14-4-2024 முதல் 13-5-2024 வரை
(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)
குடும்பம்: உங்கள் ராசிக்கு நாதனாகிய செவ்வாய், சனி பகவானுடன் இணைந்து, அர்த்தாஷ்டக தோஷத்தை விளைவிக்கக்கூடிய, கும்ப ராசியில் நிைலகொண்டிருக்கிறார். குரு பகவான், சித்திரை 18-ம் தேதியிலிருந்து உங்களுக்குச் சாதகமாக மாறிவிடுகிறார். சூரியன், இம்மாதம் முழுவதும் ஆதரவாக சஞ்சரிக்கிறார். சித்திரை 11-ம் ேததி வரைதான் சுக்கிரன் அனுகூலமாக இருக்கிறார். முதல் இரண்டு வாரங்கள் வரை, வருமானம் போதிய அளவிற்கு இருக்கும். அதற்குப் பிறகு, எதிர்பாராத செலவுகளால் பணத் தட்டுப்பாடு ஏற்படும். மாதக் கடைசியில், கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். தவிர்க்க முயற்சி செய்வது, எதிர்காலத்திற்கு நல்லது. திருமண முயற்சிகளுக்கு, இம்மாத கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை. சனியின் நிலையினால், உடல் நலனில் பின்னடைவு ஏற்பட்டு, எளிய சிகிச்சை மூலம் குணம் ஏற்படும்.
உத்தியோகம்: ஜீவன காரகரான சனி பகவான், ஆதரவாக இல்லை. ராகுவினாலும், நன்மை ஏற்பட வாய்ப்பில்லை. உங்கள் பணிகளில் கவனமாக இருத்தல் அவசியம். மேலதிகாரிகளுடன் அனுசரித்து நடந்துகொள்ளவும். சக-ஊழியர்களுடன் முக்கிய அலுவலக விஷயங்கள் பற்றி விவாதிக்கக் கூடாது. வௌிநாட்டு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு, இம்மாதம் கிரக நிலைகள் சாதகமாக இல்லை. தவிர்ப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி ஏமாந்துவிடுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை ராகுவின் நிலை, குறிப்பிட்டுக்காட்டுகிறது. புதிய ேவலைக்கு முயற்சிக்க ஏற்ற மாதமில்லை இது!!
தொழில், வியாபாரம்: சந்தை நிலவரத்திற்கேற்ப, உற்பத்தியைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும். தொழிலை விருத்தி செய்யும் திட்டமிருப்பின், ஒத்திப்போடுவது அவசியம். ஏனெனில், வர்த்தகத் துறையைக் கட்டுப்படுத்தும் சனி, செவ்வாய், ராகு மற்றும் சுக்கிரன் ஆகிய நால்வரும் ஆதரவாக சஞ்சரிக்கவில்லை. நிதிநிறுவனங்களின் நெருக்கடி கவலையை அளிக்கும். புதிய முயற்சிகளையும், விஸ்தரிப்புத் திட்டங்களையும் ஒத்திப்போடுவது மிகவும் அவசியம். பல தருணங்களில், கூட்டாளிகளினால், பிரச்னைகள் உண்டாகும். அத்தகைய தருணங்களில், நிதானமாகச் சிந்தித்து, சாதுர்யமாக நடந்துகொண்டால், விபரீதப் பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க இயலும். வெளிநாட்டுப் பயணங்கள், பலன் தராது! ஆதலால், தவிர்ப்பது நல்லது. ஒருசிலர், வியாபாரம் சம்பந்தமாக, வெளிநாடு சென்றுவரும் சாத்தியக்கூறு உள்ளது கிரக நிலைகளின்படி!! பிரதான கிரகங்கள் அனுகூலமற்று சஞ்சரிப்பதால், வெளிநாட்டுப் பயணத்தினால், அதிக நன்மை எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. செலவு செய்வதுதான், கண்ட பலன்!
கலைத்துறையினர்: வருமானமும், வாய்ப்புகளும் ஒரே சீராக இருக்கும். ஆயினும், செலவுகள் அதிகமாக ஏற்படும், சில தருணங்களில், பிறர் உதவியை நாடவேண்டிய அவசியம் உருவாகும். திரைப்படத் துறையினருக்கு, சித்திரை 12-ம் தேதியிலிருந்து, சுக்கிரன் அனுகூலமற்று மாறுவதால், எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் ஏமாற்றத்தைத் தரும். மாதக் கடைசியில், நிதிப் பற்றாக்குறை சற்று கடினமாக இருக்கும். பொறுமையுடன் நிலைமையைச் சமாளிப்பது அவசியம். ஏனெனில், தற்போதுள்ள கிரக நிலைகளின்போது, வாங்கும் கடன் வேகமாக அதிகரிக்கும் என புராதன ேஜாதிட நூல்கள் எச்சரிக்கை செய்கின்றன.
அரசியல்துறையினர்: அரசியல் துறையுடன் சம்பந்தப்பட்டுள்ள முக்கிய கிரகங்கள் அைனத்தும் சாதகமாக இல்லை! பேச்சில் நிதானம் வேண்டும். அவசர முடிவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். கட்சியில் ஆதரவு குறையக்கூடும். பல கட்சிகளிலிருந்து ஒரே சமயத்தில், அழைப்பும், நிர்ப்பந்தமும் ஏற்படுவதால், என்ன முடிவெடுப்பது என்பதில் மனதில் குழப்பம் ஏற்படும். உறக்கம், நிம்மதி பாதிக்கப்படும். கட்சியில், நண்பர் யார்? எதிரி யார்? என்பது தெரியாமல், மனதில் குழப்பம் ஏற்படும். பரிகாரம் அவசியம்.
மாணவ – மாணவியர்: பூர்வ புண்ணிய, புரத்திர ஸ்தானத்தில், ராகு நிலைகொண்டுள்ள இத்தருணத்தில், புதனும் சாதகமாக இல்லை! படிப்பில், மனதை ஊன்றிச் ெசலுத்துவது கடினமாக இருக்கும். உடல் நலனும் சிறிது பாதிக்கப்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. ேசர்ந்தாற்போல், சில மணி நேரம் படிக்க இயலாதபடி, சோர்வும், அசதியும் மேலிடும். படிக்க உட்கார்ந்தால், தூக்க உணர்ச்சி அதிகரிக்கும். கூடியவரையில், இரவில் வெகு நேரம் கண் விழித்துப் படிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். உடன் படிக்கும் நண்பர்களுடன் வெளிச் செல்வதையும், தேவையற்ற அலைச்சலையும் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.
விவசாயத் துறையினர்: பூமி காரகரான செவ்வாய், அர்த்தாஷ்டக ராசியில், சனியுடன் இணைந்திருப்பது நல்லது அல்ல! வயல் பணிகளில் உழைப்பு கடினமாகும். உழைப்பிற்கேற்ற விளைச்சல் கிடைக்காது. ஆதலால், வருமானமும் எதிர்பார்த்ததை விடக் குறைவாகவே இருக்கும். 11-ம் தேதி வரைதான் உங்களுக்கு ஆதரவாக அமர்ந்துள்ளார். ஆதலால், முதல் இரண்டு வாரங்கள் வரை, வயல் பணிகளில் எவ்விதப் பிரச்னையும் இராது நடைபெறும். ஆயினும், மூன்றாம் வாரத்திலிருந்து, விளைச்சலும் வருமானமும் சற்று பாதிக்கப்படும். பழைய கடன்கள் தொல்லை தரும். கால்நடைகளின் பராமரிப்பிலும் பணம் விரயமாகும். மாதம் முழுவதும், சூரியன் சுப பலம் பெற்றிருப்பதால், அரசாங்கச் சலுகைகள் தக்க தருணத்தில் கிடைக்கும்.
பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களைக் காக்கும் பிரதான கிரகமாகிய குரு, சித்திரை 18-ம் தேதிவரை உங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிக்கின்றார். மற்றொரு கிரகமாகிய சுக்கிரன், 11-ம் தேதி வரைதான் உங்களுக்கு ஆதரவாக அமர்ந்துள்ளார். முதல் இரண்டு வாரங்கள் சிறந்த முன்னேற்றத்தையும், நன்மைகளையும் நீங்கள் எதிர்பார்க்கலாம். மூன்றாம் வாரத்திலிருந்து, குடும்ப நிர்வாகத்தில் சிறிது பிரச்னைகளை நீங்கள் சமாளிக்க நேரிடும். பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானத்தில், ராகு பலம் பெற்றிருப்பதால், குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். பல குழந்தைகளுக்கு, பள்ளியிலும், கல்லூரிகளிலும் பிரச்னைகள் ஏற்படும்.
அறிவுரை: வீண் கவலைகளைத் தவிர்க்கவும். கைப்பணத்தை எண்ணி, எண்ணிச் ெசலவு செய்யவும்.
பரிகாரம்: தினமும் கந்தர் சஷ்டி கவசம் படித்தாக வேண்டும். பெண்மணிகள், லலிதா சகஸ்ர நாமம், ஸ்துதி, மீனாட்சி பஞ்சரத்னம், அபிராமி அந்தாதி ஆகியவற்றில் எவை முடிகிறதோ அவற்றைத் தினமும் உங்கள் வீட்டுப் பூஜையறையில் நெய் தீபம் ஏற்றிவைத்துப் படித்து வந்தால் போதும்.
அனுகூல தினங்கள்
சித்திரை: 3-6, 12-14, 19-21, 23-26.
சந்திராஷ்டம தினங்கள்
சித்திரை: 2 நள்ளிரவு வரை. மீண்டும், 27 பின்னிரவு முதல் 30 காலை வரை.