மீனம்

14-4-2024 முதல் 13-5-2024 வரை

(பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை)

குடும்பம்: ஏழரைச் சனியின் ஆரம்பப் பகுதியில் உள்ள உங்களுக்கு, ஜென்ம ராசியில் சுக்கிரனும், ராகுவும், புதனும் சேர்ந்திருப்பது, நன்மையும், தீமையும் மாறி, மாறி வருவதைக் குறிக்கிறது. சுக்கிரனால், நன்மைகள் ஏற்படும். மேலும், ராகுவினால் ஏற்படும் தோஷத்தை, குருவின் சஞ்சார பலம் குறைக்கிறது. சிறு, சிறு உடல் உபாதைகள் மனதில் கவலையை ஏற்படுத்தும். உடலில் சிறு உபாதை ஏற்பட்டாலும், தகுந்த மருத்துவ ஆேலாசனை பெறுவது மிகவும் நல்லது. ராசி நாதனாகிய குரு பகவான், சித்திரை 17-ம் தேதி வரையில்தான் உங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிக்கிறார். அதன் பிறகு, அவரால் அதிக நன்மைகளை எதிர்பார்க்க இயலாது. சிறு விஷயங்களுக்கும்கூட அதிக அலைச்சல் தேவைப்படும். கேதுவின் நிலையினால், மனைவியின் ஆரோக்கியம் பற்றி கவலை உண்டாகும். மனதில் நிம்மதி குறையும். சித்திரை 18-ம் தேதி குரு பகவான் திருதீய ஸ்தானமாகிய ரிஷபத்திற்கு மாறுவதால், குடும்பத்தில், செலவுகள் அதிகரிக்கும். விவாகம் சம்பந்தமான முயற்சிகளில், தடங்கல்களும், தாமதங்களும் ஏற்படும். ஜென்ம ராகுவினால், கற்பனையான கவலைகள் மனதை அரிக்கும். விவாகம் சம்பந்தமான விஷயங்களில், வரன் அமைவதில் தாமதமாகும்.

உத்தியோகம்: ஏழரைச் சனியின் தோஷத்துடன், ஜென்ம ராசியில் ராகுவும், நிலைகொண்டிருப்பதால், அலுவலகத்தில் பொறுப்புகள் சக்திக்கு மீறியதாக இருக்கும். இருப்பினும், கும்பம், சனியின் ஆட்சிவீடாக இருப்பதால், தோஷத்தின் கடுமை குறைகிறது. மேலும், குருவின் ஆட்சி ராசிகளில் ராகு மற்றும் கேதுவின் வீரியம் குறைகிறது எனக் கூறுகிறது, “ஜோதிட அலங்காரம்” எனும் மிகப் புராதனமான ஜோதிட கிரந்தம். மேலும், ராகுவினால் ஏற்படும் தோஷம், பரிகாரத்திற்கு உட்பட்டதேயாகும். வெளியூர்ப் பயணங்களின்போது, விழிப்புடன் இருப்பது அவசியம்.

தொழில், வியாபாரம்: தொழில் அபிவிருத்திக்காக அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்லவேண்டிய அவசியம் ஏற்படும். லாபம் உயரும். தொழிலாளர் பிரச்ைன, மற்றும் முலப் பொருட்களின் விலையுயர்வு, கூட்டாளிகளின் ஒற்றுமையின்மை ஆகியவை கவலையை அளிக்கும். நிதி நிறுவனங்களின் ஒத்துைழப்பு கிடைப்பது கடினம். விற்பனையை உயர்த்துவதற்காக, அடிக்கடி வெளிமாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும். சக்திக்கு மீறிய அலைச்சலால் உடல்நலன் பாதிக்கப்படும். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலிருந்து வரவேண்டிய பணம் தாமதமாகும். விற்பனை அபிவிருத்தித் திட்டங்களைத் தற்போதைக்கு ஒத்திவைப்பது நல்லது.

கலைத் துறையினர்: இம்மாதம் முழுவதும் கலைத்துறைக்கு சம்பந்தப்பட்ட அனைத்து கிரகங்களும் அனுகூலமாக இல்லை! கடினமாக உழைத்தும், பலன் குறைவாகவே இருக்கும். திரைப்படத் துறையினர், மேலும் பல பிரச்னைகளுக்கு ஆளாகக்கூடும். படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோருக்கு, பின்னடைவு ஏற்படும். மிகவும் கடினமான நிதி நிலைமையை இம்மாதம் நீங்கள் சமாளிக்க நேரிடும். நடிகர்கள், நடிகைகள் ஆகியோர் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைக் கண்டிப்பாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். உடல் நலனிலும் கவனமாக இருத்தல் நல்லது. கூடிய வரையில், இரவுநேரப் பயணங்களைத் தவிர்க்கவும்.

அரசியல்துறையினர்: இம்மாதம் முழுவதும் கிரக நிலைகள் ஓரளவே அனுகூலமாக உள்ளன. அதிக ஆர்வம் காரணமாக, பொது மேடைகளில் பேசும்போதும், உணர்ச்சிவசப்படாமல், நிதானமாகப் பேசுங்கள்! பிற கட்சியினரின் குற்றங்குறைகளைப் பற்றிக் கூறும்போது, வார்த்தைகளை அளந்து பேசுங்கள். ஏனெனில், நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக்ெகாள்ள வாய்ப்புகள் உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

மாணவ – மாணவியர்: சற்றுப் பாடுபட்டுப் படிக்கவேண்டியுள்ளது, இம்மாதம் முழுவதும்! சம்பந்தப்பட்ட கிரக நிலைகள் சுப பலம் பெற்றிருப்பதால், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும், ஏழரைச் சனியின் தோஷம் இருப்பதால், தவறான பழக்கங்கள் உள்ள மாணவர்களின் சேர்க்கை ஏற்படக்கூடும். தவிர்ப்பது மிக, மிக அவசியம். வாரத்தில், ஒருநாளாவது அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று தரிசிப்பதை வழக்கமாகக் கொள்ளுங்கள். ஜென்மச் சனி மற்றும், ராகுவினால் ஏற்படும் தோஷம் நீங்கிவிடும்.

விவசாயத் துறையினர்: ஜென்மச் சனியுடன் பூமி காரகரான செவ்வாயும் சேர்ந்திருப்பதால், வயல் பணிகளில் உழைப்பு கடினமாகும். இரவு நேரப் பணிகளில் விஷ ஜந்துக்களால், பாதிப்பு ஏற்படக்கூடும். சற்று எச்சரிக்கையாக இருந்தால் போதும். அண்டை நிலத்தாரோடு பகை வேண்டாம். சிறு பிரச்னையும், பெரிய சண்டையில் கொண்டுவிடக்கூடும் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. மனிதர்களுக்குக் கோபம் எத்தகைய விபரீத எதிரி என்பதை ஜோதிடக் கலை விவரித்துள்ளது. தற்போதுள்ள கிரக நிலைகள் சரியில்லாததால், இந்த அறிவுரையைக் கூறியுள்ளோம்!

பெண்மணிகள்: குறிப்பாக, கடின உழைப்பையும், தனியே வெளிச் செல்வதையும் தவிர்ப்பது மிகவும் அவசியம். ஜென்மச் சனியுடன், செவ்வாயும் சேர்ந்து, ராகுவினாலும், தோஷம் ஏற்பட்டுள்ளதால், நீங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். சிறு உடல் உபாதையானாலும், மருத்துவரிடம் காட்டி சரி செய்துகொள்ள வேண்டும். பரிகாரம், தோஷத்தைப் பெருமளவில் குறைக்கும்.

அறிவுரை: வெளியே செல்லும்போது, ஜாக்கிரதையாக இருங்கள். சிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.

பரிகாரம்: சனிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில், அருகிலுள்ள திருக்கோயில் சென்று, தீபத்தில் சிறிது நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து, தரிசித்துவிட்டு வரவும். ஈடிணையற்ற பரிகாரம் இது. ஒவ்வொரு திருக்கோயிலிலும், மூலவர் சந்நிதியில் சக்திவாய்ந்த யந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன பக்தர்களின் நன்மைக்காகவே!!
இயலாதவர்கள், “லிகித ஜபம்” ஆகப் போற்றிப் புகழப்படும், ராம ஜெயம் எனும் தாரக மந்திரத்தை புத்தகத்தில் எழுதி வரவும். அதிக சிரமமில்லாதது; அளப்பரிய புண்ணிய பலன்களை அளிக்க வல்லது.

அனுகூல தினங்கள்

சித்திரை: 1-3 , 7-9, 13-15, 20-22, 26-29.

சந்திராஷ்டம தினங்கள்

சித்திரை: 10 காலை முதல், 12 இரவு வரை.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us