துலாம்

Published: Last Updated on

14-3-2024 முதல் 13-4-2024 வரை

(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)

குடும்பம்: உங்கள் ராசிக்கு, நாதனாகிய சுக்கிரன், பங்குனி 18-ம் தேதி வரை உங்களுக்குச் சாதகமாக உள்ளார். சூரியன், ராகு ஆகிய இருவரும்கூட, மாதம் முடியும் வரை உங்களுக்கு மிகவும் ஆதரவாகவே சஞ்சரிக்கின்றனர். குருவினாலும், நன்மையே. சஞ்சார பலத்துடன் குருவின் பார்வை பலனும் உங்கள் பக்கம்தான்! அவரது 7-ம் சுபப் பார்வை உங்கள் ராசிக்குக் கிடைப்பது, மேலும் பல நன்மைகளை உங்களுக்கு சற்று தாராளமாகவே அளிக்கவுள்ளனர், பிரதான கிரகங்கள் அனைத்தும்!! குடும்பத்தில் ஒற்றுமையும் பரஸ்பர பாசமும், அன்பும் நிலவும். போதிய அளவிற்கு வருமானம் கிட்டும். வீண் செலவுகள் குறையும். அனைத்தையும் விட, உங்கள் ஆரோக்கியம் மீண்டும் “normal” எனக் கூறும் அளவிற்கு, முன்னேற்றமடையும். உங்களின் ராசிக்கு களத்திர, காம, சயன ஸ்தானமாகிய மேஷத்தில் குரு அமைர்ந்திருப்பது, கணவர் – மனைவியரிடையே பரஸ்பரம் அந்நியோன்யம் நிலவுவதை எடுத்துக்காட்டுகிறது. திருமணமான பெண்கள், கருத்தரித்த இம்மாத கிரகநிலைகள், சுப பலம் பெற்றுள்ளன. இம்மாதம் கருத்தரிக்கும் பெண்களுக்கு, பெரும்பாலும் ஆண் குழந்தைகளாகவே இருக்கும் (ஆதாரம்: “ஸிம்மவலோக்கணம்” -எனும் மிகப் பழமையான மருத்துவ ஜோதிட நூல். அதாவது குரு பலமாக சஞ்சரிக்கும்போது, கருவில் உண்டாகும் குழந்தைகள் பெரும்பாலும் ஆண் குழந்தைகளாகவே இருப்பார்கள். சுக்கிரன் வலுப்பெற்றிருக்கும்போது, கருத்தரித்தால், பெண் குழந்தைகளாக இருக்கும் என்று அந்த நூல் தெரிவிக்கிறது.) இந்த அடிப்படையில்தான் வேத காலத்திலும் (Vedic age) கிருதயுகத்திலும், திரேதாயுகத்தின் முற்பகுதியிலும் நம் முன்னோர்கள் கணவர் – மனைவி உடல் சேர்க்கையின் நாளைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். அந்த அளவிற்கு ஜோதிடம் சென்ற காலங்களில் நம் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துள்ளது. திருமண முயற்சிக்கு ஏற்ற மாதம் இந்தப் பங்குனி!!

உத்தியோகம்: உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரமும், பாராட்டுதல்களும் கிடைக்கும் மாதமாகும். மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். அன்றாடப் பணிகளில் உற்சாகம் மேலிடும். வேலை அல்லது நிறுவன மாற்றத்திற்கு விருப்பம் இருப்பின், முயற்சி செய்யலாம். வெளிநாடு சென்று பணியாற்றி, செல்வம் சேர்க்க ஆர்வமிருப்பின், இப்போது முயற்சிக்கலாம். சக-ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

தொழில், வியாபாரம்: அதிக அலைச்சலும், கடின உழைப்பும், வெளிமாநிலப் பயணங்கள், அதிகரிப்பினும், அதற்கேற்ற லாபம் கிட்டும். புதிய முதலீடுகளில் அளவோடு ஈடுபடலாம். சந்தை நிலவரம் சாதகமாக உள்ளது. ஏற்றுமதித் துறையினருக்கு, ரஷ்ய – உக்ரைன் போரினால் ஏற்பட்டுவந்த பின்னடைவு நீங்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.

கலைத் துறையினர்: மிகவும் அனுகூலமான மாதம், இது உங்களுக்கு! புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத் தட்டும். வருமானம் உயரும். திரைப்படத் தயாரிப்பாளர்கள் புதிய படங்களைத் தயாரிக்கலாம். ெவற்றி உறுதி. சமூகப் பிரச்னைகள், சரித்திரம் ஆகியவற்றைப் பின்னணியாகக் கொண்டுள்ள படங்கள் அேமாக வெற்றியடையும். இயக்குநர்களுக்கு நல்ல வருமானம் கிட்டும். மக்களிடையே மதிப்பு அதிகரிக்கும். அரிய வாய்ப்பு இது! பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!

அரசியல்துறையினர்: பல மாதங்களுக்குப் பிறகு, பல சோதனைகளுக்குப் பிறகு, இப்போது நல்ல காலம் பிறந்துள்ளது. இதுவரை கண்டும் காணாதது போல் நடித்துவந்த மேலிடத் தலைவர்கள், இனி உங்களைத் தேடி வருவார்கள். அவர்களது சென்ற காலத்தில் ெசய்த தவறுகளை மறந்து, அரிய இந்த வாய்்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். மிக முக்கிய தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. நம் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் மிக முக்கிய தேர்தல் இது. இந்தத் தேர்தலில் துலாம் ராசியினரின் பங்கு சற்று அதிகமாகவே இருக்கும் என கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

மாணவ – மாணவியர்: கல்வி முன்னேற்றம் எவ்வித் தடையுமின்றி நீடிக்கிறது, இம்மாதம் முழுவதும்! உடல் நலத்திலும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பலருக்கு நேர்முகத் தேர்வுகளில் (campus interview) மகத்தான வெற்றி கிட்டும். கிரகிப்புத் திறனும், நினைவாற்றலும் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள்.

விவசாயத் துறையினர்: வயல் பணிகளில், இரவு, பகல் பாராது கண்விழித்துப் பாடுபட்ட உழைப்பின் பலன் இம்மாதத்தில் கிடைத்துள்ளது, துலாம் ராசியினருக்கு. வயலைப் பார்த்தாலே, செழித்து வளர்ந்துள்ள பயிர்கள், உங்கள் கடின உழைப்பிற்குச் சான்றாக, உங்களை மகிழ்ச்சியடையச் செய்யும். எந்தக் காரியமானாலும், தன் சுகம் கருதாது உழைக்கும், மனப்பான்மையினர், துலாம் ராசி அன்பர்கள்! உழைப்பினாலும் உயர்ந்தவர்கள், துலாம் ராசிக்குச் சொந்தக்காரர்கள். அதனை இம்மாதத்தில் கண்கூடாகக் காண்பீர்கள். வருமானமும், விளைச்சலும் உங்களை மகிழ்விக்கும். கால்நடைகள் அபிவிருத்தியடையும். பழைய கடன்கள் அடைபடும்.

பெண்மணிகள்: பலன் தரும் பங்குனி, இது உங்களுக்கு! குடும்பப் பொறுப்புகளை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு, மகிழ்ச்சியையும், மன நிறைவையும் ஏற்படுத்தும் மாதமாகும், இம்மாதம். ெதாடர்ந்து கிரக நிலைகள் சரியில்லாததால், துலாம் ராசிப் பெண்மணிகள் சற்று அதிகமாகவே உடலாலும் மனத்தாலும் கஷ்டப்பட்டுவிட்டீர்கள், சென்ற பல மாதங்களாகவே. இனி இந்நிலை மாறிவிடுமென பிரதான கிரகங்கள் சுட்டிக் காட்டுகின்றன. மனக்குறைகள் நீங்கும். உடல்நிலையிலும் நல்ல அபிவிருத்தியைக் காணலாம்.

அறிவுரை: கிரகங்கள் கொடுப்பதை எதிர்காலத்திற்கென்று சேமித்துவைத்துக் கொள்ளுங்கள். துலாம் ராசியினருக்கு சபலம் அதிகம். தவிர்ப்பது நலம்.

பரிகாரம்: சனிக்கிழமைகள் தோறும் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று தீபத்தில் சிறிது எள் எண்ணெய் செலுத்திவிட்டு, தரிசனம் செய்துவிட்டு வரவும்.

அனுகூல தினங்கள்:
பங்குனி: 1, 5 – 8, 12 – 14, 18 – 21, 25 – 28.

சந்திராஷ்டம தினங்கள்:
பங்குனி: 2 முதல், 4 காலை வரை. மீண்டும் 29 பிற்பகல் முதல், 31 மாலை வரை.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us