலைத் துறையினருக்கு, கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை! அத்தகைய நிலை தற்போது படிப்படியாக மாறிவருகிறது. திரைப்படத் தயாரிப்பாளர்கள் இனி உங்களைத் ேதடி வருவார்கள்!! இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் ஆகியோருக்கு நல்லகாலம் பிறந்துள்ளது. மீண்டும் வருமானம் அதிகரிக்கத் தொடங்கும். கர்நாடக சங்கீத வித்வான்கள், பரதநாட்டியக் கலைஞர்கள், நாதசுவர வித்வான்கள், ஓதுவா மூர்த்திகள் ஆகியோருக்கு அனுகூலமான மாதம் இது. பல வைணவ திருக்கோயில்களில் நின்றுபோயிருந்த “அரையர் சேவை” மீண்டும் தொடங்கப்படும்.

அரசியல் துறையினர்: அரசியலுக்கு அதிகாரம் படைத்த சுக்கிரன் ஆடி 15-ம் தேதி வரைஅனுகூலமாக இல்லை! 16-ம் தேதியிலிருந்து, சுப பலம் பெறுகிறார். கட்சியில் செல்வாக்கு உயரும். முக்கியப் பொறுப்புகள் உங்களிடம் ஒப்படைக்கப்படும். தசா, புக்திகளுக்கேற்ப, பதவி ஒன்று கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

மாணவ – மாணவியர்: கல்வித் துறைக்கு அதிகாரக் கிரகமான புதன், அனுகூலமாக சஞ்சரிப்பதால், படிப்பில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். நேர்முகத் தேர்வுகளில் சரியான விடையளித்து, வெற்றிக்கனியை எட்டிப்பிடித்துவிடுவீர்கள்! உயர் கல்விக்கு உங்கள் விருப்பம்போல், பிரபல கல்லுாரியில் இடம் கிடைக்கும். பலருக்கு, கல்வி உதவித் தொகை கிைடப்பதற்கும் புதனின் சஞ்சார நிலை ஆதரவாக உள்ளது.

விவசாயத் துறையினர்: செவ்வாய் மற்றும் சனி, ராகு ஆகிய கிரகங்கள் அனுகூலமாக இல்லை! உழைப்பிற்கேற்ற விளைச்சல் கிடைப்பது, சற்று கடினம்!! சூரியனும், சாதகமாக இல்லாததால், நவீன விவசாய உபகரணக் கருவிகள் கிடைக்கும். கால்நடைகள் அபிவிருத்தியடையும். அவற்றின் பராமரிப்பில் பணம் விரயமாகும்.

பெண்மணிகள்: மாதம் முழுவதும் குரு பகவான், உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கிறார்! ஆடி 16-ம் தேதியிலிருந்து, சுக்கிரனும் சாதகமாக மாறுகிறார். குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும். நெருங்கிய உறவினரிடையே பரஸ்பர ஒற்றுமையும் அந்நியோன்யமும் நிலவும். வேலையில்லாத பெண்மணிகளுக்கு, நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

அறிவுரை: வாக்கு ஸ்தானத்தில், வக்கிர கதியில் சனி பகவான் அமர்ந்திருப்பதால், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு உங்கள் சக்திக்கு மீறிய வாக்குறுதிகளை அளிக்காமல் இருக்க வேண்டும்.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் மாலையில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றின் தீபத்தில் சிறிது எள் எண்ணெய் சேர்த்து வரவும். சக்திவாய்ந்த பரிகாரம் இது.

அனுகூல தினங்கள் ஆடி: 2-4, 10-12, 16-19, 23-26, 30, 31

சந்திராஷ்டம தினங்கள் ஆடி: 20 மாலை முதல், 22 வரை.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us