14-5-2024 முதல் 14-6-2024 வரை
(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)
குடும்பம்: இம்மாதம் முழுவதும் சுக்கிரன் உங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிப்பதால், வருமானம் தேவையான அளவிற்கு இருக்கும். திட்டமிட்டுச் செலவு செய்தல் நல்லது. விரய ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பதால், நெருங்கிய உறவினரிடையே பரஸ்பர அந்நியோன்யம் குறையும். குடும்பத்தில், தேவையற்ற வாக்குவாதங்களும், ஒற்றுமைக் குறைவும் கவலையை அளிக்கும். விரயஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால், உஷ்ண சம்பந்தமான சரும பாதிப்புகள் ஏற்படும். சிறு, மருத்துவ சிகிச்சையினால், குணம் கிட்டும். விலையுயர்ந்த பொருட்களையும், பணத்தையும் ஜாக்கிரதையாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பாக்கிய ஸ்தானத்தில் சனி பகவானும், ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் ராகு கூட்டுச் சேர்க்கையும் ஏற்பட்டிருப்பதால், கைப் பணத்தை எண்ணி, எண்ணிச் ெசலவழியுங்கள். திருமண முயற்சிகளில், தவறான வரனை நிச்சயித்துவிடும் வாய்ப்பு உள்ளது. தீர விசாரிக்காமல், முடிவெடுக்க வேண்டாம்.
உத்தியோகம்: பாக்கிய ஸ்தானத்தில் சனி பகவான் நிலைகொண்டுள்ள நிலையில், ஜீவன ஸ்தானத்தில் ராகுவும் செவ்வாயும் இணைந்திருப்பது, வேலை பார்க்கும் இடத்தில், பணிச் சுமையும், பொறுப்புகளும் சக்திக்கு மீறி இருப்பினும், உங்கள் திறமைக்கு அங்கீகாரமும் பாராட்டுதல்களும் கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது. ஓய்வில்லாத, கடின உழைப்பு உடல் அசதியையும், சோர்வையும் ஏற்படுத்தினாலும், அதற்கான பரிசைத் தந்தருள்வார், சனி பகவான். “வேலை வாங்கினாலும், அதற்கேற்ற கூலி கொடுக்கும் பிரான்….!” என சனி பகவானைப் புகழ்கிறது “ஜோதிட ரத்னாகரம்” எனும் புகழ்பெற்ற ஜோதிட நூல். ஊதிய உயர்வையும், பதவியுயர்வையும் நீங்கள் இப்போது எதிர்பார்க்கலாம். ஒருசிலருக்கு, பதவியுயர்வு மட்டுமல்லாது, வெளியூர் கிளை நிறுவனத்திற்கு மாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. புதிய வேலைக்கு முயற்சிப்பதற்கு ஏற்ற மாதம் இது.
தொழில், வியாபாரம்: வெளியூர்ப் பயணங்களும், ஓய்வில்லாத உழைப்பும், நேர்மையில்லாத போட்டிகளும், சில தருணங்களில் பண நெருக்கடியும் ஏற்பட்டாலும், அவையனைத்தையும் சமாளித்து, விற்பனையை அதிகரித்து, லாபம் பெறவைப்பார்கள், சனி, ராகு மற்றும் செவ்வாய் மூவரும்! ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளில் பிரசித்திப் பெற்ற வர்த்தக நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஒருசிலர் வியாபாரம் சம்பந்தமாக வெளிநாடு சென்று வரும் யோகமும் அமைந்துள்ளது.
கலைத்துறையினர்: போட்டிகள் நிறைந்துள்ள திரைத்துறையினருக்கு, லாபகரமானமாதமாகும் இந்த வைகாசி!! பாக்கியம் மற்றும் ஜீவன ஸ்தானங்களில், சுப பலம் பெற்றுள்ள கிரகங்கள் அமர்ந்துள்ளனர். தயாரிப்பாளர்கள், புதுப்படத் தயாரிப்புகளில் துணிந்து முதலீடு செய்யலாம். நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், புகைப்பட வித்தகர்கள் ஆகியோருக்குக் கடின உழைப்பு இருப்பினும், அதற்குத் தகுந்த லாபமும், வருமானமும், மக்களிடையே செல்வாக்கும் அதிகரிக்கும்.
அரசியல்துறையினர்: சுக்கிரன் சிறந்த சுப பலம் பெற்றுத் திகழ்கிறார். கட்சியில் உருவான பல எதிர்ப்புகளையும் முறியடித்து, உங்கள் இடத்தை பலப்படுத்திக் கொள்ள கிரக நிலைகள் சாதகமாக உள்ளன. உங்கள் அரசியல் முன்னேற்றத்தையும், மக்களிடையே உள்ள செல்வாக்கையும் அவை பாதிக்காது.
மாணவ – மாணவியர்: வைகாசி 10-ம் தேதி வரை கல்விக்கு அதிபதியான புதன், அனுகூலமாக சஞ்சரிக்கிறார். அதன்பிறகு, அவரது நிலையில் மாற்றம் நிகழ்கிறது. மாதத்தில் முதல் வாரம் வரை, கல்வி முன்னேற்றம் எவ்விதத் தடையுமின்றி நீடிக்கிறது. அதன்பிறகு, சக-மாணவர்களினால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். கூடிய வரையில், பிற மாணவர்களுடன் நெருங்கிப் பழகாமலிருப்பது நல்லது. நீங்களுண்டு உங்கள் படிப்புண்டு என்றிருப்பது உங்கள் எதிர்கால கல்வி முன்னேற்றத்திற்கு உதவும்.
விவசாயத் துறையினர்: ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய், ராகு சேர்க்கையும், பாக்கிய ஸ்தானத்தில் சனி பகவான் அமர்ந்திருப்பதும் மிக நல்ல கிரக சஞ்சார நிலைகளாகும். அடிப்படை வசதிகளுக்கு எவ்விதக் குறையுமிராது. செழித்து வளர்ந்துள்ள வயலைப் பார்த்தாலே இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். கால்நடைகள் அபிவிருத்தியடையும். ஆயினும், அவற்றின் பராமரிப்பில் பணம் செலவழியும்.
பெண்மணிகள்: இம்மாதம் முழுவதும், சுக்கிரன் உங்களுக்கு ஆதரவாக நிலைகொண்டிருக்கிறார். இருப்பினும், விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் நிலை குடும்பப் பிரச்னைகளையும், ஆரோக்கியக் குறைவையும் எடுத்துக்காட்டுகிறது. கூடியவரையில், அலைச்சலையும் உழைப்பையும் குறைத்துக்கொள்ளுங்கள். உடல் நலனில் கவனம் வேண்டும். நெருங்கிய உறவினர்களுடன் கருத்துவேற்றுமை ஏற்படக்கூடும். சற்று விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது, உடல் நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவும்.
அறிவுரை: உடல் நலனில் கவனமாக இருங்கள். அதிக அலைச்சலையும், வெளியூர்ப் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: தினமும் காலை – மாலை இருவேளைகளிலும், அபிராமி அந்தாதி சொல்லி அன்னையைப் பூஜித்து வந்தால் தோஷங்கள் அடியோடு விலகும்.
அனுகூல தினங்கள்: வைகாசி: 2-4, 10-13, 17-19, 24-26, 30, 31.
சந்திராஷ்டம தினங்கள்: வைகாசி:14 மாலை முதல், 16 இரவு வரை.