துலாம்

17-7-2024 முதல் 16-8-2024 வரை

(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)

குடும்பம்: சூரியன், புதன், ராகு, கேது ஆகிய நான்கு கிரகங்களும், உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றனர், இம்மாதம் முழுவதும்! மற்ற கிரகங்கள் சாதகமாக இல்லை!! நிதி நிலைமை சுமாராக உள்ளது. மாதத்தின் கடைசி வாரத்தில் பணப்பற்றாக்குறை ஏற்பட சாத்தியக்கூறு உள்ளது. வரவை மீறிய செலவினங்கள் கவலையை அளிக்கும். அஷ்டம ராசியில், குரு, செவ்வாய் சேர்க்கை இருப்பதால், ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படக்கூடும். கை – கால்களில் வலி, மூட்டுவலி, சரும உபாதைகள் ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால் குணம் கிடைக்கும். திருமண முயற்சிகளில், தடங்கல்கள் உண்டாகும். பொருட்கள், பணம், ஆகியவை களவு போவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது – கிரக நிலைகளின்படி!! காரணமற்ற கவலைகள், மனதை அரிக்கும். நெருங்கிய உறவினரிடையே பரஸ்பர அந்நியோன்யம் பாதிக்கப்படும். பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானத்தில், சனி பகவான் அமர்ந்திருப்பதால், குழந்தைகளின் ஆரோக்கித்தில் கவனமாக இருத்தல் அவசியம்.

உத்தியோகம்: வேலைபார்க்கும் இடத்தில், உழைப்பு கடினமாக இருக்கும். இருப்பினும், ராகு அனுகூலமாக இருப்பதால், மேலதிகாரிகளின் ஆதரவும், நிர்வாகத்தினரின் பாராட்டுதல்களும், பணிகளில் உற்சாகத்தை ஏற்படுத்தும். அஷ்டம ஸ்தானத்தில், செவ்வாய் – குரு இணைந்திருப்பதால், ஏதாவதொரு உடல் பாதிப்பினால், அடிக்கடி விடுப்பில் செல்ல நேரிடும். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் துலாம் ராசியினருக்கு, தடங்கல்கள் ஏற்படும்.

தொழில், வியாபாரம்: கூடியவரையில், உற்பத்தியை அளவோடு வைத்துக்கொள்வது உங்கள் எதிர்கால நலனுக்கு ஏற்றதாகும். நியாயமற்ற போட்டிகள் கவலையை அளிக்கும். லாபத்தைத் தக்க வைத்துக்கொள்ள, கடினமாகப் போராட வேண்டியிருக்கும். நிதிநிறுவனங்களின் ஆதரவு குறையும். சந்தை நிலவரம், பிரச்னைகளை ஏற்படுத்தும். ஏற்றுமதித் துறையினருக்கு, வரவேண்டிய பாக்கிகளை வசூலிப்பதில் ஏமாற்றமே மிஞ்சும்.

கலைத் துறையினர்: இம்மாதம் முழுவதும், கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை! எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் ஏமாற்றத்தையே அளிக்கும். திரைப்படத் துறையினருக்கு, பல பிரச்னைகள் நீடிக்கின்றன. நிதிநிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைப்பது கடினமே!! வருமானம் குறைவதால், உங்கள் வசதிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும். “நண்பர்கள்” என நீங்கள் கருதிப் பழகியவர்களே உங்களைக் கண்டால் முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள்! அனைத்து அம்சங்களிலும் சற்று சிரமமான மாதம் இது என்பதையே கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. பொறுமை, நிதானம், சகிப்புத் தன்மை ஆகியவை சமய சஞ்சீவியாக உதவும்.

அரசியல் துறையினர்: கூடிய வரையில், இம்மாதம் முழுவதும், தீவிர அரசியல் செயல்பாடுகளிலிருந்து விலகியிருப்பது, நன்மையளிக்கும் என்பதை கிரக நிலைகள் குறிப்பிட்டு, எச்சரிக்கை செய்கின்றன. பேச்சிலும், செயலிலும், நிதானம் மிக, மிக அவசியம். சிறு தவறும், பெரும் பிரச்னையில் உங்களைக் கொண்டுவிடக்கூடும். மேல்மட்டத் தலைவர்களுக்கு, உங்கள் மீதுள்ள நம்பிக்கை குறையும்.

மாணவ – மாணவியர்: கல்வித் துறையை, தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள அனைத்து கிரகங்களும் ஓரளவு சுப பலத்துடன் நிலைகொண்டுள்ளதால், கல்வி முன்னேற்றம் எவ்விதத் தடையுமின்றி, நீடிக்கி்ன்றது. இருப்பினும், மூன்றாம் வாரத்தில், உடல் நலனில் பின்னடைவு ஏற்பட்டு, பின்பு எளிய சிகிச்சை மூலம் குணம் ஏற்படும். விளையாட்டுகள், போட்டிகள் ஆகியவற்றில் கலந்து கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

விவசாயத் துறையினர்: ராசிக்கு அஷ்டமன ஸ்தானத்தில், செவ்வாய் நிலைகொண்டுள்ளதால், உழைப்பிற்கு ஏற்ற விளைச்சல் கிடைப்பது சற்று கடினம்! மழையும், தாமதப்படுவதனால், தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக்காட்டுகின்றன. கால்நடைகளின் பராமரிப்பிற்காக, கடன் வாங்க வேண்டிய அவசியமும் ஏற்படக்கூடும். கூடிய வரையில், அதிக வட்டிக்குக் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது உங்கள் எதிர்கால நன்மைக்கு ஏற்றதாகும்.

பெண்மணிகள்: ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம். கிரக நிலைகள் சரியில்லை! உறவினர்களுடன் பழகும்போது, உண்மையான அன்பை அவர்களிடம் எதிர்பார்க்க வேண்டாம். வேலை பார்க்கும் பெண்மணிகள், தங்கள் சொந்தப் பிரச்னைகளை சக ஊழியர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம்!! அதனால் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.

அறிவுரை: பேச்சிலும், பிறருடன் பழகுவதிலும் அளவோடு இருத்தல் அவசியமாகும். நெருங்கிய உறவினர்களுடன் பகை ஏற்படக்கூடும் என்பதை கிரக நிலைகள் அறிவுறுத்துகின்றன.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், மாலையில் தீபத்தில் சிறிது நெய் சேர்த்துவந்தால் போதும். அல்லது, மண் அகலில் நெய் தீபம் ஏற்றிவந்தாலும் பலன் கிடைக்கும்.

அனுகூல தினங்கள் ஆடி: 1-3, 10-12, 16-18, 23-25, 30, 31.

சந்திராஷ்டம தினங்கள் ஆடி: 13 இரவு முதல், 15 பின்னிரவு வரை.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us