துலாம்

Published: Last Updated on

(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)

17-8-2024 முதல் 16-9-2024 வரை

குடும்பம்: லாப ஸ்தானத்தில் நிலைகொண்டுள்ள சூரியனும், சுக்கிரனும் உங்கள் பணத் தேவைகளை கவனித்துக் கொள்வதால், நிதித் தட்டுப்பாடு இருப்பதற்கு வாய்ப்பில்லை. இவர்கள் இருவருக்கு உதவியாக, ராகுவும் அனுகூல நிலையில் சஞ்சரிக்கிறார். திட்டமிட்டு செலவு செய்தால், எதிர்காலத்திற்கென்று சிறிது சேமித்து வைத்துக் கொள்ள முடியும். பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானத்தில், சனி பகவான் அமர்ந்திருப்பதால், குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம் ஆகியவற்றில் கவனமாக இருத்தல் நல்லது. ராகுவின் நிலை, எதிர்பாராத இடங்களிலிருந்து பண உதவி கிடைப்பதற்கு உதவிகரமாக உள்ளது. புதிய வஸ்திரங்கள், ஆபரணங்கள் வாங்கும் யோகமும் அமைந்துள்ளதை சுப பலம் பெற்றுள்ள சுக்கிரனின் நிலை எடுத்துக்காட்டுகிறது. விலையுயர்ந்த பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். குருவின் நிலை, பொருட்கள் களவு போகும் வாய்ப்பு உள்ளதை எடுத்துக்காட்டுகிறது.

உத்தியோகம்: ஜீவன காரகரான சனி பகவான், இம்மாதம் முழுவதும் அனுகூலமாக இல்லை. இருப்பினும், லாப ஸ்தானத்தில் உள்ள சூரியனும், சுக்கிரனும் அனுகூலமான நிலையில் சஞ்சரிக்கும் ராகுவும் தக்க தருணத்தில் உங்களுக்குக் கைகொடுத்து உதவுகின்றனர். பணிச் சுமை அதிகமாக இருக்கும். மேலதிகாரிகளின் கண்டிப்பு, கவலையை அளிக்கும். ஒருசிலருக்கு, நிறுவன மாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. மேலதிகாரிகளுடன் அலுவலகப் பிரச்னைகள் பற்றி விவாதிக்கும்போது, உணர்ச்சிவசப்படாமல், இருப்பது, அவசியம் என்பதை கிரக நிலைகள் சுட்டிக்காட்டுகின்றன.

தொழில், வியாபாரம்: அஷ்டம ஸ்தானத்தில் (8), குரு – செவ்வாய் சேர்க்கை ஏற்பட்டுள்ள இம்மாதத்தில், தொழில் காரகரான சனி பகவானும் அனுகூலமாக இல்லை. திட்டமிட்டு உற்பத்தியை அளவோடு வைத்துக் கொள்வது அவசியம். உலக சூழ்நிலை பதற்றமாக இருப்பதால், உற்பத்தியை அளவோடு வைத்துக் கொள்வது விவேகமாகும். நிதிநிறுவனங்களின் ஒத்துழைப்பு குறையும். சகக் கூட்டாளிகளுடன் கருத்துவேற்றுமை ஏற்பட்டு, அதன் விளைவாக சிலர் வெளியேறிவிடும் சாத்தியக்கூறு உள்ளதையும் கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. புதிய முதலீடுகளைக் கண்டிப்பாக தவிர்த்தல் நல்லது.

கலைத்துறையினர்: சுக்கிரன் ஒருவரே உங்களுக்கு இம்மாதம் சாதகமாக சஞ்சரிக்கின்றார். குரு, சனி பகவான், செவ்வாய் ஆகி்யோரால் எவ்வித நன்மையும் எதி்ர்பார்க்க இயலாது. வருமானம் குறைவாக இருக்கும். அத்தியாவசியச் செலவுகளைச் சமாளிப்பது சிரமமாக இருக்கும். சினிமாத் துறையினருக்கு, மீண்டும் தொழிலில் பின்னடைவு ஏற்படும். இயக்குநர்கள், படத் தயாரிப்பாளர்கள், நடிகர் நடிகைகள் ஆகியோர் தங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டிய மாதமாகும் இது.

அரசியல் துறையினர்: சுக்கிரனும், சூரியனும் அனுகூலமாக இருப்பதால், மன நிம்மதியை அளிக்கும் காலகட்டமிது. கட்சியில் ஆதரவு நீடிக்கிறது. கட்சிப் பணிக்காக வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும்போது, சற்று எச்சரிக்கையுடன் இருங்கள். ஏனெனில், ஆயுள் ஸ்தானத்தில் குரு, செவ்வாய் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. சிறு, சிறு விபத்துகளில் அகப்பட்டுக் கொள்ளும் வாய்ப்புள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக, இரவு நேரங்களில் தனியே வெளிச் செல்ல வேண்டாம். வாகனம் ஓட்டுதலையும் தவிர்ப்பது மிகவும் நல்லது.

மாணவ – மாணவியர்: மாதம் முழுவதும், கல்விக்கு அதிபதியான புதன் சுப பலம் பெற்றுத் திகழ்கிறார். படிப்பில் மனம் தீவிரமாகப் படியும். நினைவாற்றலும், கிரகிப்புத் திறனும் அதிகரிக்கும். பல மாணவ – மாணவியருக்கு நேர்முகத் தேர்வில் பங்கேற்றால், வெற்றி பெறுவது உறுதி.

விவசாயத் துறையினர்: ராசிக்கு 8-ம் இடத்தில் (அஷ்டம ஸ்தானம்) செவ்வாய் சஞ்சரிப்பதால், வயல் பணிகள் சற்று கடினமாகவே இருக்கும். கால்நடைகளின் பராமரிப்பில் பணம் விரயமாகும். சூரியன் சுப பலம் பெற்று விளங்குவதால், அரசாங்கச் சலுகைகள் கிடைக்கும். அடிப்படை வசதிகள் குறையும். அண்டை நிலத்தாரோடு வாக்குவாதம் செய்வதைத் தவிர்ப்பது அவசியம். ஏனெனில், ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் (8) செவ்வாயும், குருவும் சேர்ந்திருப்பதால், பகையுணர்ச்சி மேலும் வளரும்.

பெண்மணிகள்: சுக்கிரன் ஒருவரால், பல நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். இருப்பினும், ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் (8) , குரு ெசவ்வாய் சேர்க்கை இருப்பதால், உடல் நலனில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். மாடிப் படிகளில் ஏறி இறங்கும்போதும், குளியலறையில் கால் பதிக்கும்போதும் அதி ஜாக்கிரதையாக இருத்தல் அவசியம். காரணம், கிரகநிலைகளின்படி, சிறு விபத்துகள் ஏற்படுவதற்கும், அதனால், கால் கைகளில் ஊனம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன.

அறிவுரை: உடல்நலனில் கவனமாக இருங்கள். பிறருடன் வாக்குவாதம் வேண்டாம். வாகனம் ஓட்டும்போது, நிதானமாக இருக்கவும்.

பரிகாரம்: வைதீஸ்வரர் கோயில் தரிசனம், செவ்வாயின் தோஷத்தை அடியோடு போக்கும். வியாழக்கிழமைகளில் திருக்கோயில் ஒன்றில் பரிகார தீபம் (நெய்) ஏற்றிவருவது குருவின் அஷ்டம ஸ்தான தோஷத்தைப் போக்கும்.

அனுகூல தினங்கள்
ஆவணி: 1, 2, 7-9, 13-15, 20-23, 27-29.

சந்திராஷ்டம தினங்கள்
ஆவணி: 10 முதல், 12 காலை வரை.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us